search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வண்டி பந்தயம்
    X

    மாட்டு வண்டி பந்தயம்

    • சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளை வயல்காளியம்மன் கோவில் ஆனி திருவிழாவை முன்னிட்டு மருது பாண்டியர் களின் நினைவாக, சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ் சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இப்போட்டி பெரிய மாடு, சின்ன மாடு, நடுமாடு, பூச்ஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது, இப்போட்டியை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குணசேக ரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, தேனி, கம்பம் உள்ளிட்ட ஆறு மாவட்டங் களை சேர்ந்த 55 வண்டிகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் முதல் பரிசு 30 ஆயிரத்தை மதுரையை சேர்ந்த அக்னி முருகனுக்கும், இரண்டாம் பரிசான 20 ஆயிரம் திருச்சியை சேர்ந்த செந்திலுக்கும், சின்ன மாட்டு பிரிவில் முதல் பரிசை சிவகங்கை பழனிக் கும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.

    Next Story
    ×