search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "materials damage"

    வேடசந்தூர் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் ஆத்து மேடு பகுதியில் சாலையோர ஓட்டல் உள்ளது. இங்கு வழக்கம் போல் ஊழியர்கள் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.

    இதனை கவனிக்காததால் திடீரென தீ பற்றி மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் நாசமானது. விரைவாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்திலும் ஏராளமான கடைகள் உள்ள நிலையில் தீ பரவாததால் அதிர்ஷ்டவசமாக பொருட் சேதம் ஏற்படவில்லை.

    சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உணவகத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    காவேரிப்பாக்கத்தில் எதிர்பாரதவிதமாக வீட்டில் தீப்பற்றியதில் 20 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
    அரக்கோணம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கோட்டைத் தெருவில் வசிப்பவர் லோகநாதன்(40) கூலி தொழிலாளி.இவரது மனைவி பிரேமா(35) இன்று காலை 6 மணிக்கு டீ போடுவதற்காகாக பிரேமா கேஸ் அடுப்பை ரெகுலேட்டர் மூலம் பற்ற வைத்தார்.

    அப்போது எதிர்பாரதவிதமாக ரெகுலேட்டர் வழியாக தீப்பற்றியதில் அருகில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், துணிகளில் தீப்பற்றியது.

    இதனால் சிலிண்டர் வெடித்து விடுமோ என்று பயந்து கணவன், மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி தப்பினர்.

    தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது வீட்டிலுள்ள பீரோ, பிரிட்ஜ் ஆகியவை எரிந்துகொண்டிருந்தது.

    ஒரே புகை மன்டலமாக காட்சியளித்தது. அனைவரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றியும் கோனிப்பைகளை நனைத்து வீசியும் தீயை அணைக்க முயன்றனர்.

    விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினரும் சேர்ந்து தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. #tamilnews
    பள்ளிபாளையத்தில் டீக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையத்தில் பாலம் ரோட்டில் ஸ்ரீபுற்றுமாரியம்மன் கோவில் அருகில் மணி என்பவர் டீக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு டீக்கடையை மூடி விட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் அவரது டீக்கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து டீக்கடை உரிமையாளர் மணியிடம் தெரிவித்தனர். இதை அறிந்து அவர் பதற்றத்தோடு சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார். அங்கே டீக்கடை தீயில் எரிந்து கொண்டு இருந்தது. டீக்கடையை ஒட்டி இருந்த பெட்டிக்கடையும் தீயில் எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் மணி மற்றும் அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் டீக்கடை எரிந்தது. அதில் இருந்த தின்பண்டங்கள், அலமாரி, மினிவிசிறி மற்றும் கடை அருகே இருந்த இரும்பு கடையின் முன்கூரையும் தீப்பிடித்து எரிந்தது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு படை வீரர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×