என் மலர்
தென்காசி
- சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
- தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.
தென்காசி:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகரானதாக கருதப்படும் இந்த கோவிலில் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே மீண்டும் தென்காசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையேற்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழமை வாய்ந்த தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா விரைவில் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நடத்த தீர்மானிக்கப்பட்டு ஏப்ரல் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்றது. அதன்படி கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ராஜ கோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

மேலும் பல்வேறு சிறப்பு பூஜைகள், தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் இரவு வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, திரவியாகுதி நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காசி விசுவநாதசுவாமி ராஜ கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லோக சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்தினார்.
பூஜைகளை காசி விசுவநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் செய்தனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் தென்காசியில் குவிந்தனர். இதனால் தென்காசி நகரமே விழாக்கோலம் பூண்டது.
கோவில் பகுதியில் எங்கு பார்த்தாலும் மனிதர்களாகவே காணப்பட்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ.. சிவ.. அரோகரா.. என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்.

கும்பாபிஷேக விழாவயொட்டி இன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, தென்காசி நாடார் சங்க தலைவர் ஏ.கே.எஸ். ராஜசேகரன் நாடார், செயலாளர் ராஜகோபால் நாடார், பொருளாளர் எஸ். ராஜன் நாடார் மற்றும் தருமை ஆதீனம், சிவனடியார்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் கதிமணி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 டி.எஸ்.பி.க்கள் உள்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் 11 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
- அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி:
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலும் ஒன்றாகும்.
இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பின்பு நாளை (திங்கட்கிழமை) காலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதையொட்டி தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற யாகசாலை சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி மற்றும் தருமை ஆதீனம் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் முழு வதும் இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மங்கள இசையுடன் யாகங்கள் நடைபெற்று வருவதால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தென்காசியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நாளை அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 5 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடக்கிறது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லேகசிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்துகிறார்.
காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் உள்ளிட்டோர் பூஜைகள் செய்கின்றனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களான ராஜகோபுரம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய இடங்களில் உபயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நின்று பார்வையிட ஏதுவாகவும், பாதுகாப்பு கருதியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளிலும், கோவில் வளாகத்திற்குள்ளும் நின்று கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு டிரோன் மூலம் தீர்த்தம் தெளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு களிக்க வசதியாக கோவில் மற்றும் ரத வீதிகளில் எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து தென்காசிக்கு வரும் பக்தர்கள் ஆசாத் நகர் பகுதியிலும், சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியும் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தென்காசி கோவில் மற்றும் வளாக பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தொட்ட படியும் ஐந்தருவில் 5 கிளைகளில் ஆர்ப்பரித்து கொட்டியும், பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளம் நடைபாதை வரையில் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் மிகவும் சொற்ப அளவியிலேயே விழுந்து வந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
- சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது. கோவில் ராஜகோபுரம் வர்ணம் தீட்டப்பட்டு, மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
7-ந் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. அதிகாலை 5 மணி அளவில் உலகம்மன் சன்னதி மண்டபத்தில் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க நடை பெற்றது.
நிகழ்ச்சியில சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆதினங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பால கிருஷ்ணன் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இன்று அதிகாலையில் தொடங்கிய யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
- 2 சனிக்கிழமைகள் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசியில் காசிவிசுவ நாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு 7 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
இந்த நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 26-ந் தேதி மற்றும் மே 3-ந்தேதி ஆகிய 2 சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது.
- தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது.
புளியங்குடி:
தென்காசி மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் புளியங்குடியில், தீய சக்தியை வேரறுப்போம் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-
தென்காசி மாவட்டம் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி, வாஞ்சிநாதன், பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.
தேசியவாதிகள் நிறைந்த மண் தென்காசி மண். தற்போது இந்த மாவட்டத்தில் கனிம கொள்ளை நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கல்வித்தரம் அதல பாதாளத்தில் உள்ளது. கண்ணியமான ஆசிரியர்கள் வாழ்ந்த பூமி இது. ஆனால் இந்த ஆட்சியில் தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.
மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.
கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி கூட இயங்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது நவோதயா பள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும். அந்த பள்ளிகளுக்கு கர்மவீரர் காமராஜர் பெயர் சூட்டப்படும். மாவட்டம் தோறும் 2 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
புளியங்குடியில் முக்கியமான விவசாயப் பயிரான எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி பெருகி விவசாயம் மேம்படும்.
தென்காசி மாவட்டத்தில் கனிம வளம் தொடர்ந்து களவாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் சூழலில் நீர் மேலாண்மைக்கும், விவசாயத்திற்கும், கல்விக்கும், தொழில் முனைவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமும் நடைபெறும்.
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது தமிழக பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.2,500 வழங்கப்படும்.
2026 தேர்தல் அல்ல. அது ஒரு புரட்சி. தலை குனிந்த தமிழகத்தை மீண்டும் தலை நிமிர செய்யப்போகும் கட்சி பா.ஜ.க. 2026 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கட்சி புரட்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.
- இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வியை தவிர எந்த ஆயுதமும் தங்கள் கையில் இல்லை, கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.
2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். நவோதயா பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஒரு வருடத்திற்கு ரூ.86,000 செலவு செய்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 96, குஜராத் மாநிலத்தில் 34 நவோதயா பள்ளிகள் உள்ளது. தமிழ்நாட்டின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதுபானம் மூலம் வருமானம் வருகிறது.
மது விற்பனை இல்லாத குஜராத் மாநிலத்தில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போடுகின்றனர். தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
- இளைஞர்கள் பயன்படுத்திய போதை ஊசிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் இளைஞர்கள் 8 பேரை கைது செய்தனர்.
மேலும், இளைஞர்கள் பயன்படுத்திய போதை ஊசிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல்லம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் போதை மருத்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கியது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.
தென்காசி:
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கருமேக கூட்டங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழ்நிலை நீடிப்பதால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்த நிலையில் விழுந்தது.
குற்றாலம் மெயின் அருவியில் இன்று மிதமாக விழும் தண்ணீரில் சில சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.
- 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.
- மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ் கூட்டத்தை மீட்டு தன்மானமிக்க தமிழ் பேரினமாக வாழ வைக்க இருக்கிற உங்கள் பிள்ளைகள்தான் நாங்கள். மலை தானே போனால் போகட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த வளத்தை உங்களால் உருவாக்க முடியாது. நேர்மையான ஆட்சி அமைந்தால் ஊழல், லஞ்சத்தை ஒழித்து விடலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கார் தருவோம். எல்லோருக்கும் ஒரு அலைபேசி தருவோம். அதற்கு சார்ஜர் கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றும் கூட்டம் அல்ல. நாங்கள் மக்கள் பிரச்சனைகளை கேட்க வந்தவர்கள், அவற்றை தீர்க்க வந்தவர்கள்.
உங்களை நம்பித்தான் நிலத்தை காக்க, வளத்தை காக்க, நாம் எல்லோரும் பெரும்படையாக நின்று இந்த மண்ணின் வளத்தை காத்து இன்னொரு தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உண்டு. 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.
ஒரு நேரத்தில் சீமான் என்றால் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வந்தார்கள். அனைத்து கட்சிகளும் இன்று நாம் வளர்ந்துவிட்டதை கண்டு பொறாமைப்படுகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக இந்த சீமான் இருக்கிறேன். என் பெயரை கேட்டாலே அவருக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை. ஆகவே மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு அதிக அளவில் கொடுக்கிறீர்கள். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. கேரளாவில் இயற்கை வளங்கள் மாறாமல் பசுமையாக வைத்து இருக்கிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு இன்று பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு நாங்கள் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
- தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் குளிக்க அனுமதி.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் இன்று காலை வரை பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நேற்று மாலையில் மட்டும் புலி அருவியில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு தொடர்ந்து பெய்த மழையினால் மீண்டும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புலி அருவியிலும் இன்று காலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது
அதாவது, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகமாக காணப்பட்டு வருவதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை குறைந்து தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
- மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், இன்று அதிகாலை சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ் , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் முருகன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜவேல் ரத்தினம், மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, வார்டு செயலாளர் வீரா மற்றும் ரகுமான், தொ.மு.ச. காந்திமதி நாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






