என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்த ஆண்டு 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

    கடந்த ஆண்டு தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்களுக்கு என மொத்தம் 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    கூடுதலாக தற்காலிகப் பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். நெரிசலைத் தவிர்க்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதைப்போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றப்படும்

    தீபம் ஏற்ற தேவையான நெய், எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்றை இந்துசயம அறநிலையத்துறை சார்பில் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக் கூட்டத்தில் பொதுப் பணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    பரணி தீபத்தைக் காண வரும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்களுக்கு ஒரே மாதிரியான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 2-ம் பிரகாரத்தில் இருந்து பரணி தீபத்தைக் காண ஒரு வண்ணத்திலும், 3-ம் பிரகாரத்தில் இருந்து காண மற்றொரு வண்ணத்திலும் அனுமதிச் சீட்டுகளை அச்சடித்து வழங்க வேண்டும்.

    தீபத் திருவிழாவைக் காண தவறான அனுமதிச் சீட்டுகளுடன் வரும் பக்தர்கள் மீது போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர்.
    • தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பேகோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது 2-வது மனைவி சரண்யா (29). திருவண்ணாமலையில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் சரண்யா வேலை செய்த போது. இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 31-ந் தேதி தீபாவளி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் திடீரென்று சரண்யா மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மகள் சரண்யாவை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பேச முடியாததால், அவரது தாயார் அரசுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த காவேரி திருவண்ணாமலைக்கு நேரில் வந்து விசாரித்தார்.

    அப்போது சரண்யா சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் காவேரி உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடினார். ஆனாலும், சரண்யா கிடைக்கவில்லை. இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் தனது மகளை காணவில்லை எனபுகார் அளித்தார்.

    மேலும், தனது மருமகன் கோபி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே காட்டுப் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் இளம்பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. திருவண்ணாமலை போலீசார் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.

    அப்போது, அங்கு இறந்து கிடந்தது சரண்யா என்பது தெரியவந்தது. சரண்யாவின் தலை, மார்பு பகுதி மற்றும் ஒரு தொடை ஆகியவை மட்டுமே அங்கு கிடந்தன. அதை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்து வீசியது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் கோபியை கைது செய்தனர். கணவன் மனைவி இடையே சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கோபி சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்தார். சரண்யாவின் உடலை 8 துண்டகளாக வெட்டியுள்ளார்.

    பின்னர் இது குறித்து அவருடைய தாயார் சிவகாமியிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து சரண்யாவின் உடல் பாகங்களை ஒரு டிராவல் பையில் வைத்து அடைத்தனர்.

    பின்னர் இது குறித்து கோபி தன்னுடைய நண்பர் ராஜேந்திரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான காரை எடுத்து வந்தார்.

    அவருடைய காரில் 3 பேரும் சரண்யாவின் உடல் பாகங்களை பையில் வைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதிக்கு சென்றனர்.

    8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர். தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன. மீதி உள்ள கை கால்கள் உள்ளிட்ட 5 பாகங்கள் கிடைக்கவில்லை.

    அவற்றை கைப்பற்ற போலீசார் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கோபியின் தாயார் சிவகாமி மற்றும் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் 15-ந்தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் உற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும். 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் இன்று காலை வெள்ளோட்டம் நடந்தது.

    காலை 8.14 மணிக்கு பெரிய தேரை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், அ.தி.மு.க. எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் ஜெ.செல்வம், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எதிரொலிக்க தேர் அசைந்தாடியபடி மாடவீதியில் வலம் வந்தது.

    தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


    தேருக்கு முன்பாக பரத நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடியபடி வந்தனர். தேரோட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    வேங்கிக்கால்:

    நாளை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரர் தேர் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அருணாச்சலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது.

    வெள்ளோட்டத்திற்கான பணிகளை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    தேர் வெள்ளோட்டத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

    • கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் இதய மருத்துவர் உள்பட 5 மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை கோவிலில் உள்ள உள்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் இணை ஆணையர் ஜோதி வரவேற்றார்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துறைவாரியாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.


     

    கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

    கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.



    பின்னர் அவர் கூறியதாவது:-

    கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 4-ந் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 13-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவின்போது கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவின் போது சுமார் 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள், உணவு வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. திருவிழாவின்போது மாட வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டங்களும், கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு மேற்கொண்ட சிரமங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான விரிவான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பரணி தீபத்தின்போது கோவிலுக்குள் 7,050 பக்தர்களும், மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மலை ஏறுவதற்கு 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பாதையில் மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் மலையேர அனுமதிக்கப்படுவார்கள். மகா தீபத்தன்று கோவிலில் தேவையான அளவு போலீசார் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் இதய மருத்துவர் உள்பட 5 மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் மருத்துவ குழுவினரும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் கோவில் மற்றும் கிரிவலப்பாதை என ஒட்டுமொத்தமாக 85 மருத்துவ குழுவினர் தீபத்திருவிழாவின் போது பணியாற்ற உள்ளனர்.

    வருகிற 8-ந் தேதி அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    108 ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அன்றைய தினமும், தீபத் திருவிழாவின்போது பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும் அன்றும் மாட வீதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். தங்கும் விடுதிகளில் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் கொடுக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விடுதியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து விடுதி உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

    பரணி தீபத்தின்போது 500 ஆன்லைன் அனுமதி சீட்டும், மகாதீபத்தின் போது 1100 ஆன்லைன் அனுமதி சீட்டும் வழங்கப்பட உள்ளது.

    அவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடத்தல்காரன் காரை மோதவிட்டு வேகமாக தப்பி சென்றான்.
    • போதைப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும்.

    திருக்கோவிலூர்:

    விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கண்டாச்சிபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு குட்கா கடத்தலை தடுக்க சென்ற கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டரை கடத்தல்காரன் காரை மோதவிட்டு வேகமாக தப்பி சென்றான்.

    கண்டாச்சிபுரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள் சரவணன், கந்தன், உதவி ஆய்வாளர் காத்த முத்து மற்றும் போலீசார் கடத்தல்காரன் காரை இருசக்கர வாகனத்தில் சேசிங் செய்து கொண்டிருந்தனர்.


    போலீசார் சுற்றிவளைப் பதை உணர்ந்த கடத்தல்காரன் கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் வனப்பகு தியில் காரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளான்.

    கடத்தல் காரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்ற நிலையில் காரில் சுமார் 41 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.

    காயமடைந்த போலீசார் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடத்தப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

    • கூட்டணி ஆட்சி என்பது காலத்தின் கட்டாயத்தால் உருவானது.
    • விஜய் திராவிட மாடல் ஆட்சியையும், குடும்ப அரசியலையும் எதிர்க்கிறார்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கூட்டணி, அதிகாரத்திலும் பங்கு என்பது குறித்து விஜய் இப்போது பேசியிருக்கக்கூடாது, இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சி நடக்க உள்ளது.

    அதுமட்டுமின்றி, இது போன்று கூட்டணி குறித்து வெளிப்படையாக அவர் பேசக்கூடாது. மறைமுகமாக ஒவ்வொரு கட்சியையும் அழைத்து, ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும், யார் வேட்பாளர் என்பதெல்லாம் வெளிப்படையாக பேசக்கூடாது.

    விஜய்யின் இந்த நிலைப்பாடு, தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்குத்தான். இது, சரியான நேரத்தில் கையாளப்படவில்லை.

    மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது காலத்தின் கட்டாயத்தால் உருவானது. ஒரு தேசிய கட்சி ஜனநாயக அடிப்படையில் தனது கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து அளித்ததன் மூலமாக உருவானது அல்ல.

    அதேபோல், தமிழகத்திலும் காலத்தின் கட்டாயத்தால்தான் கூட்டணி ஆட்சி உருவாக்க முடியும். அப்படி உருவானால், அது ஒரு இயல்பான நிலையாக இருக்காது.

    தமிழகத்தில் எந்த கட்சியும் தங்களை பலவீனப்படுத்திக் கொள்ள விரும்பாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, தங்கள் வலிமையை இழக்கச் செய் வதற்கு இடம்கொடுக்க மாட்டார்கள்.

    விஜய் திராவிட மாடல் ஆட்சியையும், குடும்ப அரசியலையும் எதிர்க்கிறார். விஜய்யின் ஒட்டுமொத்த பேச்சும் தி.மு.க. மற்றும் தி.மு.க அரசு எதிர்ப்பாகவே உள்ளது.

    இது ஒன்றும் புதிய அரசியல் நிலைப்பாடு இல்லை. தமிழகத்தில் நீண்டகாலமாக தி.மு.க. மற்றும் தி.முக. அரசை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    `பாசிசம் என்றால், நீங்கள் பாயசமா' என்று கிண்டல் அடிப்பதில் 2 பொருள் உள்ளது. ஒன்று பாசிச எதிர்ப்பு பெரிய விஷயம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

    மற்றொன்று, நீங்களும் பாசிசம்தான், நீங்கள் ஒன்றும் ஜனநாயக சக்திகள் இல்லை என்று புரிந்து கொள்ளலாம். நீங்களும் பாசிசம்தான் என்று தி.மு.க.வை மட்டும் சொல்கிறாரா? அல்லது தி.மு.க.வை சார்ந்துள்ள அகில இந்திய அளவில் ஐஎன்டிஐ கூட்டணியில் உள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா?. இதை எல்லாம் பார்க்கும்போது, பா.ஜனதா எதிர்ப்பில் த.வெ.க. தலைவர் விஜய் உறுதியாக இல்லை".

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பாசிச கட்சிகள் என விஜய் கூறுகிறாரா?
    • தவெக தலைவர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பிளவுவாத சக்திகள் என தவெக தலைவர் விஜய் வெளிப்படையாக கூறவில்லை. மேம்போக்காக பேசி இருக்கிறார்.

    * சிறுபான்மையினர் மீதான விஜயின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவாக தெரியவில்லை.

    * இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பாசிச கட்சிகள் என விஜய் கூறுகிறாரா?

    * பாசிச கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான். நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

    * பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.

    * தவெக தலைவர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை.

    * திமுக மற்றும் திமுக அரசை, கலைஞர் குடும்பத்தை எதிர்ப்பதாகவே விஜயின் பேச்சு உள்ளது என்று அவர் கூறினார்.

    • ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாக செய்தியில் பார்த்தேன்.
    • தற்போது தெரிந்தோ தெரியாமலோ தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் ரூ.36 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 22 பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்தார்.

    அப்போது அவரிடம், கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறுதலாக பாடப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    இதுகுறித்து ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாக செய்தியில் பார்த்தேன். இதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை. மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி சில சமுதாய மக்களின் மனம் வருந்தக்கூடாது என்ப தற்காக பல வரிகளை நீக்கினார்.

    தற்போது தெரிந்தோ தெரியாமலோ தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகம் எதிரே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று காலை நடந்தது.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தப்பாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் ஆகியவை கொண்டு வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1,835 வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    • இரவு 8 மணிக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
    • இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் நாளன்று பவுர்ணமி வந்தது. தொடர்ந்து 2-வது பவுர்ணமியும் இந்த புரட்டாசி மாதத்தின் நிறைவையொட்டி வந்துள்ளது. அதாவது நேற்று இரவு 8 மணியளவில் பவுர்ணமி தொடங்கி புரட்டாசி மாதத்தின் நிறைவு நாளான 31-ந் தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5.38 மணியளவில் நிறைவடைகின்றது.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    மேலும் கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    ×