என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிவகாசி பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    சிவகாசி:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையொட்டி நடைபெறும் பட்டாசு விற்பனை நலிவடைந்தது. இதனால் விருதுநகர் மாவட்டம சிவகாசியில் ஆண்டாண்டு காலமாக பட்டாசு உற்பத்தி செய்துவரும் உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மீண்டும் களை கட்டியது. கடந்த 7 மாதங்களாக உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் இரவு பகலாக ஈடுபட்டனர். அதிக அளவில் தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை கடந்த மாதத்துக்கு முன்பு தொடங்கியது. கடந்த சில நாட்களாக வியாபாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

    தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிவகாசி பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூல பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால் பட்டாசு விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையும் மீறி பட்டாசு விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது.

    நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி வருகின்றனர்.

    ஆன்லைன் உள்பட பல்வேறு ஆர்டர்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குதூகலம் அடைய செய்யும் என்பதால் பட்டாசுகளின் விலையை பற்றி கவலைப்படாமல் தங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல பொது மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    சில்லரை மற்றும் மொத்த பட்டாசு வியாபாரிகளும் சிவகாசியில் முகாமிட்டு உச்சக்கட்ட வியாபாரத்திற்காக இன்று அதிக அளவில் பட்டாசுகளை கொள்முதல் செய்தனர். 7 மாதங்களாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் போனஸ் பெற்றுக்கொண்டு தங்களது சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பஜார்களில் ஜவுளி மற்றும் இனிப்பு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • விவரங்கள் குறிப்பிடப்படாமல் பட்டாசு பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்த 42 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    விருதுநகர்

    சென்னை, முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆனையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.

    சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலப் பொருட்களின் மேல் பொருளின் பெயர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி நிகர எண்ணம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (வரிகள் உட்பட) பொட்டலமிட்ட தயாரித்த மாதம், வருடம், நுகர்வோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யவேண்டும்.

    அவ்வாறு சட்டவிதிகளி ன்படி பட்டாசு பொட்ட லங்களில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 42 வியாபாரிகளின் பட்டாசு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது.

    பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலப் பொருட்களின் மேல் உரிய விவரங்கள் குறிப்பிடப்படாத வணிகர்கள் மீது முதலாவது குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை குற்றத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு ரூ.1 லட்சம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    இந்த சோதனையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக ஆட்சி எல்லைக்கு உட்பட்ட விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் பாத்திமா, செல்வராஜ், தயாநிதி முருகன், சிவசங்கரி, துர்கா மற்றும் உமா மகேஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி , தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 28-ந் தேதி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    இந்த முகாமைகலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • இல்லம் தேடி கல்வி மையங்களில் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு நடந்தது.
    • மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கொத்தங்குளம் கிராமத்தில் நடந்தது.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார். கொத்தங்குளத்தில் செயல்படும் 6 இல்லம் தேடி கல்வி மையங்களின் மாணவர்களுக்கு தீபாவளிப் பண்டிகையின் போது எவ்வாறு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது? என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

    இதில் கொத்தங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 

    • 1243 துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு- புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமிராஜா திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியா ளரான தூய்மைப் பணியாளர்களை பாராட்டி கவுரவப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3-வது முறையாக ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள் 1243 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் தொற்று பரவாத வகையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடனும் சிறப்பாகவும் பணியாற்றிய முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் கோவில்கள் கூட மூடி இருந்தது. ஆனால் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் சிறப்பாக பணியாற்றி ராஜபாளையம் தொகுதியில் கொரோனா தாக்கத்தை குறைத்துள்ளீர்கள். உங்களை பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    இந்த நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம்ராஜா, தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா,(தெற்கு) ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 50 மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வரும் காலை உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.

    பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்தும், சமையலறை கூடத்திற்கு சென்று உணவு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ஜோகில்பட்டி கிராமத்தில் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இந்த திட்டத்தின் பயன்கள், மருத்துவர்களின் வருகை, சிகிச்சை முறை, மருந்துகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினர்.

    இரும்பு பெண்மணி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களின் இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்ய இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    காரியாபட்டி ஊராட்சி சுரபி உண்டு, உறைவிடப் பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள் மின்னணு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த பள்ளிக்கு மின்னணு தொலைக்காட்சியை வழங்கினார்கள்.

    மேலும் 50 மாணவர்க ளுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர், வளையங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரதமரின் சிறு, குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம்- 35 சதவீதம் மானியத்தில் பெறப்பட்ட கடனுதவி மூலம் செயல்பட்டு வரும் மோனா சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில், சிறுதானிய மற்றும் கேக் வகைகள் தயாரிக்கும் முறைகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    • கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன் (வயது 46). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. மற்றொரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை.

    இதற்கிடையே சந்தன மாரியப்பன் கடந்த 13 ஆண்டு காலமாக கண் பார்வை குறைபாட்டாலும் கை,கால் செயல்படாமல் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தார். பாண்டிசெல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சந்தனமாரியப்பன் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாண்டிச்செல்வியிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

    இதில் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கட்டையால் அடித்தேன், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறினார்.

    இதையடுத்து பாண்டிச்செல்வியை தளவாய்புரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர வேண்டும் .
    • 30-ம் தேதி மட்டும் சொந்த ஊர்களில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 115- வது தேவர் ஜெயந்தி மற்றும் 60-வது தேவர் குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார்.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தேவர் ஜெயந்தி, மற்றும் குருபூஜையை முன்னிட்டு அரசு அறிவுரைகளின் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்கள் வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள வழித் தடங்களில் செல்லக்கூடாது.

    இருசக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடை பயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்மந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தி செல்லக் கூடாது. வாகனத்தில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் ஆயுதங்கள், பட்டாசுகள், மது பாட்டில்கள் எடுத்துச் செல்வது, வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்வது போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

    வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    சொந்த ஊர்களில் 30-ம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எந்த வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெரு க்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. 30-ம் தேதி மட்டும் சொந்த ஊர்களில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில மட்டுமே செல்லவேண்டும்.

    ராஜபாளையம் -ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி-சாத்தூர்- விருதுநகர்-தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து பசும்பொன் செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை-காந்தி நகர்-ராமலிங்கா மில்-கல்லூரணி-எம்.ரெட்டியபட்டி-மண்டபசாலை-கமுதி விலக்கு (கானாவிலக்கு)-கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி-பாலையம்பட்டி பை-பாஸ்-காந்தி நகர்-ராமலிங்கா மில், கல்லூரணி-எம்.ரெட்டியபட்டி-மண்டபசாலை-கமுதி விலக்கு (கானாவிலக்கு) -கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    திருச்சுழியில் இருந்து வரும் வாகனங்கள் ராமலிங்கா மில், கல்லூரணி, கமுதி விலக்கு (கானாவிலக்கு), கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    நரிக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்பொழுது, பசும்பொன்-கோட்டை மேடு-நகரத்தார்குறிச்சி -அபிராமம் வழியாக பார்த்திபனூர்-பிடாரிசேரி-வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.

    தேவர் ஜெயந்தி விழாவிற்கு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கபுரம்-புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

    • சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென் மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.
    • இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான ஜோதி மணி (60), சங்கரபாண்டியன் (65)இருவரும் எம்.டி.ஆர்.நகர் 2-வது தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த 18.7.22 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

    இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத் தலைமையில் சிறப்பு படை நியமிக்கப்பட்டு இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    சம்பவம் நடந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த கொலை வழக்கில் ஜோதி புரம் 7-வது தெருவில் வசிக்கும் தனியார் மில் ஊழியர் சங்கர் (42), அவரது மனைவி பொன்மணி (35) ஆகியோரை கைது செய்தனர்.

    ஆசிரியர் தம்பதிகளை சங்கர் பணத்திற்காக கொலை செய்தார். இதற்கு அவரது மனைவி உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறப்பு காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத், காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் மற்றும் காவலர்களை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • ராஜபாளையத்தில் நடைமுறைக்கு வராத தாமிரபரணிகுடிநீர் திட்டத்துக்கு வரி வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்.
    • இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயவாளர் மாரியப்பன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

    தாமிரபரணி கூட்டு குடிநீர்த்திட்டப் பணிக்காக நகராட்சியின் பங்குத் தொகையாக ரூ.53 கோடியை நகராட்சியில் இருந்து ஈடு செய்வதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், மொத்த மதிப்பீட்டில் 20 சதவீதத்தை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனாக பெறுவதற்கு 11.7.2016-ம் தேதியன்று அ.தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

    அந்த தீர்மானத்தில், குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத் தொகைக்கான கட்டணத்தை மாற்றியமை த்தும் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி குடியிருப்புகளுக்கு 500 சதுரஅடி வரை மாதம் ரூ.50 என்பதை ரூ.150/- ஆகவும், அதற்கு மேல் சதுர அடிக்கு தகுந்தவாறு கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் அந்த தீர்மான த்தின் நிறைவாக திருத்தியமைக்கப்பட்ட கட்டண உயர்வு மற்றும் வைப்புத்தொகை திட்டம் பயனுக்கு வரும் நாள் முதல் நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் ராஜபாளை யம் நகராட்சியில் இன்னும் நிறைவடையவில்லை. பணிகள் நிறைவடையாமல் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்திருப்பதை யொட்டி மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் கட்டணத்தை 1.4.2022 முதல் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளது.

    இது குறித்து பொது மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் 21.7.2022-ம் தேதியன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், 500 சதுர அடிக்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.100 எனவும், அதற்குமேல் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.150 எனவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றியது.

    தி.மு.க தலைமையிலான நகர்மன்றம் குடிநீர் கட்டணத்தை மாற்றிய மைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், இதற்கு முன் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. நகர்மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1800 (இதுவரை ஆண்டுக்கு ரூ.600) வழங்க வேண்டுமென குறிப்பாணை வீடுதோறும் வழங்கி உள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே தாங்கள் தலையிட்டு தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் வரை உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெறிநாய் பொதுமக்களை துரத்தி சென்று கடித்தது.
    • இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருகிறது. சிலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது.

    தெருவில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் முதியவர்கள், பெண்களை விரட்டி கடிப்பதால் வெளியில் செல்லவே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சி தொகுதிகளில் தெருநாய்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நகராட்சி இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ராஜபாளையம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டத்தம்மன் கோவில் தெரு, மாப்பிள்ளை சுப்பையா தெரு ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெறிநாய் ஒன்று துரத்திச்சென்று கடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகள் குறித்து மகனிடம் கோவில் பிச்சை பேசியுள்ளார்.
    • மன வேதனையில் தவித்த உதயகுமார் இனிமேல் வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் கோவில் பிச்சை (வயது 51). இவரது மகன் தேவகுமார் (24). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகள் குறித்து மகனிடம் கோவில் பிச்சை பேசியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொண்டால் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறியுள்ளார். இதற்கு கோவில்பிச்சையும் சம்மதித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தேவகுமாருடன் அந்த பெண் பேசவில்லை. இதுகுறித்து தனது கவலையை அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஊருக்கு வருவதாகவும் தேவகுமார் கூறியுள்ளார்.

    அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த தேவகுமார் சம்பவத்தன்று காதலியை சந்தித்து பேசியதாக தெரிகிறது. அப்போது அவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் என கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் தவித்த உதயகுமார் இனிமேல் வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் பெட்ரோல் கேனுடன் நேற்று காதலியின் வீட்டிற்கு சென்றார். மகன் தற்கொலை செய்து கொள்ள செல்வதை அறிந்த அவரது பெற்றோர் உடனே அவரை தடுக்க சென்றனர். ஆனால் அதற்குள் தேவகுமார் காதலி வீட்டின் முன்பு பெற்றோரை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேவகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியில் என்ஜினீயர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×