search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore govt hospital"

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தரமோகன் முன்னிலை வகித்தார். ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சம்பள உயர்வுக்கோரி வேலூர் பெண்ட்லெண்ட் பழைய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் தர்ணா போராட்டம் செய்தனர். புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படதாபடி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெய கீதா, டாக்டர்கள் பிரகாஷ் அய்யப்பன், சதீஷ், சந்தோஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி, பல் வலிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    15 நாட்களுக்கு ஒருமுறை முருகன், மனைவி நளினியை சந்திக்கிறார். இந்த நிலையில், நளினி கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஓரிரு நாட்களாக பல்வலி அதிகமானது.

    இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை 9.20 மணிக்கு நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு 10.30 மணி அளவில் மீண்டும் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு நளினி அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
    ×