என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • துரை அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.
    • 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. விவசாயி, இவர் அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார். நேற்று மாலை மின் கசிவு காரணமாக இவரது கரும்பு தோட்டம், திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது. மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மயில் வடிவிலான மலையில் அமைந்தபடி முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. முக்கிய விழாவான சூரசம்கார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து மாலை 7 மணி அளவில் ஸ்ரீ பால சித்தர் சன்னதியில் ஆறுமுக கடவுள் வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட கலெக்டர் பழனி, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, மயிலம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர், செழியன், மாவட்ட பொருளாளர் ரவி, விவசாய அணி துணை தலைவர் நெடி சுப்பரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதினம் 20 ஆம் சிவஞான பாலசுவாமிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது.
    • இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் நாளை ஆர். எஸ் .எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டி வனத்தில் ஆர். எஸ். எஸ். ஊர்வலம் திண்டி வனம் செஞ்சி ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டு திண்டி வனம் நேருவீதி, வேதங்கர் வீதி, ஆர். எஸ். பிள்ளை வீதி,பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது. ஊர்வலம் வரும் பகுதி, நேரு வீதி, காந்தி சிலை, போன்ற 23 இடங்களில் தற்காலிகமாக கேமிராக்க ளை அமைத்து போலீசார் விடிய விடிய தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தற்காலிக மாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் திண்டிவனம் முழுவதும் வாகன தணிக்கை யிலும் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வரு கின்றனர்.திண்டிவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு வதாக போலீசார் வட்டா ரத்தில் தெரிவித்தனர். மேலும்கிறிஸ்தவ தேவா லயம், மசூதி, திராவிட கழக அலுவலகம் ஆகிய இடங்க ளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    விழுப்பரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள டி. கொளத்தூரை சேர்ந்தவர் முருகன். விவசாயி.இவரது உறவினர் நாராயணன் (40). இருவரது வீடும் அருகருகே உள்ளது. இவர்கள் இருவருக்கும் வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. முருகன் வீட்டில் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் மனைவி மான்விழி வீட்டின் வெளியே வந்து திட்டியதாக கூறப்படுகிறது.அப்போது அங்கு வந்த நாராயணன் எங்கள் வீட்டை பார்த்து ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் முருகன், அவரது மனைவி மான்விழி, நாராயணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    இது முருகன் அளித்த புகாரின் பேரில நாராயணன், வீரன், பிரபு (32)மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாராயணன் அளித்த புகாரின் பேரில் முருகன், மான்விழி ஆகியோர் மீது திருவெண்ணை நல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்தார். இதில் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

    வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீதும், திருடுபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓட்டை, வி. புதுப்பாக்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயப் பகுதியாகும். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக இங்குள்ள வயல் வெளிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் அமர்ந்து குடிப்பதும், கஞ்சா அடிப்பதும் தொடர் நிகழ்வாக உள்ளது.தாங்கள் பயன்படுத்திய பொரு ட்களை அப்புற ப்படுத்துவது கூட கிடையாது. ஒரு சிலர் மது பாட்டீல்களை நடைபாதையிலேயே உடை த்துவிட்டு செல்கின்றனர். மேலும், அந்த மர்மநபர்கள் வயல்வெளிகளில் உள்ள பல்வேறு பொருட்களை திருடிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மறுநாள் காலையில் வயல்வெளிக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தில் செந்தில், ராஜசேகர் ஆகியோர் அவரவர் வயல்வெளிக்கு இன்று காலை சென்றனர். நெற்பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் கொட்டகைக்கு சென்று, ஸ்டார்ட்டரை இயக்கினர். ஸ்டார்ட்டர் மட்டும் இயங்கியது. மோட்டார் ஓடவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மோட்டாரை நிறுத்திவிட்டு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது மோட்டார் கொட்டகை அருகில் ஒரு சிலர் அமர்ந்து மது அறுந்தியதும், அவர்கள் மோட்டார் கொட்டகையில் இருந்து போர்வெல்லுக்கு செல்லும் வயரினை அறுத்து சென்றதும் தெரியவந்தது. மது அருந்திய மர்மநபர்கள் கஞ்சா புகைத்ததற்காக அறிகுறிகளும் இருந்தன.ஸ்டார்ட்டரில் இருந்து போர்வெல்லுக்கு செல்லும் மின் ஓயரில் ஓட்டுக்கள் இருக்ககூடாது. அவ்வாறு இருந்தால் மோட்டார் பழுதாகி விடும். இதனால் விலைஉயர்ந்த ஓயர்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்துவார்கள். மேலும், தற்போது புதிய மின் ஓயரினை மாற்ற வேண்டுமெனில் மோட்டாரை வெளியில் தூக்க வேண்டும். இதற்கு ரூ.6 ஆயிரம் வரை செலவாகும்.

    மேலும், புதிய மின் ஓயர் வாங்க ரூ.10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை செலவாகும். பின்னர் எலக்ட்ரிசீயன் சம்பளம் என மொத்தத்தில் ரூ.25 ஆயிரம் வரை பண விரயம் ஏற்படுமென விவசாயிகள் வேதனையுடன் கூறினர். இதனை கருத்தில் கொண்டு போலீசார் கிராமப்பகுதிகளிலும், குறிப்பாக வயல்வெளி செல்லும் சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீதும், திருடுபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓட்டை, வி. புதுப்பாக்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் திருமணத்திற்கான அனைத்து செலவுகளும் கோவிலில் சார்பில் செய்யப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமண நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி செஞ்சியை அருகே சிங்கவரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள கோனை கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி-தேவகி ஆகியோர் திருமணம் நடைபெற்றது.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் திருமணத்திற்கான அனைத்து செலவுகளும் கோவிலில் சார்பில் செய்யப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் மணமக்களுக்கு ரூ.50ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை உதவி ஆணையர் ஜீவானந்தம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் இளங்கீர்த்தி செய்திருந்தார்.

    • கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பழுது நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கத்தேரை இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2010-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக தங்கத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு சிறு பழுது காரணமாக தங்கத்தேர் பவனி நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களில் ஓடாமல் இருக்கும் தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர் ஆகியவற்றை பழுது நீக்கி சாமிகள் பவனி வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்படி ராமேஸ்வரம், சமயபுரம் மாரியம்மன், திருத்தணி முருகன் கோவில்களில் ஓடாமல் இருந்த தங்கத்தேர் பழுது நீக்கி, பக்தர்களின் நேர்த்திக் கடன் செலுத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

    கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என கூறுகிறார்கள். இது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது. இது திராவிட மண். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. ஆட்சி அமையும் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

    குடியிறுப்புகள் நிறைந்த பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பெரி யார்நகரை சேர்ந்தவர் ஜம்பு (என்கிற) ஜம்புலிங்கம் (வயது 50). இவர் ரெயில்வேயில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சியில் நடைபெறும் பயிற்சிக்காக சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழைந்தைகள் விழுப்புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். வீட்டின் மேல்புறம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று இரவு ஜம்புலிங்கத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் வந்த மர்மநபர்கள் கடப்பாறையினால் கதவை உடைத்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

    இது குறித்து விழுப்புரம் நகர போலீசாரிடம் இன்று காலை புகாரளித்தனர். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும், மோப்பநாயும் வர வழைக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவு, பீரோவில் இருந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி களில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குடியிறுப்புகள் நிறைந்த பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாலை 1 மணி அளவில் பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு திருநெல்வேலிக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் சென்னையில் இருந்து பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    அதிகாலை 1 மணி அளவில் இந்த பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் குடித்துவிட்டு பஸ்சில் ஏறி வந்து கொண்டிருந்தனர். தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை 11 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் மட்டும் பெண் மீது தவறான கண்ணோட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    அந்தப் பெண் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கவே அவரது உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் பஸ் நிற்காமல் செல்லவே ஆத்திரமடைந்த உறவினர்கள் சினிமா பட பாணியில் பஸ்சை இரு சக்கர வாகனம் மூலம் 8 கிலோமீட்டர் துரத்தி விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தில் மடக்கினர். அதில் இருந்த 11 பேர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து அந்த பஸ் மற்றும் அதிலிருந்த அனைவரையும் விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற பயணிகளையும் பஸ்சையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. இதில் கிளியனூர் அருகேயுள்ள கூத்தப்பாக்கம் பள்ளி தெருவில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது இன்று காலையில் விழுந்தது.

    கான்கீரிட் வீடு என்ப தால் வீட்டிற்குள் வசித்த செல்வி (வயது 38) மற்றும் குடும்பத்தார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி னர். அதேசமயம் வீட்டின் மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், மரங்களின் கிளை கள் முறிந்து விழுந்ததில் பக்கத்தில் இருந்த 2 வீடுகளின் கழிப்பறைகள் சேத மடைந்தது.

    அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2016-22 வரை வழங்கப் பட்ட 2862 வீடுகளை கட்டி முடிக்காதவர்களுக்கு ஆலங் குப்பம் சமுதாயக் கூடத்திலும், ஏனாதிமங்க லம் ஊராட்சி சேவைமைய கட்டிடத்திலும், அரும் பட்டு சமத்துபுரம் சமுதாயக் கூடத்திலும், மணக்குப்பம் விஜய் திருமணமண்ட பத்தி லும் அண்டராய நல்லூர் அஞ்சுகம் திருமண மண்ட பத்திலும் முகாம் நடை பெற்றது.

    அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சிமெண்ட் கம்பி பணம் முறையாக வழங்கப்படுகின்றதா எனவும் வீடு கட்டுவதற்கு சிரமங்கள் இருந்தால் தீர்ப்பதாகவும் வருகிற 31.12. 2023-க்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் வீடுகளை கட்டி முடிப்பவர்கள் வீடுகளுக்கு தான் வருவதாகவும் கூறினார்.அவருடன் திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் (வட்டார ஊராட்சி) கேசவலு (வட்டார ஊராட்சி) விஜயபாலன்(கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் ராஜன், ஒன்றிய பொறி யாளர் ரங்கபாஷியம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்
    • வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (24)ஸ்வீட் மாஸ்டர் . இவர் கடந்த மாதம் 30 -ந்தேதி வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக சென்ற அவர் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போது செல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததது. இதனால் அவரது தந்தை அருண் வேலை செய்த இடம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அவரை காணவில்லை என அவரது தந்தை மோசஸ் வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 30 -ந்தேதி இரவு புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் ஏரிக்கரை வேப்ப மரத்தில் அழுகிய நிலையில் உடலில் பல்வேறு இடங்களில்ெவடடு காயங்களுடன் அருண் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற ரோசனை போலீசார் அருண் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருண் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது முன் விரோதம் காரணமாக யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×