என் மலர்
திருநெல்வேலி
- மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாய் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
- பள்ளத்தில் சிக்கிய லாரியால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் சாலியர் தெருவில் கடந்த சில மாதங்க ளாக மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாய் அமைப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது.இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சாலியார் தெரு வழியாக சென்ற மினி லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாலை போட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது கடந்த சில மாதங்களாக குழாய் பதிப்பதாகக்கூறி இருந்த சாலையையும் உடைத்து மண் சாலையாக மாற்றி விட்டார்கள். எனவே பணிகளை விரைந்து முடித்து தார்ச்சாலை போட வேண்டும் என்றனர்.
- துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி பேசினார்.
- நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அம்பை:
அம்பை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் வாகைக்குளம் கிராமத்தில் விவசாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பை ஒன்றிய குழு தலைவர் சிவனுபாண்டியன் என்ற பரணிசேகர் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மைத்துறை யில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி பேசினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி உழவன் செயலி பதிவேற்றம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலெட்சுமி நந்தகுமார், துணைத்தலைவர் சாமுவேல், மன்னார்கோவில் கவுன்சிலர் மாரியம்மாள் சண்முக குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கலாஜதா கலை நிகழ்ச்சியினை தென்காசி கலை வாணர் கலைகுழுவினர் நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மூலம் வேளாண்மை த்துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான உழவன் செயலி பதிவேற்றம், வேளாண் அடுக்குத்திட்டம் திட்டம் மூலம் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்வது குறித்தும், குளங்களில் இருந்து வண்டல் மண் எடுப்ப தற்கு அரசு தெரிவித்துள்ள வழிமுறைகள், நுண்ணீர் பாசனம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், சிறுதானியத்தின் முக்கியத்துவம், நெல் தரிசில் உளுந்து, மண்வள அட்டை, அங்கக வேளாண்மை போன்ற திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை உரைநடை வடிவிலும், கலை நிகழ்ச்சிகளான தப்பாட்டம், பறையாட்டம், சாட்டைகுச்சியாட்டம், கரகா ட்டம் போன்றவற்றின் மூலம் கிராம மக்களுக்கு எடுத்து கூறி னார்கள்.
நிகழ்ச்சியில் வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜய லெட்சுமி, சாமிராஜ் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சிவானந்தம் கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார்.
- வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கியபோது கீழே விழுந்த சிவானந்தம் படுகாயம் அடைந்தார்.
நெல்லை:
தாழையூத்து ஸ்ரீநகரை சேர்ந்தவர் பெரியநாயகம். இவரது மனைவி சிவனாந்தம் (வயது 68). பெரியநாயகம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
இந்நிலையில் நேற்று சிவானந்தம் கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது உறவினர் பால சுந்தரத்துடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மேல தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கியது.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவானந்தம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிவானந்தம் இறந்தார்.இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகரில் 4 மண்டலங்களிலும் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நெல்லை டவுனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் உள்ள காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகரில் 4 மண்டலங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் முன்னிலையில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. டவுன் தெற்கு மவுண்ட் ரோடு, கல்லணை தெரு, மேல மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் இன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படு கிறதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 11 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,400 அபராதமாக விதிக்கப்பட்டது.
- 4 பேர் தன்னை காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
- மாணவன் மாறி மாறி தகவல் தெரிவிப்பதால் அவரை உண்மையிலேயே யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் நேற்று அவன் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தேடிய நிலையில் மதுரையில் இருந்து தொடர்பு கொண்ட போலீசார் மாணவன் மதுரையில் இருப்பதாகவும், உடனே வந்து அழைத்துச் செல்லலாம் எனவும கூறியுள்ளனர்.
உடனே மாணவனின் பெற்றோர் அங்கு சென்று அவனை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து மாணவனிடம் கேட்டபோது நேற்று பள்ளிக்கு செல்லும்போது சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் தன்னை காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மதுரையில் இருந்த போலீசாரிடம் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை, அதனால் இங்கு வந்து விட்டதாக கூறியுள்ளார்.
மாணவன் மாறி மாறி தகவல் தெரிவிப்பதால் அவரை உண்மையிலேயே யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
- மேற்குரத வீதியில் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன.
நெல்லை:
பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோவிலில் மேற்கு ரத வீதியில் உள்ள ஆன்மீக மண்டபங்களில் வழிபாடு நடத்த தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் மேற்கு ரத வீதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இந்த பகுதியில் விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் நடைபாதை கடைகள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு விக்கிரமசிங்கபுரம் ஊர் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த இரும்பு கதவு அமைக்கும் பணியை ரத்து செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விக்ரமசிங்கப்புரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மனு சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் ஊர் பொதுமக்கள் சார்பாக 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாபநாச சுவாமி கோவிலின் மேற்கு ரத வீதியை பல நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். திடீரென நிர்வாக காரணங்கள் கூறி இந்து அறநிலையத்துறை இரும்பு கதவு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
23 சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் கோவிலின் பூஜைகள் தவறாமல் செய்து வந்தும், கோவிலை தூய்மையாகவும் பராமரித்து வருகிறோம். மேற்குரத வீதியில் இரும்பு கதவு பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதனை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
இவர் அந்த மனுவில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விக்கிர மசிங்கபுரம் பொதுமக்கள் கூறியதாவது:
மேற்குரத வீதியில் 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. தினசரி இந்த வீதி வழியாக இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. திடீரென இரும்பு கதவு அமைப்பதில் உள்நோக்கம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக அவர்கள் கொண்டு வந்த பாதாகைளை கலெக்டர் அலுவலக்திற்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் பறிமுதல் செய்த பதாகைகள்.
- பிரின்ஸ் ஷெல்டன் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- அக்கம் பக்கத்தினர் பிரின்ஸ் ஷெல்டனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
பாளை சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஷெல்டன் (வயது 28). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, கங்கைகொண்டான் சிப்காட் அருகே முன்னால் சென்ற டிராக்டர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத பிரின்ஸ் ஷெல்டன் டிராக்டரின் பின்புறத்தில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கங்கை கொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஜீவநதியாய் விளங்கும் தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில். இங்கு மூலவராக நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் அருள்பாலித்து வருகின்றனா்.
கொடியேற்றம்
நடராஜா் சன்னதி தாமிரசபை என்று அழைக்கப்படுகின்றது. மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாம தேவரிஷி, மணப்படை வீடு அரசன் ஆகி யோர்க ளுக்கு சிவபெருமான் தனது நடன தரிசனம் கொடுத்த சிறப்புடையது ஆகும்.
இங்கு எழுந்தருளியுள்ள அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிபட்டம் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடந்து கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராத னைகள் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வருகிற 22-ந் தேதி (வியாழன்) ஸ்ரீநடராஜ பெருமான் தாமிர சபையில் இருந்து திருவிழா மண்டபத்திற்கு ஏழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து சிகப்பு சாத்தி, வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி தாிசனம் நடைபெறுகின்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 24-ந் தேதியும், 25-ந் தேதி அழகிய கூத்தருக்கு ஆனித்திருமஞ்சனம் மற்றும் நடன தீபாராதனையும், சுவாமி வீதி உலாவும் நடை பெறுகிறது. கொடியேற்ற விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார்.
- மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூரில் நெல்லை மத்திய மாவட்டம் மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மைதீன்கான் தலைமை தாங்கினார். நெல்லை தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மேயர் சரவணன், துணை மேயா் கே.ஆர். ராஜூ, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், பாளை பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, புலிகண்ணன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், நெல்லை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மீரான்மைதீன், மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டியன், சுரேஷ், ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மணிகண்டன், சமுத்திரம் மற்றும் தொப்பிமைதீன், குழந்தை இயேசு, ஜெயச்சந்திரன், போத்திக்கண்ணு, ரவி, நயினாா், லெட்சுமணன், காளியப்பன், சுந்தா், மிக்கேல், ஜேக்கப், பால்ராஜ், தலைமை நிலைய பேச்சாளர்கள் நெல்லை ரவி, முத்தையா மற்றும் ஒன்றிய, கிளை செயலாளா்கள், பிரதிநிதி கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி செய்திருந்தார். முடிவில் பிரபாஅருள்மணி, ஜாஷகான் ஆகியோர் நன்றி கூறினர்.
- நாகராஜாவின் தாயார் பற்றி அஜித் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
- அஜித்தின் தலை மற்றும் கை இடுப்பு பகுதிகளில் நாகராஜா சரமாரியாக வெட்டினார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித் (வயது 25) கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற நாகராஜன் (25) இருவரும் நண்பர்கள்.
வாலிபர் கொலை
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது நாகராஜாவின் தாயார் பற்றி அஜித் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஜித்தின் தலை மற்றும் கை இடுப்பு பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பின்னர் அங்கிருந்து நாகராஜா தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உறவினர் வீட்டில் வைத்து இன்று நாகராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- சிங்கிகுளத்தில் இருந்து தேங்காய் தும்புகளை ஏற்றுக்கொண்டு ஒரு லாரி சென்றது.
- மின் வயரில் லாரியில் இருந்த தும்புகள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் என்ற பகுதியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு தேங்காய் தும்புகளை ஏற்றுக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
திடீர்தீ
லாரியை ஆலங்குளத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். லாரி சுமார் இரவு 8.30 மணியளவில் சேரன்மகாதேவி அடுத்த மேலச்சேவல் வாணியங்குளம் என்ற பகுதியில் வந்த போது லாரியின் அதிக பாரம் ஏற்றி சென்றதால் மேலே சென்ற மின் வயரில் லாரியில் இருந்த தும்புகள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது.
தொடர்ந்து தீ மளமளவென பிடித்து லாரியிலும் தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் லாரியை விட்டுவிட்டு டிரைவர் ஓடிவிட்டார்.
தொடர்ந்து தகவல் அறிந்த சேரன்மாதேவி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. திடீரென லாரி தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதினர்.
- அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும் பெற்றனர்.
திசையன்விளை:
மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்றனர்.
மாணவர்கள் அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும், அனிஷ் 487 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.






