என் மலர்
வேலூர்
வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரம், சீத்தப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊருக்கு அருகே உள்ள குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பூதிப்புரம், சீத்தப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரம், சீத்தப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊருக்கு அருகே உள்ள குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பூதிப்புரம், சீத்தப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அருகே வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் பலியானார்.
பனப்பாக்கம்:
காஞ்சீபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 53). இவர் வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் லைன்மேனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஓச்சேரி செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டின் மாடியில் பழுது ஏற்பட்டு இருந்த தொலைபேசி தொடர்பை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே விழுந்தார்.
இந்த சம்பவத்தை அருகே உள்ள பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக இதுகுறித்து வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியரிடம் கூறினர். பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தபோது வடிவேலு தொலை தொடர்பு பழுது பார்க்கும் கருவியை கையில் வைத்தபடியே மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நெமிலி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த வடிவேலுக்கு ஷியாமளா என்ற மனைவியும், தரணி, பொற்கொடி, ஜெயக்கொடி, வேண்டா என்ற மகள்களும் உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 53). இவர் வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் லைன்மேனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஓச்சேரி செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டின் மாடியில் பழுது ஏற்பட்டு இருந்த தொலைபேசி தொடர்பை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே விழுந்தார்.
இந்த சம்பவத்தை அருகே உள்ள பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக இதுகுறித்து வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியரிடம் கூறினர். பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தபோது வடிவேலு தொலை தொடர்பு பழுது பார்க்கும் கருவியை கையில் வைத்தபடியே மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நெமிலி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த வடிவேலுக்கு ஷியாமளா என்ற மனைவியும், தரணி, பொற்கொடி, ஜெயக்கொடி, வேண்டா என்ற மகள்களும் உள்ளனர்.
தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
வாணியம்பாடி:
தென் பெண்ணை- பாலாற்றை இணைக்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாநாடு வாணியம்பாடியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் தனபால் தலைமை வகித்தார். இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு, தென் பெண்ணையும், பாலாற்றையும் இணைப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
கூட்டத்தில் வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜீவாதாரமான தண்ணீரில் முக்கிய பங்கு வகிப்பது பாலாறு. இதன் நீர், 5 மாவட்டங்களில் குடிநீர், விவசாயம், ஆலை பணிக்கு பயன்படுகிறது. ஆனால் தற்போது பாலாற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் உள்ளது. எனவே தென் பெண்ணையுடன் பாலாற்றை இணைக்க கோரினோம். தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் கடலில் வீணாக தென் பெண்ணை நீர் கலக்கிறது. இத்திட்டத்தை அரசு செயல்படுத்திருந்தால் பாலாற்றில் தண்ணீர் இருந்திருக்கும். தண்ணீர் பஞ்சமும் தீர்ந்திருக்கும். வேலூர் மாவட்டத்தில் 39 லட்சம் மக்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 லட்சம் மக்களும், காஞ்சிபுரத்தில் 39 லட்சம் பேரும், மற்றும் கால்நடைகளும் பயன் பெற்றிருக்கும். மத்திய அரசு ரூ.650 கோடியில் தென்பெண்ணை- பாலாறு இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களின் நீராதாரத்தை பெருக்கும் வகையில், இத்திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென் பெண்ணை- பாலாற்றை இணைக்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாநாடு வாணியம்பாடியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் தனபால் தலைமை வகித்தார். இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு, தென் பெண்ணையும், பாலாற்றையும் இணைப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
கூட்டத்தில் வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜீவாதாரமான தண்ணீரில் முக்கிய பங்கு வகிப்பது பாலாறு. இதன் நீர், 5 மாவட்டங்களில் குடிநீர், விவசாயம், ஆலை பணிக்கு பயன்படுகிறது. ஆனால் தற்போது பாலாற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் உள்ளது. எனவே தென் பெண்ணையுடன் பாலாற்றை இணைக்க கோரினோம். தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் கடலில் வீணாக தென் பெண்ணை நீர் கலக்கிறது. இத்திட்டத்தை அரசு செயல்படுத்திருந்தால் பாலாற்றில் தண்ணீர் இருந்திருக்கும். தண்ணீர் பஞ்சமும் தீர்ந்திருக்கும். வேலூர் மாவட்டத்தில் 39 லட்சம் மக்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 லட்சம் மக்களும், காஞ்சிபுரத்தில் 39 லட்சம் பேரும், மற்றும் கால்நடைகளும் பயன் பெற்றிருக்கும். மத்திய அரசு ரூ.650 கோடியில் தென்பெண்ணை- பாலாறு இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களின் நீராதாரத்தை பெருக்கும் வகையில், இத்திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர் அருகே உள்ள பொய்கை சந்தையில் ரூ.1 லட்சம் வரை மாடுகள் விற்பனையானது.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. வாரம் பிறந்து செவ்வாய்க்கிழமை என்றாலே பொய்கை சந்தை களை கட்டும். கால்நடைகள், கோழி மட்டுமின்றி காய்கறி, விதைகள் போன்றவையும் விற்கப்படுகிறது.
ஆனாலும், பொய்கை சந்தையை மாட்டு சந்தை என்றே அழைப்பர். இங்கு வேலூர், திருவண்ணாமலை உள்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காளை, பல்வேறு இன கறவை மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
வாரம் ஒருநாள் சந்தையில் மட்டும் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. மாடுகள் விற்பனை மட்டுமே ரூ.1 கோடியை எட்டும். சந்தைக்கு முந்தைய நாள் இரவிலேயே வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டு வந்து இறக்கப்பட்டுவிடும்.
மாடுகளின் பல்லை பிடித்தும், கன்று ஈன்றதை வைத்தும், நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதை கேட்டும் இடைத்தரகர்கள் மூலம் விலை நிர்ணயித்து மாடுகள் உடனடியாக விற்கப்படும்.
பக்ரீத் பண்டிகை நாளை நடைபெறுவதை யொட்டி இறைச்சிக்காக மாடுகள் வாங்குபவர்கள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது கேரள மாநில வியாபாரிகள் அதிகளவில் பொய்கை சந்தைக்கு வந்திருந்தனர்.
கடந்த ஆண்டு கேரளாவுக்கு மட்டும் 7 ஆயிரம் மாடுகள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக கேரளாவில் பக்ரீத் பண்டிகை களையிழந்துள்ளது.
இதனால் பொய்கை மாட்டு சந்தைக்கு கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால் வழக்கத்தை விட மாடுகள் விற்பனை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஆனாலும் உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனையானது.
வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் திங்கட்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்று வட்டார பகுதியான தண்டராம்பட்டு, செங்கம், மணலூர்பேட்டை, வெறையூர், திருவண்ணாமலை, மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இந்த நிலையில் நேற்று வாழவச்சனூரில் நடந்த வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளையும், மாடுகளையும் விற்பனைக்காக கொண்டு வந்தனர். நாளை (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆடுகளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதனால் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் முஸ்லிம்கள் குர்பானி வழங்குவதற்காகவும் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
நேற்று மட்டும் ரூ.1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட போலீசார் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர்:
கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியதால் பல லட்சம் பேர் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவிக்கின்றனர். கேரள மாநில மக்களின் துயர் துடைக்க வேலூர் மாவட்டத்தில் பல அமைப்புகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் லட்சக்கணக்கில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன.
இதனை கலெக்டர் ராமன், மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் இன்று எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து 2 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரண பொருட்களுடன் 2 போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். பொருட்கள் சென்று சேர்ந்த பிறகு, போலீசார் வேலூருக்கு திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியதால் பல லட்சம் பேர் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவிக்கின்றனர். கேரள மாநில மக்களின் துயர் துடைக்க வேலூர் மாவட்டத்தில் பல அமைப்புகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் லட்சக்கணக்கில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன.
இதனை கலெக்டர் ராமன், மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் இன்று எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து 2 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரண பொருட்களுடன் 2 போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். பொருட்கள் சென்று சேர்ந்த பிறகு, போலீசார் வேலூருக்கு திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
காவேரிப்பாக்கத்தில் எதிர்பாரதவிதமாக வீட்டில் தீப்பற்றியதில் 20 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
அரக்கோணம்:
காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கோட்டைத் தெருவில் வசிப்பவர் லோகநாதன்(40) கூலி தொழிலாளி.இவரது மனைவி பிரேமா(35) இன்று காலை 6 மணிக்கு டீ போடுவதற்காகாக பிரேமா கேஸ் அடுப்பை ரெகுலேட்டர் மூலம் பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாரதவிதமாக ரெகுலேட்டர் வழியாக தீப்பற்றியதில் அருகில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், துணிகளில் தீப்பற்றியது.
இதனால் சிலிண்டர் வெடித்து விடுமோ என்று பயந்து கணவன், மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி தப்பினர்.
தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது வீட்டிலுள்ள பீரோ, பிரிட்ஜ் ஆகியவை எரிந்துகொண்டிருந்தது.
ஒரே புகை மன்டலமாக காட்சியளித்தது. அனைவரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றியும் கோனிப்பைகளை நனைத்து வீசியும் தீயை அணைக்க முயன்றனர்.
விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினரும் சேர்ந்து தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. #tamilnews
காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கோட்டைத் தெருவில் வசிப்பவர் லோகநாதன்(40) கூலி தொழிலாளி.இவரது மனைவி பிரேமா(35) இன்று காலை 6 மணிக்கு டீ போடுவதற்காகாக பிரேமா கேஸ் அடுப்பை ரெகுலேட்டர் மூலம் பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாரதவிதமாக ரெகுலேட்டர் வழியாக தீப்பற்றியதில் அருகில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், துணிகளில் தீப்பற்றியது.
இதனால் சிலிண்டர் வெடித்து விடுமோ என்று பயந்து கணவன், மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி தப்பினர்.
தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது வீட்டிலுள்ள பீரோ, பிரிட்ஜ் ஆகியவை எரிந்துகொண்டிருந்தது.
ஒரே புகை மன்டலமாக காட்சியளித்தது. அனைவரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றியும் கோனிப்பைகளை நனைத்து வீசியும் தீயை அணைக்க முயன்றனர்.
விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினரும் சேர்ந்து தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. #tamilnews
வேலூர் மாவட்டத்தில் போலீசாருடன் ரோந்து செல்ல 1,148 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருவிழா, பொதுக்கூட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராய விற்பனை மற்றும் குற்றச்சம்பவங்களை அடியோடு ஒழித்து கட்ட பிரவேஷ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
ரோந்து செல்லும் போலீசார் பற்றக்குறையால் தனியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தப்பி சென்று விடுகின்றனர்.
போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட அந்தந்த பகுதியில் உள்ள படித்த இளைஞர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு போலீஸ் நிலையத்துககு 25 பேர் என மாவட்டம் முழுவதும் 1148 படித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த போலீஸ் நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராயம் குறித்து இவர்கள் போலீசுக்கு ரகசிய தகவல் தெரிவிப்பார்கள். மேலும் போலீசாருடன் தினமும் இரவு ரோந்து செல்வார்கள். திருவிழா, பொதுக்கூட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராய விற்பனை மற்றும் குற்றச்சம்பவங்களை அடியோடு ஒழித்து கட்ட பிரவேஷ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
ரோந்து செல்லும் போலீசார் பற்றக்குறையால் தனியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தப்பி சென்று விடுகின்றனர்.
போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட அந்தந்த பகுதியில் உள்ள படித்த இளைஞர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு போலீஸ் நிலையத்துககு 25 பேர் என மாவட்டம் முழுவதும் 1148 படித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த போலீஸ் நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராயம் குறித்து இவர்கள் போலீசுக்கு ரகசிய தகவல் தெரிவிப்பார்கள். மேலும் போலீசாருடன் தினமும் இரவு ரோந்து செல்வார்கள். திருவிழா, பொதுக்கூட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
2 திராவிட கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லாததால் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை தொகுதி மற்றும் வேலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது :-
இங்கு நடப்பது வித்தியாசமான பொதுக்கூட்டம். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்களிடம் படைக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என 3 சக்திகள் உள்ளன. தி.மு.க, அ.தி.மு.க.வை அழிக்கும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. அழிப்பதற்கு உங்களுக்கு எந்த ஆயுதமும் தேவை இல்லை. அனைவரிடமும் ஒரே ஒரு ஓட்டு என்கிற ஆயுதம் உள்ளது அது மட்டுமே போதுமானது.

அன்புமணி போடும் முதல் கையெழுத்து மதுக்கடைகளை ஒழிப்பதற்கு தான். அதற்காக பெண்கள் வாக்களிக்க வேண்டும். ரூ.200, ரூ.500 வாங்கி கொண்டு வாக்களிக்காதீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, உயர்ந்த படிப்பு, விவசாயத்திற்கு பாதுகாப்பு, சிறந்த மருத்துவம் கிடைக்க பா.ம.க.விற்கு வாக்களியுங்கள். விவசாயத்தை, விவசாயியை பற்றி யாரும் பேசவில்லை. தாய், தந்தைக்கு அடுத்த தெய்வம் விவசாயிதான் என பாராளுமன்றத்தில் அன்புமணி பேசினார்.
பால் போன்ற தண்ணீர் ஓடியதால் தான் இந்த ஆற்றிற்கு பாலாறு என பெயர் வந்தது. இதில் தோல் தொழிற்சாலை கழிவுநீரை விட்டு கெடுத்து விட்டனர். எனவே பாலாற்றை பாதுகாக்க 1996-ம் ஆண்டு வாணியம்பாடிக்கும் வாலாஜாவுக்கும் இடையே 120 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் சென்று பிரசாரம் நடத்தினேன். இன்று வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டமாகி உள்ளது. இந்த மாவட்டத்திற்காக பா.ம.க. நிறைய பாடுபட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 2 தொகுதிகளில் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது சாதனை.
இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss
ராணிப்பேட்டை தொகுதி மற்றும் வேலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது :-
இங்கு நடப்பது வித்தியாசமான பொதுக்கூட்டம். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்களிடம் படைக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என 3 சக்திகள் உள்ளன. தி.மு.க, அ.தி.மு.க.வை அழிக்கும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. அழிப்பதற்கு உங்களுக்கு எந்த ஆயுதமும் தேவை இல்லை. அனைவரிடமும் ஒரே ஒரு ஓட்டு என்கிற ஆயுதம் உள்ளது அது மட்டுமே போதுமானது.
2 திராவிட கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லை. இதனால் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க.மட்டும்தான் உள்ளது. மதுக்கடைகளை அகற்றுவோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக பா.ம.க.விற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்.

பால் போன்ற தண்ணீர் ஓடியதால் தான் இந்த ஆற்றிற்கு பாலாறு என பெயர் வந்தது. இதில் தோல் தொழிற்சாலை கழிவுநீரை விட்டு கெடுத்து விட்டனர். எனவே பாலாற்றை பாதுகாக்க 1996-ம் ஆண்டு வாணியம்பாடிக்கும் வாலாஜாவுக்கும் இடையே 120 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் சென்று பிரசாரம் நடத்தினேன். இன்று வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டமாகி உள்ளது. இந்த மாவட்டத்திற்காக பா.ம.க. நிறைய பாடுபட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 2 தொகுதிகளில் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது சாதனை.
இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss
ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழித்தடத்தில் உயிரை பணயம் வைத்து பஸ்சின் படிக்கட்டிலும், பின்புறத்திலும் தொங்கிய படி பயணிகள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கலவை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும், பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான காலையில் இயக்கப்படுவதில்லை. கலவை கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு ஆற்காடு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்று படிக்கின்றனர்.
அதேபோல் ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழியில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்காக வருபவர்களும் அதிகமாக பயணிக்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். காலை நேரத்தில் ஒன்றிரண்டு தனியார் பஸ்கள் மட்டுமே செல்கிறது. இதனால், பயணிகள் கூட்டம் முண்டியடித்து கொண்டு அலை மோதுகிறது.
பெரும்பாலும் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் படிக்கட்டில் பயணிக்கின்றனர். இதிலும் சிலர், பஸ் பின்புறத்தில் தொங்கியவாறே பயணிக்கின்றனர். உயிரை பணயம் வைத்து, பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து கழகம் செவி சாயக்க மறுத்து வருவதால், தொங்கியபடியே பயணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அதிக மக்கள் தொகை கொண்ட ஆற்காடு- செய்யாறு வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கலவை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும், பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான காலையில் இயக்கப்படுவதில்லை. கலவை கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு ஆற்காடு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்று படிக்கின்றனர்.
அதேபோல் ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழியில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்காக வருபவர்களும் அதிகமாக பயணிக்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். காலை நேரத்தில் ஒன்றிரண்டு தனியார் பஸ்கள் மட்டுமே செல்கிறது. இதனால், பயணிகள் கூட்டம் முண்டியடித்து கொண்டு அலை மோதுகிறது.
பெரும்பாலும் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் படிக்கட்டில் பயணிக்கின்றனர். இதிலும் சிலர், பஸ் பின்புறத்தில் தொங்கியவாறே பயணிக்கின்றனர். உயிரை பணயம் வைத்து, பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து கழகம் செவி சாயக்க மறுத்து வருவதால், தொங்கியபடியே பயணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அதிக மக்கள் தொகை கொண்ட ஆற்காடு- செய்யாறு வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தரமோகன் முன்னிலை வகித்தார். ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சம்பள உயர்வுக்கோரி வேலூர் பெண்ட்லெண்ட் பழைய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் தர்ணா போராட்டம் செய்தனர். புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படதாபடி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெய கீதா, டாக்டர்கள் பிரகாஷ் அய்யப்பன், சதீஷ், சந்தோஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தரமோகன் முன்னிலை வகித்தார். ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சம்பள உயர்வுக்கோரி வேலூர் பெண்ட்லெண்ட் பழைய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் தர்ணா போராட்டம் செய்தனர். புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படதாபடி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெய கீதா, டாக்டர்கள் பிரகாஷ் அய்யப்பன், சதீஷ், சந்தோஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிகொண்டா அருகே பள்ளி மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய டெய்லரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) டெய்லர். அப்பகுதியில் உள்ள பிளஸ்-1 மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார்.
பின்னர் அவர், அதனை மாணவியின் தாயாருடைய செல்போன் ‘வாட்ஸ்-அப்’பிற்கு அனுப்பி உள்ளார். இதைக்கண்டு மாணவியின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அதையடுத்து சிறிது நேரத்தில் அவர், மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ‘‘உனது மகள் குளிக்கும் படத்தை அழிக்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும், மேலும் இதுகுறித்து குடும்பத்தினர், போலீஸ் உள்பட யாருக்கும் தெரிவிக்க கூடாது.
அவ்வாறு தெரிவித்தால் வீடியோவை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்’’ என மிரட்டி உள்ளார். மேலும் பணத்தை உடனடியாக தாம் தெரிவிக்கும் இடத்துக்கு வந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் செய்வது அறியாமல் திகைத்த மாணவியின் தாயார், சிறிது நேரத்துக்கு பின்னர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
அதில், வீடியோ அனுப்பியது மணிகண்டன் என்பதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து மாணவி குளிக்கும் வீடியோவை போலீசார் அழித்தனர். கைதான மணிகண்டன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) டெய்லர். அப்பகுதியில் உள்ள பிளஸ்-1 மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார்.
பின்னர் அவர், அதனை மாணவியின் தாயாருடைய செல்போன் ‘வாட்ஸ்-அப்’பிற்கு அனுப்பி உள்ளார். இதைக்கண்டு மாணவியின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அதையடுத்து சிறிது நேரத்தில் அவர், மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ‘‘உனது மகள் குளிக்கும் படத்தை அழிக்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும், மேலும் இதுகுறித்து குடும்பத்தினர், போலீஸ் உள்பட யாருக்கும் தெரிவிக்க கூடாது.
அவ்வாறு தெரிவித்தால் வீடியோவை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்’’ என மிரட்டி உள்ளார். மேலும் பணத்தை உடனடியாக தாம் தெரிவிக்கும் இடத்துக்கு வந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் செய்வது அறியாமல் திகைத்த மாணவியின் தாயார், சிறிது நேரத்துக்கு பின்னர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
அதில், வீடியோ அனுப்பியது மணிகண்டன் என்பதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து மாணவி குளிக்கும் வீடியோவை போலீசார் அழித்தனர். கைதான மணிகண்டன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
18 எம்.எல்.ஏ.வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #TTVDhinakaran
வேலூர்:
18 எம்.எல்.ஏ.வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டத்தின் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளில் நடக்கவேண்டிய இந்த கூட்டத்திற்கு தடைவிதித்ததால் இன்று நடக்கிறது. நம்மால் வளர்ந்த ஜாம்பவான் அமைச்சர் வீரமணி என்னென்ன சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்ற பட்டியலை அவருடன் இருப்பவர்களே என்னிடம் கொடுத்துள்ளார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று 8 கோடி தமிழ் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அந்த தீர்ப்பு வந்ததும் இந்த ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும். ஆட்சியாளர்கள் மாமியார் வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கிவிட்டது. வேலூரில் ஆங்கிலேயருக்கு எதிராக 1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. அதேபோன்று சுதந்திரம் பெற்றதும் செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியும் குடியாத்தத்தில் இருந்துதான் நெய்யப்பட்டு அனுப்பப்பட்டது. முப்படைக்கும் வீரர்களை அனுப்பும் மாவட்டம் வேலூர். அதேபோன்று இந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
தமிழகத்தில் நடைபெறும் துரோக ஆட்சியை அகற்ற, அதர்மத்தை முறியடிக்க 13 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். அதேபோன்று திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இரண்டாவது இடம் உதய சூரியனுக்கா, இரட்டை இலைக்கா என்பதுதான் போட்டி. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் பலிக்காது. அவர்கள் பணம் கொடுத்தாலும் மக்கள் குக்கர் சின்னத்திற்குதான் வாக்களிப்பார்கள்.
திருவாரூர் கருணாநிதி வெற்றிபெற்ற தொகுதியாக இருந்தாலும், எனக்கும் அதுதான் சொந்தஊர். முன்பு வேண்டுமானால் கருணாநிதி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தற்போது நமது மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்பதற்காகவும், துரோக ஆட்சியை அகற்றவும் நமக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள்.
உண்மையான அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகமாக பரிணாமம் பெற்றுள்ளது. இனி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. என்பது போர்டும், கட்டிடமும்தான் உள்ளது. மக்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எம்.ஜி.ஆர். 1972-ல் புதிய கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வெற்றிபெற்றார். தி.மு.க. 2-வது இடத்திற்கும், காங்கிரஸ் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதேபோன்று அம்மாவின் தொண்டர்கள் மீண்டும் சரித்திரம் படைப்பார்கள்.
நான் உங்களால் உருவாக்கப்பட்ட தலைவன். அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றுபெற்றேன். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் சின்ன அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் சின்ன அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு மக்கள் விரோத நடவடிக்கை, மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தடைவிதித்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கதவை திறந்துவிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து ஒரு ஆண்டு பெரிய சாதனை படைத்துவிட்டதாகவும், ராஜதந்திரம் என்றும் கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran
18 எம்.எல்.ஏ.வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டத்தின் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளில் நடக்கவேண்டிய இந்த கூட்டத்திற்கு தடைவிதித்ததால் இன்று நடக்கிறது. நம்மால் வளர்ந்த ஜாம்பவான் அமைச்சர் வீரமணி என்னென்ன சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்ற பட்டியலை அவருடன் இருப்பவர்களே என்னிடம் கொடுத்துள்ளார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று 8 கோடி தமிழ் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அந்த தீர்ப்பு வந்ததும் இந்த ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும். ஆட்சியாளர்கள் மாமியார் வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கிவிட்டது. வேலூரில் ஆங்கிலேயருக்கு எதிராக 1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. அதேபோன்று சுதந்திரம் பெற்றதும் செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியும் குடியாத்தத்தில் இருந்துதான் நெய்யப்பட்டு அனுப்பப்பட்டது. முப்படைக்கும் வீரர்களை அனுப்பும் மாவட்டம் வேலூர். அதேபோன்று இந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
தமிழகத்தில் நடைபெறும் துரோக ஆட்சியை அகற்ற, அதர்மத்தை முறியடிக்க 13 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். அதேபோன்று திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இரண்டாவது இடம் உதய சூரியனுக்கா, இரட்டை இலைக்கா என்பதுதான் போட்டி. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் பலிக்காது. அவர்கள் பணம் கொடுத்தாலும் மக்கள் குக்கர் சின்னத்திற்குதான் வாக்களிப்பார்கள்.
திருவாரூர் கருணாநிதி வெற்றிபெற்ற தொகுதியாக இருந்தாலும், எனக்கும் அதுதான் சொந்தஊர். முன்பு வேண்டுமானால் கருணாநிதி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தற்போது நமது மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்பதற்காகவும், துரோக ஆட்சியை அகற்றவும் நமக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள்.
உண்மையான அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகமாக பரிணாமம் பெற்றுள்ளது. இனி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. என்பது போர்டும், கட்டிடமும்தான் உள்ளது. மக்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எம்.ஜி.ஆர். 1972-ல் புதிய கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வெற்றிபெற்றார். தி.மு.க. 2-வது இடத்திற்கும், காங்கிரஸ் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதேபோன்று அம்மாவின் தொண்டர்கள் மீண்டும் சரித்திரம் படைப்பார்கள்.
நான் உங்களால் உருவாக்கப்பட்ட தலைவன். அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றுபெற்றேன். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் சின்ன அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் சின்ன அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு மக்கள் விரோத நடவடிக்கை, மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தடைவிதித்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கதவை திறந்துவிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து ஒரு ஆண்டு பெரிய சாதனை படைத்துவிட்டதாகவும், ராஜதந்திரம் என்றும் கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran






