என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "4 people arrest"
- முகமது ரியாஸ் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்.
- பலூன் வியாபாரி முகமது ரியாசிடம், ஆரோக்கிய–செல்வகுமார், சையது முஸ்தபா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்
திருச்சி :
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பை சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது22). பலூன் வியாபாரியான இவர் காஜா பேட்டை மெயின் ரோட்டில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் பலூன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசெல்வகுமார், சையது முஸ்தபா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் பலூன் வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை இன்ஸ்பெக்டர் நிக்ஸன், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.
இதே போல் திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42). தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிந்தாமணி பஜார் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரிடம் வந்த சிந்தாமணியை சேர்ந்த வீரமணி(24), பாஸ்கர்(36) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சப் - இன்ஸ்பெக்டர் சட்டநாதன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
- காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
- அப்போது அனுமதியன்றி மது விற்ற 4 பேரை கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூரை சேர்ந்த ராம்குமார் (வயது 17) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (21) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த வைகுண்டன் (43) என்பவரிடமிருந்து 5 மது பாட்டில்களும், நாயகனைபிரியாள் வடக்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (58) என்பவரிடம் இருந்து 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க முயன்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்