என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலத்த மழை
    X
    பலத்த மழை

    பலத்த மழை

    வத்திராயிருப்பு பகுதியில் 3-வது நாளாக பலத்த மழை பெய்தது.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்தது. 

    இந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது நாளாக இடி-மின்னலுடன் கூடிய கனமழை மாலை நேரத்தில் பெய்ய தொடங்கியது. நேற்று மாலை 3.40 மணி அளவில் பெய்யத் தொடங்கிய சாரல் மழையானது சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்தமழையாக பெய்தது. 

    4 மணி நேரத்திற்கு மேலாக இரவு முழுவதும்  இந்த மழை நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

     சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலை பகுதியில் சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த தால் ஓடைகளில் நீர்வரத்து வரத் தொடங்கியது. இதேபோல் கான்சாபுரம் அத்தி கோவில் பகுதியில் கனமழை பெய்ததால் அத்திக் கோவில் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து தொடங்கியது. 

    2 நாட்களுக்கு முன் வத்திராயிருபபில் அதிகபட்சமாக 120 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் பெய்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையால் வத்திராயிருப்பில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.  மழை நீருடன் வாறுகால் கழிவுநீரும் சேர்ந்து ஓடிய தால் தெருக்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து ஆறாக ஓடியது. 

    வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள ரோட்டடித் தெருவில் சாலையில் மழை நீர் ஆறாக ஓடியது. இதே போல் அக்ரஹாரம் வடக்குத் தெருவில் மழைநீர் செல்ல வாறுகால் வசதி சரிவர இல்லாததால் குளம்போல் தேங்கி நின்றது. சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு  சிரமப்பட்டனர். 

    ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ரோட்டாடித்தெரு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது.  தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் தாழ்வாக இருப்பதால் மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடுவதால் சாலை களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமம் அடைந்தனர்.

    தாழ்வாக உள்ள கழிவுநீர் கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டுள்ளதால் மழை பெய்யும் காலங்களில் மழை நீர் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதால் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    பேரூராட்சி நிர்வாகம் பலஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர்க் கால்வாய்களை அகற்றிவிட்டு தற்போது புதிதாக கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

    சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது மாலையில் பெய்யும் பலத்த மழையால் பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்த தோடு மட்டுமல்லாமல் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நெல் விவசாயம் செய்து வரும் விவசாயிகளும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×