மகாராஷ்டிராவில் கிராமத்திற்குள் புகுந்து 3 குட்டிகளை ஈன்ற சிறுத்தை

சிறுத்தை 3 குட்டிகளை ஈன்று இருந்தது தெரிய வந்தது.வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டு பராமரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் கிராமத்திற்குள் புகுந்து 3 குட்டிகளை ஈன்ற சிறுத்தை
Published on

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டம், நாக்பித் அடுத்த பாலாபூரில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அப்போது 6 பேரை தாக்கி கடித்து குதறியது. சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பல கால்நடைகளை கடித்துக் கொன்றது.

இந்த நிலையில் நேற்று காலை பாலாப்பூரில் உள்ள விவசாயி டிம்தேவ் சலோட் என்பவரின் மாட்டு கொட்டகையில் இருந்து சிறுத்தை வெளியே செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

பின்னர் மாட்டு கொட்டகைக்குள் சென்று பார்த்தபோது அங்கு சிறுத்தை 3 குட்டிகளை ஈன்று இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை குட்டிகளை மீட்டு எடுத்துச் சென்று பராமரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com