என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மணிராஜ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • கூந்தங்குளம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முருகன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிராஜ்(வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தங்குளம் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு இடத்தில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மணிராஜ் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிராஜ், அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற வர்கள் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மூலக்கரைப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மணிராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் எவ்விதமான தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ அல்லது ஒளிரும் ஸ்டிக்கர்களோ வைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    • தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் வழியாக பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன.
    • சிக்னல் பழுதால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சிக்னல் நேற்று மாலை திடீரென பழுதடைந்தது.

    இதனால் அந்த நேரத்தில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ஆகியவை தங்களது வேகத்தை குறைத்து வள்ளியூர் ரெயில் கிராசிங்கை மெதுவாக கடந்து சென்றன. சிக்னல் பழுதடைந்ததினால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்து நின்றன. அதன்பின்னர் உடனடியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் அங்கு சென்று சிக்னல் கோளாறை சரி செய்தனர்.

    • நேற்று மாரியப்பன் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • இந்த விபத்தில் முருகேஷ், இசக்கி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    களக்காடு:

    அம்பை அருகே உள்ள ஊர்க்காடு வடக்குத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகேஷ் (வயது20). டிரைவராக உள்ளார். நேற்று இவர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் வடக்கு காருகுறிச்சியை சேர்ந்த சண்முகவேல் மகன் இசக்கியும் சென்றார்.

    களக்காடு-சேரன்மகா தேவி சாலையில் உள்ள பத்மநேரி இசக்கியம்மன் கோவில் அருகே சென்ற போது, எதிரே நெடுவிளை தெற்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரமேஷ் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும், முருகேஷ் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியது.

    இந்த விபத்தில் முருகேஷ், இசக்கி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து முருகேஷ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையிலும், இசக்கி சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய் யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா திசையன்விளை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றது
    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கி உணவுகள் வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக திசையன்விளை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கி உணவுகள் வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட அறங்காவல்குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெனி ஸ்டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, மார்த்தாண்டம், அமைச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் மௌலின், இசக்கி பாபு, நவ்வலடி சரவண குமார், திசைய ன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், உதயா, திசைய ன்விளை பேரூர் இளை ஞரணி அமை ப்பாளர் நெல்சன், உவரி அல்போன்ஸ், அந்தோனி, க. புதூர் ராம கிரு ஷ்ணன், ரம்கிஷோர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
    • வள்ளியூர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் பெட் கல்வியியல் கல்லூரி சார்பாக உலக சுற்றுச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வள்ளியூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

    பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் காஜா முகைதீன், பொருளாளர் ஜமாலுதீன் ஆகியோா முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பெபிலா ஜோஸ்பின் பேரணி குறித்து விளக்க உரையாற்றினார்.

    வள்ளியூர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியப் பயிற்சி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதத்தில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    • இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
    • 16-ந்தேதி திருஇருதய ஆண்டவர் திருப்பவனி நடக்கிறது.

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் பெருவிழா கொடியேற்றி திருப்பலி நடத்தினார். தொடர்ந்து நற்கருணை நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருஇருதய ஆண்டவர் திருப்பவனி நடக்கிறது. 17-ந்தேதி கூட்டு திருப்பலி, புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி கலந்து கொள்கிறார். 18-ந்தேதி காலை 10 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

    • பயிற்சி முகாமில் 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது.

    நெல்லை:

    தேசிய மாணவர் படையின் 3-வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் 4 மாவட்ட பள்ளி, கல்லூரி வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகள் பாளையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது. இதில் அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், கலை, சமூக செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வர்கள் மண்டல அளவி லான போட்டி களுக்கு தேர்வு செய்யப்பட உள்ள னர். அதில் தேர்வாகும் வீராங்கனைகள் குடியரசு தின விழா ஒத்திகைக்கு தகுதி பெறுவார்கள்.

    இன்று நடந்த போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டது.இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    20 மீட்டர் அளவில் உள்ள இலக்கை 5 ரவுண்டுகள் சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் இலக்கை நோக்கி சுட்டு அசத்தினர். அதிக முறை இலக்கில் சரியாக சுட்ட மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

    • அங்கக முறையில் பூச்சி, நோய் மேலாண்மை குறி்த்து விவசாயிகள் இடையே கலந்துரையாடினர்.
    • 3 நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

    அம்பை:

    நெல்லை மாவட்டம் அம்பை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான 3 நாள் விவசாயிகள் பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    கலந்துரையாடல்

    வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில் இந்த பயிற்சி நடந்தது.

    நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அங்கக சான்றளிப்புத் துறை பேராசிரியர் சுகந்தி, அங்கக பண்ணையம் செய்வதன் தற்போதைய நோக்கம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், பசுந்தாள் உரங்கள், மூலிகை பூச்சி விரட்டி பஞ்சகாவ்யா, மீன் அமினோ அமிலம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மண்புழு உரம் தயாரித்தல், ஊடுபயிர், பல வகைப்பயிர்கள், நிலப்போர்வை அமைத்தல், இயற்கை களைக்கொல்லி தயாரித்தல், அங்கக முறையில் பூச்சி, நோய் மேலான்மை குறி்த்து விவசாயிகள் இடையே கலந்துரையாடினர். அங்கக வேளாண் பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கக வேளாண்மை

    உதவி பேராசிரியர் சண்முக தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மா, கொய்யா, சப்போட்டா மற்றும் அங்கக வேளாண்மை செய்வதனால் கிடைக்கும் நிகர லாபம் மற்றும் அங்கக வேளாண் முறைகள் குறித்தும் அடர்நடவு முறை குறித்தும் பேசினார்.

    வேளாண் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கஸ்தூரி ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதன் மூலம் விவசாயிகள் தினமும் பெறும் வருமானம், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழிவளர்ப்பு, தீவனப்புல் உற்பத்தி, மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 3 நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன் , பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் பணியாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    • 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் அவர்கள் மொத்தமாக பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.

    அதிரடி சோதனை

    இதையடுத்து கமிஷனர் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மேஸ்திரி சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மனோஜ், முத்துராஜ், மாரியப்பன், சேக் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் டவுண் சத்தியமூர்த்தி தெரு, தெற்கு ரத வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த வியாபார கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுகாதார அலுவலர் இளங்கோ 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலப்பாளையம்

    அதேபோல் மேலப்பாளையம் சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சங்கர், பரப்புரையாளர்கள் கலை செல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன் , மரிய பாக்கியம், எல் சி எப் பணியாளர்கள் வேல்முருகன், முகமது சபி ஆகிய குழுவினர் மேலப்பாளையம் நேருஜி ரோடு, நேதாஜி சாலை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


     


    மேலப்பாளையத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார்,ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பழக்கடையில் சோதனை நடைபெற்றது.

    மேலப்பாளையத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார்,ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பழக்கடையில் சோதனை நடைபெற்றது.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
    • முகாமில் குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த மாதத்திற்கான முகாம் நாளை (10-ந் தேதி ) நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் புதிய அட்டை விண்ணப்பிப்பது உள்ளிட்ட குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    மேலும் மனு அளிக்க வருபவர்கள் குடும்ப அட்டை, ஆதார், பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும்.

    முகாம், பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 93424 71314 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
    • நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    திசையன்விளை:

    இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று திசையன்விளை தாசில்தார் முருகனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் இருந்து மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட பகுதிகளாக திசையன்விளை, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் கொண்டு செல்லும் வகையில் 2002-ம் ஆண்டு தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் கால மழை சரியாக பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே போர்கால அடிப்படையில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவித்து தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • போலீசார் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
    • விசாரணையில் அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    வள்ளியூர் கேசவநேரி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு வள்ளியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 50 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×