என் மலர்
நீங்கள் தேடியது "tag 181853"
திருப்பூர்:
திருப்பூரில் வாரந்தோறும் நடக்கும் கால்நடை சந்தையில், பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மாடுகளை வாங்க வருவர். உள்ளூர் விவசாயிகள், தாராபுரம், உடுமலை, குண்டடம், குன்னத்துார் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பங்கேற்பர்.
கால்நடை எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், விலையும் வியாபாரிகள் எதிர்பார்க்கும் அளவில் இருப்பதால், கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகளும் கலந்து கொள்வர். கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது பெய்த மழை காரணமாக, சந்தைக்கு மாடு வரத்து வெகுவாக குறைந்தது. தற்போது வெயில் அடிப்பதால் சந்தைக்கான கால்நடை வரத்து சற்று உயர்ந்துள்ளது.
கடந்த திங்கட்க்கிழமை நடந்த சந்தைக்கு 600 மாடுகள் வந்தது. கன்றுக்குட்டிகள், 8,000 முதல், 12 ஆயிரம் ரூபாய் வரையும், பெரிய மாடுகள் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம், தரம் உயர்ந்தவை 45 ஆயிரம் வரை விற்கப்பட்டன. 75 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இது குறித்து சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பண்டிகையின் போது மாடு வரத்து இருந்தாலும் விலையில் கிராக்கி நிலவியது. மழை பெய்ததால், பசும்புல் வளர்ச்சி அதிகமாகியது. பலரும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவதை நிறுத்தினர். தற்போது வெயில் அடித்து வருவதால் ஏலத்துக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விலையும் கட்டுக்குள் உள்ளது என்றனர்.
வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. வாரம் பிறந்து செவ்வாய்க்கிழமை என்றாலே பொய்கை சந்தை களை கட்டும். கால்நடைகள், கோழி மட்டுமின்றி காய்கறி, விதைகள் போன்றவையும் விற்கப்படுகிறது.
ஆனாலும், பொய்கை சந்தையை மாட்டு சந்தை என்றே அழைப்பர். இங்கு வேலூர், திருவண்ணாமலை உள்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காளை, பல்வேறு இன கறவை மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
வாரம் ஒருநாள் சந்தையில் மட்டும் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. மாடுகள் விற்பனை மட்டுமே ரூ.1 கோடியை எட்டும். சந்தைக்கு முந்தைய நாள் இரவிலேயே வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டு வந்து இறக்கப்பட்டுவிடும்.
மாடுகளின் பல்லை பிடித்தும், கன்று ஈன்றதை வைத்தும், நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதை கேட்டும் இடைத்தரகர்கள் மூலம் விலை நிர்ணயித்து மாடுகள் உடனடியாக விற்கப்படும்.
பக்ரீத் பண்டிகை நாளை நடைபெறுவதை யொட்டி இறைச்சிக்காக மாடுகள் வாங்குபவர்கள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது கேரள மாநில வியாபாரிகள் அதிகளவில் பொய்கை சந்தைக்கு வந்திருந்தனர்.
கடந்த ஆண்டு கேரளாவுக்கு மட்டும் 7 ஆயிரம் மாடுகள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக கேரளாவில் பக்ரீத் பண்டிகை களையிழந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வாழவச்சனூரில் நடந்த வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளையும், மாடுகளையும் விற்பனைக்காக கொண்டு வந்தனர். நாளை (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆடுகளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதனால் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் முஸ்லிம்கள் குர்பானி வழங்குவதற்காகவும் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
நேற்று மட்டும் ரூ.1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.






