search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire Brigade"

    • உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் நேரு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி ரமணி (வயது 68). இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரமணி பையூர் பாறை குளம் அருகே நடந்து சென்றார்.

    அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது பாறை குளம் பக்கமாக ரமணி சென்றதாக அந்த பகுதியில் உள்ள வர்கள் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த ரமணி உறவினர்கள் குளத்தில் தவறி விழுந்திருக்கலாமோ என்று எண்ணி சிலர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தனர்.

    மேலும் இது குறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி ரமணியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவரது மகன் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறிந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை 25 ந் தேதி சுழற்சி முறையில் பணியில் இருக்கும்.
    • மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையின் போது அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீக்காயத்துக்கு சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர் அடங்கிய பிரத்யேக குழு தீபாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை (25 ந் தேதி) சுழற்சி முறையில் பணியில் இருக்கும். இதே போல் தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காங்கயத்தில் உள்ள மாவட்ட மருந்துக்கிடங்கில் இருந்து, தீக்காய சிகிச்சைக்கான மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில், பிளாஸ்டிக் சர்ஜரி, அறுவை சிகிச்சை உட்பட தேவையான மருந்து பொருட்கள் இருப்பில் வைக்க தேவையான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்டத்தில் 3 நாட்கள் நடக்கும் தீக்காயம் தொடர்பான விபத்து, சிகிச்சைகளை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேப்போல் தீ விபத்து ஏற்பட்டால் உடனே அணைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    • விழுப்புரம் அருகே நடு ரோட்டில் கெமிக்கல் லாரி பற்றி எரிந்தது.
    • விபத்தில் மோகன்ராஜ் கவிராஜிற்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    விழுப்புரம்:

    திருச்சி பெரமங்கலத்தில் இருந்து சோடியம் பை கார்பனேட் கெமிக்கல் லோடு சுமார் 15 கேன்களில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை ரெட்டில்ஸ் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) கவிராஜ் (26) என்பவர் ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது லாரி என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவர் மோகன்ராஜ் லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று லாரியில் இருந்து பயங்கர வெடி சத்தம் ஒன்று கேட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. மேலும் அருகில் இருந்த மற்றொரு டேங்கர் லாரி மீதும் தீ பரவியது. இந்த விபத்தில் மோகன்ராஜ் கவிராஜிற்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கும் தீயணைப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மோகன்ராஜ், கவி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீப்பிடித்து எரிந்த லாரியை போராடி அணைத்தனர்.

    ×