search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பை விவசாயிகளுக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 3 நாள் பயிற்சி
    X

    அம்பை விவசாயிகளுக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 3 நாள் பயிற்சி

    • அங்கக முறையில் பூச்சி, நோய் மேலாண்மை குறி்த்து விவசாயிகள் இடையே கலந்துரையாடினர்.
    • 3 நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

    அம்பை:

    நெல்லை மாவட்டம் அம்பை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான 3 நாள் விவசாயிகள் பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    கலந்துரையாடல்

    வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில் இந்த பயிற்சி நடந்தது.

    நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அங்கக சான்றளிப்புத் துறை பேராசிரியர் சுகந்தி, அங்கக பண்ணையம் செய்வதன் தற்போதைய நோக்கம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், பசுந்தாள் உரங்கள், மூலிகை பூச்சி விரட்டி பஞ்சகாவ்யா, மீன் அமினோ அமிலம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மண்புழு உரம் தயாரித்தல், ஊடுபயிர், பல வகைப்பயிர்கள், நிலப்போர்வை அமைத்தல், இயற்கை களைக்கொல்லி தயாரித்தல், அங்கக முறையில் பூச்சி, நோய் மேலான்மை குறி்த்து விவசாயிகள் இடையே கலந்துரையாடினர். அங்கக வேளாண் பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கக வேளாண்மை

    உதவி பேராசிரியர் சண்முக தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மா, கொய்யா, சப்போட்டா மற்றும் அங்கக வேளாண்மை செய்வதனால் கிடைக்கும் நிகர லாபம் மற்றும் அங்கக வேளாண் முறைகள் குறித்தும் அடர்நடவு முறை குறித்தும் பேசினார்.

    வேளாண் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கஸ்தூரி ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதன் மூலம் விவசாயிகள் தினமும் பெறும் வருமானம், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழிவளர்ப்பு, தீவனப்புல் உற்பத்தி, மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 3 நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன் , பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×