search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம்
    X

    பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள் பாய்ந்து வந்த காட்சி.

    கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம்

    • ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வனப்பேச்சி அம்மன் கோவில் வருடா பிஷேகத்தை முன்னிட்டு பூஞ்சிட்டு, சின்ன மாடு, நடுமாடு ஆகிய 3 பிரிவு களாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மறவர் கரிசல்குளம் வில்வ லிங்கத்தின் மாடும், 2-வது பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடும், 3-வது பரிசை ஆப்பனூர் அனுஸ்ரீ, மேலக்கிடாரம் ஜெனிதாவின் மாடும் பெற்றன.

    நடுமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடும், 2-வது பரிசை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மாடும், 3-வது பரிசை பூலாங்கால் காதர்பாட்ஷா மாடும் பெற்றன.

    சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்தரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை மறவர் கரிசல்குளம் கருப்புத் துறை மாடும், 3-வது பரிசை பூலாங்கால் சிவஞானபு ரம் மந்திரமூர்த்தி மாடும் பெற்றன.

    இந்த பந்தயத்தில் சின்ன மாடு போட்டியில் சக்கரம் இல்லாமல் 2 கிலோமீட்டர் தூரம் வண்டியை ஓட்டி வந்து முதல் பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×