என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாறைகள் உருண்டு விழுந்து பூமிக்குள் புதைந்த வீடுகள்- 7 பேரின் நிலை என்ன ?
- பாறை உருண்டு விழுந்ததில் அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.
- வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திருவண்ணாமலையின் மலை அடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்துள்ளது.
இதில், அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.
அந்த வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், மாவட்ட எஸ்பி சுதாகர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினா அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று இருப்பதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Next Story






