என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆளுநர் மட்டுமல்ல... நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்- சீமான்
- மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.
- விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம்.
காரைக்குடி:
காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம்.
மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.
ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்.
அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது.
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். இதற்கு முன்பாக மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.






