என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலி
ஆரணி:
ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் நேரு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி ரமணி (வயது 68). இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரமணி பையூர் பாறை குளம் அருகே நடந்து சென்றார்.
அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது பாறை குளம் பக்கமாக ரமணி சென்றதாக அந்த பகுதியில் உள்ள வர்கள் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த ரமணி உறவினர்கள் குளத்தில் தவறி விழுந்திருக்கலாமோ என்று எண்ணி சிலர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தனர்.
மேலும் இது குறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி ரமணியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவரது மகன் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறிந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்