என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest department rescue"

    • சிறுத்தை 3 குட்டிகளை ஈன்று இருந்தது தெரிய வந்தது.
    • வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டு பராமரித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டம், நாக்பித் அடுத்த பாலாபூரில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அப்போது 6 பேரை தாக்கி கடித்து குதறியது. சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பல கால்நடைகளை கடித்துக் கொன்றது.

    இந்த நிலையில் நேற்று காலை பாலாப்பூரில் உள்ள விவசாயி டிம்தேவ் சலோட் என்பவரின் மாட்டு கொட்டகையில் இருந்து சிறுத்தை வெளியே செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    பின்னர் மாட்டு கொட்டகைக்குள் சென்று பார்த்தபோது அங்கு சிறுத்தை 3 குட்டிகளை ஈன்று இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை குட்டிகளை மீட்டு எடுத்துச் சென்று பராமரித்து வருகின்றனர்.

    • வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்கள் பாருக்குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர்கள் தினமும் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

    அதேபோல் நேற்றும் அவர்கள் சென்றனர். வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர். அப்போது அவர்களது மாடுகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதையடுத்து தங்களின் மாடுகளை தேடி 3 பேரும் காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.

    ஆனால் காட்டுக்குள் சென்ற 3 பேரும் மாலை 4 மணியாகியும் திரும்பி வரவில்லை. அவர்கள் திரும்பி வர வழி தெரியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். மதியம் ஒரு மணியளவில் மாயாவிடம் அவரது கணவர் செல்போனில் பேசியிருக்கிறார்.

    அதன்பிறகு அவரது செல்போன் கிடைக்க வில்லை. இதனால் காட்டுக்குள் சென்ற 3 பெண்களும் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாமல் அவர்களது குடும்பத் தினர் பரிதவித்தனர்.

    இதுகுறித்து 3 பெண்களின் குடும்பத்தினரும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காணாமல் போன 3 பெண்களை கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் உடனடயாக தொடங்கினர். அவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    மாலை தொடங்கிய தேடுதல் பணி இரவிலும் நீடித்தது. ஆனால் 3 பெண்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை விடவில்லை.அப்போது காட்டுக்குள் சிக்கிய 3 பெண்களும் கண்டு பிடிக்கப்பட்டனர்.

    அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் வழி தெரியாமல் 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்றுவிட்டனர். திரும்பி வர வழி தெரியாமல் தவித்த அங்கேயே ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டனர். அவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து மீட்டனர்.

    மீட்கப்பட்ட பெண்கள் இன்று காலை வரை வனப்பகுதியில் இருந்தனர். அவர்களை வனத்துறையினர் இன்றுகாலை விடிந்தபிறகு காட்டில் இருந்து வெளியே அழைத்தது வந்தனர். பெண்களை மீட்டு வந்த குழுவினருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    வனப்பகுதியில் சிக்கிய பெண்களை இரவு என்றும் பாராமல் விரைந்து செயல்பட்டு மீட்ட வனத் துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • சுமார் 100 அடி வரை ஆழமுள்ள இந்த கிணற்றில் ஒரு பசுமாடு தவறி விழுந்தது.
    • 10 மணி நேரம் வனத்துறையினர் போராடி பசு மாட்டை மீட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி முந்தல் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் 5 அடி அகல உறைகிணறு உள்ளது. சுமார் 100 அடி வரை ஆழமுள்ள இந்த கிணற்றில் ஒரு பசுமாடு தவறி விழுந்தது.

    இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போடி தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாததால் கடுமையான போராட்டத்துக்கு பிறகு பசு மாட்டை மேலே கொண்டு வந்தனர்.

    அந்த சமயத்தில் பக்கவாட்டு சுவற்றில் இருந்த கருநாகப்பாம்பு பசுமாட்டை சீண்டியது. இதனால் மாடு மீண்டும் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அப்போது தீயணைப்பு வீரர்களும் தவறி விழுந்து காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து கருநாகப்பாம்பையும் வனத்துறையினர் உயிருடன் பிடித்து அதனை வனப்பகுதியில் விட்டனர்.

    அதன் பின்பு எஸ்காட்ஸ் எந்திரம் கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு பசு மாடு மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு நவீன உபகரணங்கள் இல்லாததால்தான் பசு மாடை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

    10 மணி நேரம் வனத்துறையினர் போராடி பசு மாட்டை மீட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    ×