என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மல்லாங்கிணறு பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நபார்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மல்லாங்கி ணறு- அயன்ரெட்டி யாபட்டி தார்சாலை பணிகள், ரூ.62.40 லட்சம் மதிப்பில் பலவேலைக்காரர் தெரு முதல் கோவில்பட்டி சாலை வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகள், அம்ரூத் 2.0 திட்டம் மூலம் ரூ.82.30 லட்சம் மதிப்பில் நடைபெறும் சின்னக்குளம் ஊரணி பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், கழிவுநீர் மேலாண்மை பணிகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது. பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூ ராட்சிகள்) சேதுராமன், மல்லாங்கிணர் பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2-வது திருமணம் செய்து வைக்க வற்புறுத்தி தாயை மகன் கத்தியால் குத்தினார்.
    • மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே பந்தநேந்தலை சேர்ந்தவர் தவமணி. இவரது மனைவி லட்சுமி(வயது55). இவர்க ளுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீதாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    2 வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே சீதாலட்சுமி பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் குழந்தைகள் கார்த்திக்கின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் 2-வது திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று தாயிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பெண் பார்ப்ப தாக தாய் கூறியுள்ளார். ஆனால் உடனடியாக பெண் பார்க்க வேண்டும் என கார்த்திக் வற்புறுத்தி உள்ளார். அப்ேபாது பொறுமையாக இருக்குமாறு தாய் கூறியுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார்.

    அதை பார்த்து தடுக்க வந்த தந்தையையும் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் காயமடைந்த லட்சுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    • புகார் தெரிவிக்க புதிய உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • பொதுமக்கள் எளிதில் நினைவில் கொள்ள புதிய நம்பர் 15 52 14 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைதொழி லாளர்களை எவ்வித பணிக ளிலும், அபாய கரமான தொழில்களில் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணியமர்த்துவதும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986-ன் படி தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    அவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் தமது குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச்சட்டம் 1976-ன் படி ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும்.

    குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்க மற்றும் புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் 1800 42 52 650 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக பொதுமக்கள் எளிதில் நினைவில் கொள்ள புதிய நம்பர் 15 52 14 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

    ஆகவே குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து புகார் தெரிவிக்க மேற்கண்ட உதவி எண்களை பொது மக்கள் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள், பனை தொழிலாளர்கள் பயன்பெறலாம்.
    • tnhorticulture.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்தோ பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பனைமரங்கள் வளர்ப்ப தற்கு ஏற்ற மண் வளமும், காலநிலையும் உள்ளது. பனைமரத்தின் பரப்பினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் நடவு செய்து பயன்பெறலாம். இதற்காக தமிழ்நாடு பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் தோட்டக் கலை துறை மூலம் 48 ஆயிரம் பனை விதைகளும், 250 பனை கன்றுகளும் முழு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    பனைமரம் வைத்தி ருக்கும் விவசாயிகளில் தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு பனை பொருட்கள் தயாரிக்கும் கூடாரம் அமைப்பதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    பனைமரம் ஏறுவதற்கான உரிமம் வைத்துள்ள பனை தொழிலாளர்களுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட உள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த தொழிலாளர்கள், இத்திட்டத்தில் பயன்பெற அருகில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, உழவன் செயலி, tnhorticulture.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்தோ பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் உரங்கள்- இடுபொருட்கள் வழங்கப்படும்.
    • வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருச்சுழி

    நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மின்விசை தெளிப்பான், தார்பாய் உள்பட 5 வகையான விவசாய பண்ணை கருவி கள் அடங்கிய தொகுப்பு மானிய விலை யில் வழங்கப்பட உள்ளது.

    மேலும் நரிக்குடி வட்டார விவசாயிகளுக்கு நெல் மற்றும் நிலக்கடலை விதைகள், ஜிப்சம், உயிர் உரங்களான ஜிங்க் சல்பேட் உரங்கள் ஆகியவையும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.ஆகவே நரிக்குடி வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதார் கார்டு நகல், பட்டா நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொடுத்து உரங்கள், பண்ணைக் கருவிகளை வாங்கி பயன் பெறலாம்.

    மேலும் விபரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கு எம்.பி. விருது வழங்கினார்.
    • அரசு புதிய மருத்துவமனையில் மாணிக்கம் தாகூர்‌ எம்.பி ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சாத்தூர் பெரியார் நகரில் அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற சாத்தூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    அதை தொடர்ந்து சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு புதிய மருத்துவமனையில் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆய்வு செய்தார். உடன் சாத்தூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் தலைவர் நிர்மலா, சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம், சின்னக்காமன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(31), ஒர்்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்தது. இதனை கைவிட முடியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பற்றிவிட்டனர். இந்த நிலையில் நேற்று மனைவி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீடு பூட்டி இருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்காததால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது சேலையில் தூக்குப்போட்டு இருந்தார். அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணாதுரையின் உறவினர் கலைச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் தளவாய்புரம்

    சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும், காவல் ஆணைய உறுப்பினருமான முன்னாள் டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    அப்போது அவர் பேசுகையில், 'பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து படிப்புகளுக்குமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயருகின்றனர். வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதே இடத்திலேயே நின்று விடுகின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன், நத்தம்பட்டி சார்பு ஆய்வாளர் பண்டிலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருவிழாவில் மோதலில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் எஸ்.ராமலிங்கபுரம், சிவகாமிபுரம் வடக்கு தெரு வடக்கத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சாரதாதேவி(29), அவரது கணவர் ஜெயபிரகாஷ்(35) உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது சிவக்குமார் என்பவர் குடிபோதையில் பெண்கள் நிற்கும் பகுதிக்கு தள்ளாடிக்கொண்டு வந்தார். இதை கண்ட ஜெயபிரகாஷ் பெண்கள் நிற்கும் பகுதிக்கு ஏன் மதுபோதையில் வந்தார்? என கேட்டதற்கு, அவர் மற்றும் அவரது மனைவியை சிவக்குமார் தாக்கியுள்ளார். மேலும் சாரதா தேவியின் சேலையை பிடித்து இழுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சாரதா உறவினர்கள் சிவக்குமாரை தாக்கினர். இதுகுறித்து இருதரப்பினரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெகட்ர் சார்லஸ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கடையில் அனுமதியின்றி மது விற்பதாக சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சட்டவிரோத மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், 36 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் சுருளி. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அனுமதியின்றி மது விற்பதாக சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த கடைக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுருளியின் மனைவி தெய்வத்தாய் மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

    உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் அவர்களை கையும் களவுமாக பிடித்தார். அப்போது அங்கு வந்த சுருளி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சுருளி, தெய்வத்தாய் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கணவன்-மனைவியை தேடி வருகின்றனர். இதற்கிடையில் சட்டவிரோத மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், 36 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் நடை பெற்ற பல்வேறு நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    2021-ம் ஆண்டு நடை பெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுத் தும் அண்ணாமலையால் வெற்றி பெற முடியவில்லை. அவரை செந்தில்பாலாஜி தோற்கடித்தார். அதன் காரணத்தால் தான் தற்போது செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்.

    செந்தில்பாலாஜி கைதுக்கு முழு காரணம் அமித்ஷாவும், அண்ணா மலையும் தான். ஓடிசா விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி வைக்கும் பட்சத்தில் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக அண்ணாமலை நீடித்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூ னிஸ்டு கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை எளிதாக கைப்பற்றும்.

    மதுரை எய்ம்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதாகவும், அதில் மாணவர்கள் படித்து வருவதாகவும் அமித்ஷா கூறியது மிகப்பெரிய பொய். நானும், மதுரை எம்.பி. வெங்கடேசும் சேர்ந்து எய்ம்சை தேடினோம் என் பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை. இன்னும் டெண்டர் நிலையை கூட எட்டவில்லை என்பது தான் உண்மை. தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என்று அமித்ஷா பேசியதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் வழக்க மாக பேசுவது போல் இதுவும் பொய்யே. பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் 10 மாதங்களில் புதிய அரசு அமைந்தவுடன் தீர்க்கப் படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின் போது சிவகாசி மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர்கள் ரவிசங்கர், கணேசன், நியாஸ், ஷேக் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தேசிய தரவரிசை பட்டியலில் கலசலிங்கம் பல்கலைகழகத்துக்கு 29-வது இடம் வகிக்கிறது.
    • பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    புதுடெல்லி கல்வி அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான பல்கலை கழகங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகம் 29-வது இடம் பிடித்துள்ளது.

    மேலும் கல்வி அமைச்சகத்தின் தகவல்படி தேசிய பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 36-வது இடத்தையும், தேசிய அளவிலான அனைத்து பிரிவு கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் 48-வது இடத்தையும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தா் ஸ்ரீதரன், இணை வேந்தா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் சசிஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் மற்றும் பதிவாளா் ஆகியோர் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.

    ×