என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
    X

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்

    • நேற்று மாரியப்பன் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • இந்த விபத்தில் முருகேஷ், இசக்கி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    களக்காடு:

    அம்பை அருகே உள்ள ஊர்க்காடு வடக்குத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகேஷ் (வயது20). டிரைவராக உள்ளார். நேற்று இவர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் வடக்கு காருகுறிச்சியை சேர்ந்த சண்முகவேல் மகன் இசக்கியும் சென்றார்.

    களக்காடு-சேரன்மகா தேவி சாலையில் உள்ள பத்மநேரி இசக்கியம்மன் கோவில் அருகே சென்ற போது, எதிரே நெடுவிளை தெற்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரமேஷ் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும், முருகேஷ் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியது.

    இந்த விபத்தில் முருகேஷ், இசக்கி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து முருகேஷ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையிலும், இசக்கி சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய் யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×