search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullock-cart racing"

    • சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளை வயல்காளியம்மன் கோவில் ஆனி திருவிழாவை முன்னிட்டு மருது பாண்டியர் களின் நினைவாக, சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ் சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இப்போட்டி பெரிய மாடு, சின்ன மாடு, நடுமாடு, பூச்ஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது, இப்போட்டியை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குணசேக ரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, தேனி, கம்பம் உள்ளிட்ட ஆறு மாவட்டங் களை சேர்ந்த 55 வண்டிகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் முதல் பரிசு 30 ஆயிரத்தை மதுரையை சேர்ந்த அக்னி முருகனுக்கும், இரண்டாம் பரிசான 20 ஆயிரம் திருச்சியை சேர்ந்த செந்திலுக்கும், சின்ன மாட்டு பிரிவில் முதல் பரிசை சிவகங்கை பழனிக் கும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.

    • ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வனப்பேச்சி அம்மன் கோவில் வருடா பிஷேகத்தை முன்னிட்டு பூஞ்சிட்டு, சின்ன மாடு, நடுமாடு ஆகிய 3 பிரிவு களாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மறவர் கரிசல்குளம் வில்வ லிங்கத்தின் மாடும், 2-வது பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடும், 3-வது பரிசை ஆப்பனூர் அனுஸ்ரீ, மேலக்கிடாரம் ஜெனிதாவின் மாடும் பெற்றன.

    நடுமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடும், 2-வது பரிசை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மாடும், 3-வது பரிசை பூலாங்கால் காதர்பாட்ஷா மாடும் பெற்றன.

    சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்தரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை மறவர் கரிசல்குளம் கருப்புத் துறை மாடும், 3-வது பரிசை பூலாங்கால் சிவஞானபு ரம் மந்திரமூர்த்தி மாடும் பெற்றன.

    இந்த பந்தயத்தில் சின்ன மாடு போட்டியில் சக்கரம் இல்லாமல் 2 கிலோமீட்டர் தூரம் வண்டியை ஓட்டி வந்து முதல் பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் ரவிச்சந்திர ராமவன்னி சிறப்புரையாற்றினார்.

    வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகன், உதயகுமார், ஆதிமுத்து, ஒன்றிய பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணசாமி, ராமசாமி, போஸ், நெசவாளரணி மாரிச்சாமி, செந்தூரான், செந்தூர்பாண்டி, கலைஞர் பகுத்தறிவு பாசறை முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிளைச் செயலாளர் மன்சூர் அலிகான் வரவேற்றார். ஒன்றிய பிரதிநிதி சண்முகவேல் நன்றி கூறினார். இதையொட்டி பெருநாழியில் இருந்து அருப்புக்கோட்டை சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • மேலூர் தெற்குபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப்பட்டியல் ஸ்ரீ காஞ்சி குளம் சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தெற்குப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக நடந்த இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 7வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 17வண்டிகளும் பங்கேற்றன.

    இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ேபாட்டியினை காண சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.

    • ஊமச்சிகுளத்தில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை ஊமச்சிகுளத்தில் மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது. இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் மாடுகள் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி ஓட்டம் பிடித்தது.

    5 மைல் தூரத்தை பெரிய மாடுகள் தொட்டு, அதன் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதற்கான முதல் பரிசாக ரூ.3 லட்சமும் 2-வது பரிசாக ரூ.2.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.2 லட்சம், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், சாரதிக்கு கொடி பரிசு ரூ.10 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    சிறிய மாடுகளுக்கான பந்தயத்தையும் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். சிறிய மாடுகள் 3 மைல் தூர எல்லையை தொட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சமும் 2-வது பரிசாக ரூ. 1.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சமும், 4-வது பரிசாக ரூ.25 ஆயிரம், சாரதிக்கு கொடி பரிசு ரூ.5 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.5 ஆயிரம் ஆகும்.

    போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர். 

    • சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி இந்த பந்தயம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பெரியமாடு, கரிச்சான் மாடு ஆகிய 2 வகையான காளைகள் போட்டியில் பங்கேற்றன. பந்தய காளைகளுக்கு ஏற்ப தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

    ராமநாதபுரம் மன்னர் பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தார். காளைகள் அ.காளாப்பூர்- திருப்பத்தூர் சாலையில் சீறிப்பாய்ந்து இலக்கை எட்டின. வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையா ளர்களுக்கு முறையே ரூ.33 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.27 ஆயிரத்து 777, 3-ம் பரிசாக ரூ.21 ஆயிரத்து 111, 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரத்து 666 வழங்கப்பட்டது.

    கரிச்சான் மாட்டில் 44 ஜோடி மாடுகள் பங்கேற்றதால். 2 போட்டிகளாக பிரித்து நடத்த ப்பட்டது. அதில் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.23 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.19 ஆயிரத்து 999, 3-ம் பரிசாக ரூ.16 ஆயிரத்து 666, 4-ம் பரிசாக ரூ.5 ஆயிரத்து 555 வழங்கப்பட்டது.

    ×