என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே மொபட்டில் இருந்து தவறிவிழுந்த பெண் சாவு
    X

    நெல்லை அருகே மொபட்டில் இருந்து தவறிவிழுந்த பெண் சாவு

    • சிவானந்தம் கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார்.
    • வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கியபோது கீழே விழுந்த சிவானந்தம் படுகாயம் அடைந்தார்.

    நெல்லை:

    தாழையூத்து ஸ்ரீநகரை சேர்ந்தவர் பெரியநாயகம். இவரது மனைவி சிவனாந்தம் (வயது 68). பெரியநாயகம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

    இந்நிலையில் நேற்று சிவானந்தம் கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது உறவினர் பால சுந்தரத்துடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மேல தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கியது.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவானந்தம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிவானந்தம் இறந்தார்.இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×