search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருக்கை வசதி
    X
    இருக்கை வசதி

    கடைகளில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி

    விருதுநகர் மாவட்டத்தில் கடைகளில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
    விருதுநகர்

    தமிழக முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம் 2021ன்படி கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்ட திருத்தம்   மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

    கடைகள் மற்றும் நிறு வனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தங்களது பணி நேரம் முழுவதிலும்  நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

    எனவே மேற்படி சட்டத் தின்படி அனைத்து கடைகள் மற்றும்  நிறுவனங்களில் பணிபுரியும்  அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுத்து சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்துமாறு  அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும்    கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி சட்ட திருத்தங்களை  கடைபிடிக்காத நிறுவன உரிமையாளர்கள் மீது 1947ம் வருட கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    மேலும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட வேண்டிய வேலை அமைப்பு பதிவேடு, சம்பள பதிவேடு, விடுப்பு வழங்கல் பதிவேடு ஆகிய வற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.  எனவே  திருத்தியமைக்கப்பட்ட பதிவேடுகளை  பராமரிக்குமாறு    கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    மேற்கண்ட  தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம் ) காளிதாஸ் தெரிவித்தார்.
    Next Story
    ×