என் மலர்
விழுப்புரம்
- வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்
- குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்மலையனூர் வட்டா ரத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வளத்தி யில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிழ்ச்சிக்கு மேல்மலை யனூர் ஒன்றிய குழு தலை வர் கண்மணி நெடுஞ்செழி யன் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயனா வரவேற்றார்.
இவ்விழாவில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்க ளுக்கு சீர்வரிசை பொருட்க ளை வழங்கி சிறப்புரையாற்றி னார்.தொடர்ந்து வளத்தி ஆரம்ப சுகாதார நிலை யத்தின் சார்பில் ஊட்டச் சத்துடன் கூடிய தொகுப்பி னை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். முன்னதாக ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்கான கண்காட்சியினைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் விஜய லட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராம சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கள், சரவண குமார், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.
- நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
- ரோசாலியோ வில்லியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் அனை யேரி ஊராட்சியில் உள்ள சாலையை தரம் உயர்த்தி தார் சாலையாக அமைப்ப தற்கும் பூமி பூஜை விழா அனையேரி பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அனையேரி ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஜெய பாலன், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர் கிருஷ்ணகுமார் ஒன்றிய செயலாளர் விஜய ராகவன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய துணைச் செய லாளர்கள் குமார், தாட்சி யாணிகார்த்திகேயன் ஆவின் இயக்குனர் மாத்தூர் தாஸ் நிர்வாகிகள் எட்டி யான், தக்ஷிணாமூர்த்தி பாண்டுரங்கன், ரோசாலியோ வில்லியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
- இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விழுப்புரம், அக்.21-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ ,மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற மற்ற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு கல்லுரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை யோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லுள்ள மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீசிவலோகநாதர், செல்வாம்பிகையை தரிசித்த கவர்னர் ஆர்.என்.ரவி, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.
- கவர்னர் ஆர்.என். ரவியிடம் தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜா கல்வெட்டுகள் குறித்து எடுத்துரைத்தார்.
திருவெண்ணெய்நல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செல்வாம்பிகை உடனுறை ஸ்ரீ சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும்.
இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் கி.பி.943-ல் வெள்ளாங்குமரன் மன்னரால் கருங்கல்லால் கட்டப்பட்டதாகும்.
மேலும், வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற் றுப்பை (பொக்களம்) தந்தார். இதனால் இங்குள்ள கல்வெட்டில் பொக்களம் கொடுத்த நாயனார் என்றும் ஆற்றுத்தளி பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றார்.
இந்த கோவிலின் தொன்மை விளக்கும் செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன. தொன்மைக்கும் பழமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற இக்கோவிலை காண்பதற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை 11.05 மணிக்கு கோவிலுக்கு வந்தார்.
ஸ்ரீசிவலோகநாதர், செல்வாம்பிகையை தரிசித்த கவர்னர் ஆர்.என்.ரவி, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது கோவில் பிரகார கருங்கல் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அவரிடம் தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜா கல்வெட்டுகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீசாரும் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- சம்பவத்தன்று ராஜனின் மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.
- வயதான 2 பேரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் கே.எம்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 68). இவரது மனைவி உமாதேவி (65) இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
இவர்களது மகன் சோழனுக்கு திருமணமாகி பெங்களூருவிலும், மகள் பத்மா திருமணம் ஆகி புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர். தற்போது வளவனூரில் உள்ள வீட்டில் வயதான தம்பதி மட்டும் வசித்து வந்தனர். இதனிடையே சம்பவத்தன்று ராஜனின் மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.
நீண்ட நேரமாக போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது ராஜன்-உமாதேவி ஆகியோர் தனித்தனி அறைகளில் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பத்மாவிடமும், அருகில் உள்ள வளவனூர் போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்ளிட்டவர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
ராஜன், உமாதேவி 2 பேரும் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர்கள் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று காலை வழக்கம் போல் 2 பேரும் வெளியில் சென்று விட்டு மாலை 3 மணிக்கு வீட்டு சென்றுள்ளனர். வீட்டில் வேலை செய்த பெண்ணும் தனது பணியை முடித்து விட்டு சென்றுள்ளார்.
அதன் பிறகு 2 பேரும் வெளியே வரவில்லை. 5 மணிக்கு பால்காரர் அவர்களை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் அவர் சென்று விட்டார். அதன்பிறகுதான் மகள் பத்மா, பெற்றோருக்கு நீண்டநேரமாக போன் செய்யவே 2 பேரின் போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அருகிலிருந்தவர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியபோதுதான் 2 பேரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
வயதான 2 பேரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியொருவனாக வந்திருக்கலாம் என்றும், அவர்களை கொலை செய்து விட்டு அங்கிருந்த 4 அரை பவுன் நகை, செல்போன்களை திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராஜன் மகள் பத்மா அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். குற்றவாளியை கண்டு பிடிக்க டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளிலும் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் சிக்னல்களை கொண்டு புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நகைக்காக இந்த கொடூர கொலையை அரங்கேற்றிய குற்றவாளியை சுட்டு பிடிக்கும் வகையிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
- பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி சரியான வழிகாட்டுதலுடன் பயிற்றுவிக்க வேண்டும்.
- மகாலட்சுமி, தலைமையாசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது, நடப்பாண்டு காலாண்டு தேர்ச்சி விகிதம் குறித்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களு டான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர், கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மேம்படுவதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்களின் காலாண்டு தேர்வின் தேர்ச்சி விகிதம் குறித்து ஒவ்வொரு தலைமையாசிரியர்களுடன் இன்றைய தினம் விரிவாக கேட்டறியப்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மொழிப்பாடங்கள் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி சரியான வழிகாட்டுதலுடன் பயிற்றுவிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், வாராந்திர தேர்வுகள் போன்ற தவறாமல் பள்ளிகளில் நடத்திட வேண்டும். 2023-2024 ஆம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் முதன்மை மாவட்டமாகத் திகழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவசுப்பிரமணியம், மகாலட்சுமி, தலைமையாசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
- இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வளவனூர் கே.எம்.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 68), இவரது மனைவி உமாதேவி (61). இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் மகன், மகள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ராஜன், உமாதேவி தம்பதியினர் நேற்று மாலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவி ல்லை. இவர்களை தேடி அக்கம்ப க்கத்தினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது ராஜன், உமாதேவி ஆகியோர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்களின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதில் இவர்களுக்கு சொந்தமான நகைகள், பணம் அனைத்தும் வங்கி லாக்கரிலும், கணக்கிலும் உள்ளது தெரியவந்தது.
மேலும், குடும்ப செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அதேநேரத்தில் இவர்களது வீட்டில் வாடகைக்கு இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியிடமிருந்து ரூ.21 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தம்பதி யினர் தாங்களாகவே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என மருத்துவர்கள் போலீ சாரிடம் கூறி யுள்ளனர். அதே நேரத்தில் பிரேத பரி சோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாக கூற முடியுமெனவும் மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த ராஜன், உமாதேவி தம்பதியினரை பணத்திற்காக யாரேனும் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பகையால் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற மற்றொரு கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேரை கொலை செய்து தூக்கில் தொங்க விட ஒருவரால் மட்டும் முடியாது. எனவே, 3 அல்லது 4 நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று கணித்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், செல்போன் சிக்னல்கள் போன்றவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அப்போது தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த கவுதம், கோபியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தார்.
- உயிருக்க ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் கவுதம் (வயது 25). வெல்டிங் பணி செய்து வருகிறார். இவர் மொரட்டாண்டியில் வசிக்கும் சசிகலாவின் மகளான சுவேதாவை திருமணம் செய்து கொண்டார். இவர் மொரட்டாண்டியில் வீடு வாடகை எடுத்து தனியாக வசித்து வந்தார். சுவேதாவின் தந்தை மணி இறந்து போனதால் சசிகலா தனியாக வசித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் கோபி (22). இவருக்கும் சசிகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சசிகலாவின் வீட்டிற்கு கோபி அடிக்கடி வந்து சென்றுள்ளார். இருவரும் அடிக்கடியே தனியே சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இத்தகவல் அறிந்த கவுதம், தனது மாமியாரான சசிகலாவை கண்டித்துள்ளார். அதேபோல கோபியையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத, சசிகலாவும், கோபியும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்தனர். நேற்று மதியமும் இருவரும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபி வீட்டிற்கு சென்றார். கோபியை அழைத்து மீண்டும் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த கவுதம், கோபியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டையில் பிளவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கோபி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு கவுதம் அங்கிருந்து தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் கோபியை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 30 தையல் போடப்பட்டு உயிருக்க ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அறிந்த கவுதம், புதுவை மாநிலம், ஜிப்மரில் உள்ள தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். நடந்த சம்பவத்தை கூறி சுத்தியலை ஓப்படைத்து போலீசாரிடம் சரணடைந்தார். இது குறித்து அவர்கள் வானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வானூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தன்வந்திரிநகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். புதுவை போலீசார் அவர்களிடம் கவுதமை ஓப்படைத்தனர். அவரை வானூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மாமியாருடன் பழகி வந்த வாலிபரை ஜெயிலர் பட வில்லன் பாணியில் சுத்தியால் அடித்து கொலை செய்ய மருமகன் முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
- ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று அமைச்சர் பொன்முடி முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும் என பேசினார்.
இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, தி.மு.க நகர செயலாளர் பூக்கடைகணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி துணைதலைவர் ஜோதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ், தலைமை கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுராமன் சிறுமதுரைசெல்வம் ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார்.
- விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விழுப்புரம்:
சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு விரைவு பஸ் சென்றுகொண்டிருந்தது.பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார். நேற்று இரவு விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது .
இதில் பஸ்சின்முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இதில் பஸ் டிரைவர் வெங்கடாஜலபதி ,பயணிகள் மணிவேல் (31) , காமேஸ்வரி (36) திண்டுக்கல் திருஞான அருள், (63) சீர்காழி பாஸ்கர் (72) நந்தவனபட்டி காசிநாதன் (40) உள்பட 6 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சுங்கச்சா வடி விபத்து சேப்டி வேன் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் பட்டவர்களை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.
- 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் வாய்க்கால் வழியாக வந்து ஏரி நிரம்பியது. இதனால் தி.மழவராயனூர் கிராம விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் பொன்முடி, ஏமப்பூர் ஏரி நீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு பின் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, நீர்வள த்துறை செயற்பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரி கள், விவசாயிகளிடம் ஆலோ சனை நடத்தினார். அதன் பிறகு விவசாய பயிர்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அப்போது அவருடன் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.புகழேந்தி, செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர், அய்யப்பன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், தி.மு.க.ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான விசுவநாதன், ஒன்றிய குழுதலைவர் ஓம்சிவ சக்திவேல், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநி பக்தவச்சலு, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிமோகன்ராஜ், தேவிசெந்தில், தி.மு.க.நகர செயலாளர் பூக்கடை கணேசன்,பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி, ஆவின் இயக்குனர் விஜயபா பு,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ்,மாவட்ட மருத்துவர் அணி அமை ப்பாளர் காவியவேந்தன், சிறுமதுரை செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
- மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட காஜி நியமனம் செய்யப்பட உள்ளது. காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவ னத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோ ர்கள் மேற்கண்ட தகுதியுடை வர்களாக இருப்பின் விண்ண ப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 30.11.2023-க்குள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.






