search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் வியாபாரிகளிடம் கத்தி முனையில் வழிபறி செய்த 4 பேர் கைது
    X

    திருச்சியில் வியாபாரிகளிடம் கத்தி முனையில் வழிபறி செய்த 4 பேர் கைது

    • முகமது ரியாஸ் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்.
    • பலூன் வியாபாரி முகமது ரியாசிடம், ஆரோக்கிய–செல்வகுமார், சையது முஸ்தபா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்

    திருச்சி :

    திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பை சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது22). பலூன் வியாபாரியான இவர் காஜா பேட்டை மெயின் ரோட்டில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் பலூன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்பொழுது அங்கு வந்த முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசெல்வகுமார், சையது முஸ்தபா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் பலூன் வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை இன்ஸ்பெக்டர் நிக்ஸன், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

    இதே போல் திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42). தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிந்தாமணி பஜார் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரிடம் வந்த சிந்தாமணியை சேர்ந்த வீரமணி(24), பாஸ்கர்(36) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சப் - இன்ஸ்பெக்டர் சட்டநாதன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×