என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மக்கள் தொடர்பு முகாமில் ரூ.65 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கலெக்டர், எம்.எல்.ஏ. பவர்டிரில்லர்களை வழங்கினர்.

    மானாமதுரை

    சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூ.64.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினர்.

    இதில் 26 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து17ஆயிரத்து 119 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை ஆணைகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்து பெட்டகம் மற்றும் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகளும், 2 மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் குழுவுக்கான சுழல் நிதிக்கான ஆணையும், 02 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பவர்டி ரில்லர்களையும், தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 573 மதிப்பீட்டிலான கேசிசி கரும்பு கடனுதவிகளும், 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத் துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத் துறை) ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை, எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன், வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், மருத்துவ அலுவலர் சந்தான வித்யா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் திரு மூர்த்தி, சுகாதார ஆய்வா ளர்கள் சதீஸ்குமார், குருபிரகாஸ், கிராம சுகாதார செவிலியர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஊர்வலம் சென்றனர்.

    பின்னர் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் செயல் விளக்கம் அளித்த னர். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • தனியார் பள்ளி பஸ் டிரைவர், உதவியாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • வட்டார போக்குவரத்து அதிகாரி வாகனங்களை ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள பெரிய கோட்டை தனியார் பள்ளி வாகனம் ஓட்டுனரின் கவன குறைவால் விபத்துக் குள்ளானது. இதில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இறந்தான். 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    தற்போது தனியார் பள்ளியில் இயக்கப்படும் வாகனங்கள், மற்றும் ஓட்டுநர்கள், உதவியா ளர்களுக்கு மாணவர்களை கையாளும் விதம், பாது காப்பான பயணம் குறித்து அறிவுரை கூறப்பட்டுள்ளது. இது போன்ற விபத்து இனி ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும், அரசு விதிமுறை களை ஓட்டுநர்கள், உதவி யாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.

    அஜாக்கிரதையாக இருந்தால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேசிய நெடுஞ்சாலையோரம் 2 ஆயிரம் மரக்கன்று நடும்விழா நடந்தது.
    • தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாபட்டு அருகே புதிதாக 45 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது.

    இந்த விழாவில் தேசிய நெடுஞ்சாலை மதுரை மண்டல அலுவலர் அஜய் பிஸ்நோய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். திட்ட இயக்குநர் நாகராஜ், இணை மேலாளர் சுமித் தேவ்டா, சிறப்பு வட்டாட்சியர்கள் மூர்த்தி, செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகாரி களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வழக்கறிஞர் நவநீதன், வாணியங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் தனியார் பி.எட்., கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் கல்லூரி வாகனத்தில் கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை பகுதியில் வந்த போது டிரைவருக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் வழிவரைபடத்தை பார்ப்பதற்காக ஆசிரியர் ஒருவரிடம் செல்போன் கேட்டுள்ளார். அப்போது அந்த ஆசிரியர் வழிவரைபடத்தை செல்போனில் தேர்வு செய்து டிரைவரிடம் காண்பித்துள்ளார். அதனை பார்த்து கொண்டே டிரைவர் வாகனத்தை ஓட்டி உள்ளார். அப்போது வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகியது. அங்கிருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் சரிந்து நின்றது. அதிஷ்டவசமாக அதம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு மாணவிக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டது. மற்ற மாணவிகள் சிறு காயங்களுடன் தப்பினர்.டிரைவரும் சிறிய காயத்துடன் தப்பினார். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    • நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்குமா? என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தேவகோட்டை

    நியோமேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ. 5000 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சைமன், கபில் ஆகிய 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல ஆயிரம் கோடிகளை நியோமேக்ஸ் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து, ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா ஆகியவை ஏற்பாடு செய்து அவர்களை கவர்ந்துள்ளனர்.

    இதனால் அதிகளவில் முதலீட்டாளர்கள் சேர்ந்தனர். அவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள் ளனர். உறவினர்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    மேலும் மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வெளிநாட்டில் வேலை செய்வோர் ஆகியோர் அதிகளவில் இந்த நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

    அவர்களை குறிவைத்து நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நம்ப வைத்து மோசடி செய்துள்ளனர்.

    எங்களிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை உங்களுக்கு வட்டி கொடுப்போம் என்று நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஏஜென்டுகள் முதலீட்டா ளர்களிடம் கூறியுள்ளனர்.

    முதலீட்டாளர் கூட்டங்களுக்கு இயக்கு னர்கள், ஏஜெண்டு கள் விலை உயர்ந்த கார்களில் வருவதை பார்த்து ஆர்வத்துடன் முதலீடு செய்துள்ளனர்.

    தேவகோட்டை பகுதி களில் நியோமேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் ஏஜெண்டு களாக உள்ளனர். இவர்க ளின் சொகுசு வாழ்க்கையை பார்த்து பொது மக்கள் ஆசைப்பட்டு அதிக பணத்தை கட்டியுள்ளனர்.

    ஆனால் தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை நம்பி நியோமேக்ஸ் நிறுவ னத்தில் முதலீடு செய்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    • உலக கிக் பாக்சிங் போட்டிக்கு சிவகங்கை வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • அவருக்கு நகர்மன்ற தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை தெற்கு ராஜவீதியில் வசிக்கும் பூபதி -ரேவதி தம்பதியரின் மகன் விக்னேஷ். இவர் சிறுவயதில் இருந்தே கிக் பாக்ஸிங் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததை அறிந்த இவரது பெற்றோர் 2015-ல் சிவகங்கையை சேர்ந்த நிமலன் நீலமேகம் என்ப வரிடம் குத்துச்சண்டை பயிற்சிக்கு சேர்த்தனர்.

    இதனை அடுத்து 2018ல் மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற விக்னேஷ், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் 2019ல் பெங்களூரில் நடைபெற்ற நேஷனல் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.

    அதே ஆண்டில் சோழன் புக் ஆப் ரெகார்ட்ஸ் சிறந்த கிக்பாக்ஸர் விருதையும் பெற்றார். அதன் பிறகு குணசீலன் என்பவரிடம் கிக் பாக்ஸிங் பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில அளவிலான நடைபெற்ற போட்டியிலும் தங்க பதக்கம் பெற்றார். கடந்த 1-ந் தேதி முதல் 5-ந்தேதி வரை நேஷனல் போட்டி தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கிக் பாக்சிங் போட்டிக்கு தேர்வு உள்ளார்.சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் கிக் பாக்ஸிங் வீரர் விக்னேஷ் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து மேலும் ரொக்க தொகை வழங்கி ஊக்குவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ஜெயகாந்தன், ராமநாதன், ராஜேஸ்வரி ராம்தாஸ், வண்ணம்மாள் சரவணன், பிரியங்கா சண்முகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • திருப்புவனம் பகுதியில் கோவில் மாடுகள் சாலைகளில் திரிகின்றன.
    • வாகனங்களை சேதப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மிக பெரிய பேரூராட்சி ஆகும். திருப்புவனத்தில் பஸ் நிலையம் இல்லாததால் மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பஸ்கள், மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் திருப்புவனம் மடப்புரம் மற்றும் சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு திருப்புவனம் வழியேதான் செல்கிறது. இதனால் காலைமுதல் இரவு வரை திருப்புவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். திருப்புவனம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி விடப்பட்ட ஏராளமான காளைமாடுகள் தற்போது சாலை பகுதியிலும், பொதுமக்கள் கூடும் பஸ்நிறுத்தம், பேரூராட்சி, போலீஸ் நிலையம், மத்தியகூட்டுறவு வங்கி, சார்பதிவாளர் அலுவலம் ஆகிய இடங்க ளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக வலம்வருகிறது.

    சில சமயங்களில் மாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சாலைஓரங்களில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்களை சேதபடுத்திவரும் நிலையும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பஸ் நிறுத்தத்தில் நிற்கும் வெளியூர் பயணிகள் மாடுகள் திடீரென்று ஓடும் போது பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். சிலமாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வரும் போது கூட்டமாக வரும் மாடுகள் முட்டி சாலையில் விழுந்து ஒருவர் இறந்து போனார்.

    மாடுகளை ஆட்களை வைத்து பிடிக்க ஏற்பாடுகள் செய்து மாடுபிடிக்க முயல்பவர்களை காளைமாடுகள் முட்டவருவதால் பிடிக்க முடியாமலும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தினறிவருகின்றனர்.

    எனவே திருப்புவனம் பகுதியில் சுற்றி திரியும்கோவில் மாடுகளை கோசாலையில் அடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக் கப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
    • கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக் கப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா வுக்கு இயற்பியல்துறை தலைவர் முஸ்தாக் அஹமது கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹ மது ஜலாலுதீன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பி னர் ஹமீத் தாவூத், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராக திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, மேனாள் துணை முதல்வர் முஹம்மது சஹாபுதீன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கல்லூரி முதல் வர் ஜபருல்லாஹ் கான் முதலாமாண்டு மாணவ-மாணவியருக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத் துரைத்தார்.

    நிகழ்வில் 2019-ம் முதல் 2022-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவ-மாணவி களுக்கு பதக்கம் வழங்கப்பட் டது. நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்ரப் அலி மற்றும் அப்துல் சலீம், இளையான் குடி ஊர் பிரமுகர்கள் முஹம்மது ஹுசைன், முசாதிக் அலி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பேரா சிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர், பெற் றோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார்.

    • கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.
    • கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி–யில், ரூ.2.93 கோடி புதிய திட்டப்பணிக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.89 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட் டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், மாநிலத் திலுள்ள அனைத்து மாவட் டங்களிலும் சீரான வளர்ச் சியை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும், தொலைநோக்கு பார்வை–யுடன் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளா–தார வசதி மேம்பாடு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்தை–யும் தமிழகம் முழுவதும் மேம்படுத்தி, பிற மாநிலங்க–ளுக்கு முன்மாதிரியான முதலமைச்சராகவும், முதன் மையான முதலமைச்சரா–கவும் தமிழ்நாடு முதல–மைச் சர் திகழ்ந்து வருகிறார்.

    மேலும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற–வாறு, அனைத்து அடிப் படை கட்டமைப்பு வசதிக–ளையும் மேம்படுத்த வேண் டிய கடமையும் அரசிற்கு உள்ளது. அதன–டிப்படை–யில், சிவகங்கை மாவட்டத் தில், மாவட்டத்தின் கடைக் கோடி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளும் துரி–தமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திருப்பு–வனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச் சிப்ப–ணிகள் பொது–மக்க–ளுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    குறிப்பாக கண்டரமா–ணிக்கம் ஊராட்சியில் மட்டும் நமக்கு நாமே திட்டம் 15-வது நிதிக்குழு மானியத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு–தித்திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி, ஒன்றிய பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 68 பணிகள் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மணி–வண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றி–யக்குழுத் தலைவர் சொர் ணம் அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சு–மணன், ஊராட்சி மன்றத்த–லைவர்கள் ராமு (கண்டர–மாணிக்கம்), இளம்பரிதி (கள்ளிப்பட்டு), சுப்பிர–மணியன் (செவரக் கோட்டை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், சுந்தரம் அரசு அலுவலர்கள், தொழிலதிபர் மணிகண்டன் (கண்டரமா–ணிக்கம் வளர்ச்சிக்குழு) பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது.
    • மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது. மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் வாழ்த்து தெரிவித்தனர்.

    காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் திருமண மண்டபத்தில் வேலங்குடி சுசிலா-துரை ராஜ் தம்பதியின் இளைய மகனும், பா.ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில துணைத்தலைவரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான பாண்டித்துரை சகோதரருமான கார்த்திகேயன், பள்ளத்தூர் சபாரத்தினம்-சாந்தி தம்பதியின் மகள் தாரணி ஆகியோரது திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முருகன், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பி இருந்தனர்.

    திருமண விழாவில் மணமக்கள் கார்த்திகேயன்-தாரணியை மதுரை ஆதீனம், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், தென் பெருங்கோட்ட பொறுப்பா ளர் நரசிங்கப்பெருமாள், மாநில விவசாய பிரிவு துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், பா.ஜனதா மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.வி.நாராயணன், சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், தொழிலதிபர்கள் பி.எல்.படிக்காசு, பொன் பாஸ்கர் மாங்குடி எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள், வர்த்தக பிரமு கர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவிற்கு வந்தவர்களை சுசிலா துரை ராஜ், பாண்டித்துரை-திவ்ய குமாரி தம்பதியினர் வரவேற்றனர்.

    • வாராப்பூர் ஊராட்சியில் ரூ.1.30 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்து வமனை பங்களிப்புடன் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் விழாவில் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை கல்வி வளம் மிகுந்த மாநில மாக உருவெடுக்கும் பொருட்டு சிறந்த திட்டங் களை கல்வித்துறையில் செயல்படுத்தி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு தனித்தனியாக அதிகளவில் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து கல்வி துறையை மேம்படுத்தி வருகிறார்.

    பள்ளிக்கல்வித்து றையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திடும் வகையில் மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான கல்வி உப கரணங்கள் வழங்கி வருகிறார். அது மட்டுமன்றி ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், வகுப்பறையில் தேவையான பொருட்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்கின்ற ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவ்வாறு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுது ணையாக இருந்திடும் வகை யில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் அரசிற்கு மேலும் வலு சேர்த்து வருகின்றனர்.

    அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அரசுடன் இணைந்து, பொதுமக்களின் பங்களிப்பு டனும் பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

    அந்த வகையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் சேதுராமன் பிறந்த ஊரான வாராப்பூர் ஊராட்சியில் தான் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை மேம்படுத்தும் விதமாக புதிய பள்ளி கட்டிடத்துடன் நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தி இந்த ஊராட்சிக்கு வழங்கி பெருமை சேர்த்துள் ளார்.

    சேதுராமனின் கனவை நினைவாக்குகின்ற வகையில் அவரது புதல்வன் டாக்டர் குருசங்கர் சிறப் பான பணியை மேற் கொண்டு தனது தந்தைக்கு பெருமை சேர்த்து மருத்துவ சேவை மட்டுமன்றி, கல்வி சேவையும் புரிந்துள்ளார்.

    இச்சேவையினை வழங்கிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த பாராட்டுகளை அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாங்கள் தற்போது வழங்கி உள்ள இக்கொடை மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வ தற்கும், இதுபோன்று பல்வேறு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசிற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் எனவும் இந்த நேத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன், தலைவர் டாக்டர் எஸ்.குரு சங்கர், மேலாளர் கோபால கிருஷ்ணன், பிராண்டிங் அண்ட் மார்க்கெட்டிங் கார்த்திக் ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன்,திட்ட இயக்குனர் சிவ ராமன், மாவட்ட கல்வி அலுவலர்களான அம்பி காபதி, சுவாமிநாதன், சந்திர சேகர், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, தலை மையாசிரியர் அலமேலு மங்கை, திருப்புவனம் சேர்மன் வேங்கை மாறன், மாணவரணி ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், எஸ்.புதூர் ஒன்றிய செய லாளர் செல்வராஜ், கட்டிட ஒப்பந்ததாரர் வி. என். ஆர். கன்ஸ்ட்ரக்சன் நாகராஜன், மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட தி.மு.க. ஒன்றிய நகர், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×