search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவகாசியில் விறுவிறுப்பாக நடந்த பட்டாசு விற்பனை: உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள் மகிழ்ச்சி
    X

    பட்டாசு

    சிவகாசியில் விறுவிறுப்பாக நடந்த பட்டாசு விற்பனை: உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள் மகிழ்ச்சி

    • தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிவகாசி பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    சிவகாசி:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையொட்டி நடைபெறும் பட்டாசு விற்பனை நலிவடைந்தது. இதனால் விருதுநகர் மாவட்டம சிவகாசியில் ஆண்டாண்டு காலமாக பட்டாசு உற்பத்தி செய்துவரும் உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மீண்டும் களை கட்டியது. கடந்த 7 மாதங்களாக உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் இரவு பகலாக ஈடுபட்டனர். அதிக அளவில் தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை கடந்த மாதத்துக்கு முன்பு தொடங்கியது. கடந்த சில நாட்களாக வியாபாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

    தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிவகாசி பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூல பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால் பட்டாசு விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையும் மீறி பட்டாசு விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது.

    நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி வருகின்றனர்.

    ஆன்லைன் உள்பட பல்வேறு ஆர்டர்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குதூகலம் அடைய செய்யும் என்பதால் பட்டாசுகளின் விலையை பற்றி கவலைப்படாமல் தங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல பொது மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    சில்லரை மற்றும் மொத்த பட்டாசு வியாபாரிகளும் சிவகாசியில் முகாமிட்டு உச்சக்கட்ட வியாபாரத்திற்காக இன்று அதிக அளவில் பட்டாசுகளை கொள்முதல் செய்தனர். 7 மாதங்களாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் போனஸ் பெற்றுக்கொண்டு தங்களது சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பஜார்களில் ஜவுளி மற்றும் இனிப்பு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    Next Story
    ×