search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகைக்குளம் கிராமத்தில் விவசாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
    X

    விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    வாகைக்குளம் கிராமத்தில் விவசாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    • துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி பேசினார்.
    • நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அம்பை:

    அம்பை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் வாகைக்குளம் கிராமத்தில் விவசாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அம்பை ஒன்றிய குழு தலைவர் சிவனுபாண்டியன் என்ற பரணிசேகர் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மைத்துறை யில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி உழவன் செயலி பதிவேற்றம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலெட்சுமி நந்தகுமார், துணைத்தலைவர் சாமுவேல், மன்னார்கோவில் கவுன்சிலர் மாரியம்மாள் சண்முக குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கலாஜதா கலை நிகழ்ச்சியினை தென்காசி கலை வாணர் கலைகுழுவினர் நடத்தினர்.

    இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மூலம் வேளாண்மை த்துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான உழவன் செயலி பதிவேற்றம், வேளாண் அடுக்குத்திட்டம் திட்டம் மூலம் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்வது குறித்தும், குளங்களில் இருந்து வண்டல் மண் எடுப்ப தற்கு அரசு தெரிவித்துள்ள வழிமுறைகள், நுண்ணீர் பாசனம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், சிறுதானியத்தின் முக்கியத்துவம், நெல் தரிசில் உளுந்து, மண்வள அட்டை, அங்கக வேளாண்மை போன்ற திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை உரைநடை வடிவிலும், கலை நிகழ்ச்சிகளான தப்பாட்டம், பறையாட்டம், சாட்டைகுச்சியாட்டம், கரகா ட்டம் போன்றவற்றின் மூலம் கிராம மக்களுக்கு எடுத்து கூறி னார்கள்.

    நிகழ்ச்சியில் வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜய லெட்சுமி, சாமிராஜ் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×