என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாட்டுவண்டி பந்தயம்
- ஊமச்சிகுளத்தில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகிறது.
மதுரை
மதுரை ஊமச்சிகுளத்தில் மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது. இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் மாடுகள் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி ஓட்டம் பிடித்தது.
5 மைல் தூரத்தை பெரிய மாடுகள் தொட்டு, அதன் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதற்கான முதல் பரிசாக ரூ.3 லட்சமும் 2-வது பரிசாக ரூ.2.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.2 லட்சம், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், சாரதிக்கு கொடி பரிசு ரூ.10 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
சிறிய மாடுகளுக்கான பந்தயத்தையும் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். சிறிய மாடுகள் 3 மைல் தூர எல்லையை தொட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சமும் 2-வது பரிசாக ரூ. 1.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சமும், 4-வது பரிசாக ரூ.25 ஆயிரம், சாரதிக்கு கொடி பரிசு ரூ.5 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.5 ஆயிரம் ஆகும்.
போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்