என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கல்லூரி வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் தனியார் பி.எட்., கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் கல்லூரி வாகனத்தில் கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை பகுதியில் வந்த போது டிரைவருக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் வழிவரைபடத்தை பார்ப்பதற்காக ஆசிரியர் ஒருவரிடம் செல்போன் கேட்டுள்ளார். அப்போது அந்த ஆசிரியர் வழிவரைபடத்தை செல்போனில் தேர்வு செய்து டிரைவரிடம் காண்பித்துள்ளார். அதனை பார்த்து கொண்டே டிரைவர் வாகனத்தை ஓட்டி உள்ளார். அப்போது வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகியது. அங்கிருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் சரிந்து நின்றது. அதிஷ்டவசமாக அதம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு மாணவிக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டது. மற்ற மாணவிகள் சிறு காயங்களுடன் தப்பினர்.டிரைவரும் சிறிய காயத்துடன் தப்பினார். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    • நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்குமா? என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தேவகோட்டை

    நியோமேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ. 5000 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சைமன், கபில் ஆகிய 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல ஆயிரம் கோடிகளை நியோமேக்ஸ் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து, ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா ஆகியவை ஏற்பாடு செய்து அவர்களை கவர்ந்துள்ளனர்.

    இதனால் அதிகளவில் முதலீட்டாளர்கள் சேர்ந்தனர். அவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள் ளனர். உறவினர்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    மேலும் மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வெளிநாட்டில் வேலை செய்வோர் ஆகியோர் அதிகளவில் இந்த நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

    அவர்களை குறிவைத்து நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நம்ப வைத்து மோசடி செய்துள்ளனர்.

    எங்களிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை உங்களுக்கு வட்டி கொடுப்போம் என்று நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஏஜென்டுகள் முதலீட்டா ளர்களிடம் கூறியுள்ளனர்.

    முதலீட்டாளர் கூட்டங்களுக்கு இயக்கு னர்கள், ஏஜெண்டு கள் விலை உயர்ந்த கார்களில் வருவதை பார்த்து ஆர்வத்துடன் முதலீடு செய்துள்ளனர்.

    தேவகோட்டை பகுதி களில் நியோமேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் ஏஜெண்டு களாக உள்ளனர். இவர்க ளின் சொகுசு வாழ்க்கையை பார்த்து பொது மக்கள் ஆசைப்பட்டு அதிக பணத்தை கட்டியுள்ளனர்.

    ஆனால் தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை நம்பி நியோமேக்ஸ் நிறுவ னத்தில் முதலீடு செய்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    • உலக கிக் பாக்சிங் போட்டிக்கு சிவகங்கை வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • அவருக்கு நகர்மன்ற தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை தெற்கு ராஜவீதியில் வசிக்கும் பூபதி -ரேவதி தம்பதியரின் மகன் விக்னேஷ். இவர் சிறுவயதில் இருந்தே கிக் பாக்ஸிங் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததை அறிந்த இவரது பெற்றோர் 2015-ல் சிவகங்கையை சேர்ந்த நிமலன் நீலமேகம் என்ப வரிடம் குத்துச்சண்டை பயிற்சிக்கு சேர்த்தனர்.

    இதனை அடுத்து 2018ல் மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற விக்னேஷ், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் 2019ல் பெங்களூரில் நடைபெற்ற நேஷனல் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.

    அதே ஆண்டில் சோழன் புக் ஆப் ரெகார்ட்ஸ் சிறந்த கிக்பாக்ஸர் விருதையும் பெற்றார். அதன் பிறகு குணசீலன் என்பவரிடம் கிக் பாக்ஸிங் பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில அளவிலான நடைபெற்ற போட்டியிலும் தங்க பதக்கம் பெற்றார். கடந்த 1-ந் தேதி முதல் 5-ந்தேதி வரை நேஷனல் போட்டி தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கிக் பாக்சிங் போட்டிக்கு தேர்வு உள்ளார்.சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் கிக் பாக்ஸிங் வீரர் விக்னேஷ் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து மேலும் ரொக்க தொகை வழங்கி ஊக்குவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ஜெயகாந்தன், ராமநாதன், ராஜேஸ்வரி ராம்தாஸ், வண்ணம்மாள் சரவணன், பிரியங்கா சண்முகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • திருப்புவனம் பகுதியில் கோவில் மாடுகள் சாலைகளில் திரிகின்றன.
    • வாகனங்களை சேதப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மிக பெரிய பேரூராட்சி ஆகும். திருப்புவனத்தில் பஸ் நிலையம் இல்லாததால் மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பஸ்கள், மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் திருப்புவனம் மடப்புரம் மற்றும் சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு திருப்புவனம் வழியேதான் செல்கிறது. இதனால் காலைமுதல் இரவு வரை திருப்புவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். திருப்புவனம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி விடப்பட்ட ஏராளமான காளைமாடுகள் தற்போது சாலை பகுதியிலும், பொதுமக்கள் கூடும் பஸ்நிறுத்தம், பேரூராட்சி, போலீஸ் நிலையம், மத்தியகூட்டுறவு வங்கி, சார்பதிவாளர் அலுவலம் ஆகிய இடங்க ளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக வலம்வருகிறது.

    சில சமயங்களில் மாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சாலைஓரங்களில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்களை சேதபடுத்திவரும் நிலையும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பஸ் நிறுத்தத்தில் நிற்கும் வெளியூர் பயணிகள் மாடுகள் திடீரென்று ஓடும் போது பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். சிலமாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வரும் போது கூட்டமாக வரும் மாடுகள் முட்டி சாலையில் விழுந்து ஒருவர் இறந்து போனார்.

    மாடுகளை ஆட்களை வைத்து பிடிக்க ஏற்பாடுகள் செய்து மாடுபிடிக்க முயல்பவர்களை காளைமாடுகள் முட்டவருவதால் பிடிக்க முடியாமலும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தினறிவருகின்றனர்.

    எனவே திருப்புவனம் பகுதியில் சுற்றி திரியும்கோவில் மாடுகளை கோசாலையில் அடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக் கப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
    • கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக் கப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா வுக்கு இயற்பியல்துறை தலைவர் முஸ்தாக் அஹமது கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹ மது ஜலாலுதீன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பி னர் ஹமீத் தாவூத், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராக திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, மேனாள் துணை முதல்வர் முஹம்மது சஹாபுதீன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கல்லூரி முதல் வர் ஜபருல்லாஹ் கான் முதலாமாண்டு மாணவ-மாணவியருக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத் துரைத்தார்.

    நிகழ்வில் 2019-ம் முதல் 2022-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவ-மாணவி களுக்கு பதக்கம் வழங்கப்பட் டது. நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்ரப் அலி மற்றும் அப்துல் சலீம், இளையான் குடி ஊர் பிரமுகர்கள் முஹம்மது ஹுசைன், முசாதிக் அலி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பேரா சிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர், பெற் றோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார்.

    • கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.
    • கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி–யில், ரூ.2.93 கோடி புதிய திட்டப்பணிக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.89 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட் டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், மாநிலத் திலுள்ள அனைத்து மாவட் டங்களிலும் சீரான வளர்ச் சியை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும், தொலைநோக்கு பார்வை–யுடன் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளா–தார வசதி மேம்பாடு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்தை–யும் தமிழகம் முழுவதும் மேம்படுத்தி, பிற மாநிலங்க–ளுக்கு முன்மாதிரியான முதலமைச்சராகவும், முதன் மையான முதலமைச்சரா–கவும் தமிழ்நாடு முதல–மைச் சர் திகழ்ந்து வருகிறார்.

    மேலும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற–வாறு, அனைத்து அடிப் படை கட்டமைப்பு வசதிக–ளையும் மேம்படுத்த வேண் டிய கடமையும் அரசிற்கு உள்ளது. அதன–டிப்படை–யில், சிவகங்கை மாவட்டத் தில், மாவட்டத்தின் கடைக் கோடி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளும் துரி–தமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திருப்பு–வனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச் சிப்ப–ணிகள் பொது–மக்க–ளுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    குறிப்பாக கண்டரமா–ணிக்கம் ஊராட்சியில் மட்டும் நமக்கு நாமே திட்டம் 15-வது நிதிக்குழு மானியத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு–தித்திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி, ஒன்றிய பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 68 பணிகள் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மணி–வண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றி–யக்குழுத் தலைவர் சொர் ணம் அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சு–மணன், ஊராட்சி மன்றத்த–லைவர்கள் ராமு (கண்டர–மாணிக்கம்), இளம்பரிதி (கள்ளிப்பட்டு), சுப்பிர–மணியன் (செவரக் கோட்டை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், சுந்தரம் அரசு அலுவலர்கள், தொழிலதிபர் மணிகண்டன் (கண்டரமா–ணிக்கம் வளர்ச்சிக்குழு) பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது.
    • மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது. மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் வாழ்த்து தெரிவித்தனர்.

    காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் திருமண மண்டபத்தில் வேலங்குடி சுசிலா-துரை ராஜ் தம்பதியின் இளைய மகனும், பா.ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில துணைத்தலைவரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான பாண்டித்துரை சகோதரருமான கார்த்திகேயன், பள்ளத்தூர் சபாரத்தினம்-சாந்தி தம்பதியின் மகள் தாரணி ஆகியோரது திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முருகன், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பி இருந்தனர்.

    திருமண விழாவில் மணமக்கள் கார்த்திகேயன்-தாரணியை மதுரை ஆதீனம், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், தென் பெருங்கோட்ட பொறுப்பா ளர் நரசிங்கப்பெருமாள், மாநில விவசாய பிரிவு துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், பா.ஜனதா மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.வி.நாராயணன், சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், தொழிலதிபர்கள் பி.எல்.படிக்காசு, பொன் பாஸ்கர் மாங்குடி எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள், வர்த்தக பிரமு கர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவிற்கு வந்தவர்களை சுசிலா துரை ராஜ், பாண்டித்துரை-திவ்ய குமாரி தம்பதியினர் வரவேற்றனர்.

    • வாராப்பூர் ஊராட்சியில் ரூ.1.30 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்து வமனை பங்களிப்புடன் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் விழாவில் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை கல்வி வளம் மிகுந்த மாநில மாக உருவெடுக்கும் பொருட்டு சிறந்த திட்டங் களை கல்வித்துறையில் செயல்படுத்தி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு தனித்தனியாக அதிகளவில் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து கல்வி துறையை மேம்படுத்தி வருகிறார்.

    பள்ளிக்கல்வித்து றையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திடும் வகையில் மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான கல்வி உப கரணங்கள் வழங்கி வருகிறார். அது மட்டுமன்றி ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், வகுப்பறையில் தேவையான பொருட்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்கின்ற ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவ்வாறு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுது ணையாக இருந்திடும் வகை யில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் அரசிற்கு மேலும் வலு சேர்த்து வருகின்றனர்.

    அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அரசுடன் இணைந்து, பொதுமக்களின் பங்களிப்பு டனும் பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

    அந்த வகையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் சேதுராமன் பிறந்த ஊரான வாராப்பூர் ஊராட்சியில் தான் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை மேம்படுத்தும் விதமாக புதிய பள்ளி கட்டிடத்துடன் நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தி இந்த ஊராட்சிக்கு வழங்கி பெருமை சேர்த்துள் ளார்.

    சேதுராமனின் கனவை நினைவாக்குகின்ற வகையில் அவரது புதல்வன் டாக்டர் குருசங்கர் சிறப் பான பணியை மேற் கொண்டு தனது தந்தைக்கு பெருமை சேர்த்து மருத்துவ சேவை மட்டுமன்றி, கல்வி சேவையும் புரிந்துள்ளார்.

    இச்சேவையினை வழங்கிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த பாராட்டுகளை அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாங்கள் தற்போது வழங்கி உள்ள இக்கொடை மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வ தற்கும், இதுபோன்று பல்வேறு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசிற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் எனவும் இந்த நேத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன், தலைவர் டாக்டர் எஸ்.குரு சங்கர், மேலாளர் கோபால கிருஷ்ணன், பிராண்டிங் அண்ட் மார்க்கெட்டிங் கார்த்திக் ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன்,திட்ட இயக்குனர் சிவ ராமன், மாவட்ட கல்வி அலுவலர்களான அம்பி காபதி, சுவாமிநாதன், சந்திர சேகர், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, தலை மையாசிரியர் அலமேலு மங்கை, திருப்புவனம் சேர்மன் வேங்கை மாறன், மாணவரணி ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், எஸ்.புதூர் ஒன்றிய செய லாளர் செல்வராஜ், கட்டிட ஒப்பந்ததாரர் வி. என். ஆர். கன்ஸ்ட்ரக்சன் நாகராஜன், மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட தி.மு.க. ஒன்றிய நகர், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • ஆ.தெக்கூரில் மகளிர் கையுந்து பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவி களுக்கு கல்லூரி முதல்வர் உமா பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூரில் செயல்பட்டு வரும் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காளாப்பூர் வாலிபால் நண்பர்கள் மற்றும் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பாலாஜி ஆசை நண்பர்கள் சார்பில் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் உமா முன்னிலை வகித்தார். நெற்குப்பை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அய்யனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இப்போட்டியில் முதல் பரிசை மதுரை அமெரிக்கன் கல்லூரியும், 2-ம் பரிசை மதுரை லேடி டோக் கல்லூரியும், 3-ம் பரிசை ஆ.தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கல்லூரியும், 4-ம் பரிசை மதுரை யாதவா கல்லூரியும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவி களுக்கு கல்லூரி முதல்வர் உமா பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.

    • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி ஆகியோர் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அங்கு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் சமையல் கூடம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.

    ஆனால் பலனில்லை. அதற்கு மாறாக தீ பேக்கரி முழுவதும் பரவியது. உடனே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் பேக்கரி கடையில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள உணவு வகைகள், இனிப்பு தயாரிக்கும் எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமாகின.

    இந்த சம்பவம் தொடர்பாக காரைக்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.
    • விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம்.

    மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.

    ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்.

    அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது.

    விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். இதற்கு முன்பாக மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நீதிமன்றம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக் குமரன், சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் 13 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 7 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 34 காசோலைகள் வழக்கு களும் என மொத்தம் 54 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 8 வழக்குகள் சமர சமாக தீர்க்கப்பட்டு ரூ.38 லட்சத்து75ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட 405 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 63 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    ×