என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • விலை நிலங்களை பன்றிகள் சூறையாடியதால் விவசாயி கவலை அடைந்துள்ளனர்.
    • 35 மூடை நெல் கிடைக்காமல் 10 மூடைகள் மட்டுமே விளைச்சல் ஏற்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ராஜ கம்பீரத்தில் விவசாய நிலங்களை அவ்வப்போது பன்றிகள் நாசம் செய்து வருகிறது. அதனை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராஜகம் பீரத்தில் உள்ள விவசாயி காசிராஜனுக்கு சொந்தமாக 2 ஏக்கம் விலை நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தில் பன்றிகள் அவ்வப்போது நாசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு சொந்தமான விலை நிலங்களில் பன்றிகள் நாசம் செய்தது இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனக்கு சொந்தமான விலை நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகி றேன். இன்னும் ஒரு பத்து தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ள நெற்கதிர்களை பன்றிகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்திருக்கிறது. இரவு முழு வதும் பாம்புகள், விஷப் பூச்சிகளோடு அரிக்கேன், டார்ச் லைட் விளக்குகளோடு பாதுகாப்பு முயற்சியில் இருக்கும் போதே ஒரே நேரத்தில் பத்து பன்றிகள் வயலுக்குள் இறங்கி நாசம் செய்து விட்டது.

    இதன் காரணமாக விவ சாயம் மகசூல் பாதிக்கும் என்று காசிராஜன் தெரிவித் தார். விவசாயத்தை பன்றி கள் அழிப்பதால் விவசாய மகசூல் கடுமையாக பாதிக் கிறது. கடந்தாண்டு இதே போன்று பாதிப்பு ஏற்பட்டு கிடைக்க வேண்டிய 35 மூடை நெல் கிடைக்காமல் 10 மூடைகள் மட்டுமே விளைச்சல் ஏற்பட்டது.

    அதேபோன்று இந்த ஆண்டும் பாதிப்படையும் நிலை உள்ளது என்று காசி ராஜன் தெவித்தார். பன்றி களை ஒழுங்குபடுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி மிக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

    • தக்காளி விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்பப்பட்டு வருகிறது.
    • இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ.150 வரை பொது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விலையை குறைப்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சிங்கம்புணரி உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் உழவர் சந்தைகளில் தோட்டக்கலை துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள டான்ஹோடா விற்பனை நிலையங்களில் விவசாயிக ளிடமிருந்து தக்காளி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு சந்தை விலையை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தோட்டக் கலைத்துறை யின் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப் பட்ட நகரும் காய்கறி விற்பனை வண்டிகள் மூலமாக விவசாயிகளால் நேரடியாக குறைவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் விலை யினை கண்காணிக்கவும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின ருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.

    இவை தொடர்பாக, உழவர் சந்தைகளில் டான்ஹோடா விற்பனை நிலையத்திற்கென சிவகங்கை97510 07695 (விற்பனையாளர் ஜெகன்பிரகாஷ்) மற்றும் திருப்பத்தூர் 91760 83647 (விற்பனையாளர் செல்வி. கவிநிலவு) தொடர்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளது.

    மேலும் தகவலுக்கு, தேவகோட்டை9003631332, இளையான்குடி 94434 55755, காளையார்கோவில் 8508130960, கல்லல் 63761 36377, கண்ணங்குடி 90036 31332, மானாமதுரை 82202 88448, எஸ்.புதூர்97514 64516, சாக்கோட்டை 87783 64523, சிங்கம்புணரி 93445 26574, சிவகங்கை 63692 46510, திருப்பத்தூர் 97888 13286, திருப்புவனம்;96260 06374 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • நரிக்குறவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கார்த்திக் சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு நரிக்குற வர்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நரிக்குறவர்கள் என்று அழைக்கப்பட்டதை நெரிக்குறவர்கள் என்று அழைத்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கவும், வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் அவர்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்மூலமும் அவர்களை பாதுகாப்ப தற்கான நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    நரிக்குறவர் இன மக்களின் 50 ஆண்டுகாள கோரிக்கையை ஏற்று பழங்குடியினர் சான்று வழங்கப்படுகிறது.

    அதனடிப்படையில், சிவகங்கை வட்டத்திற்குட் பட்ட வாணியங்குடி ஊராட்சி பகுதியிலுள்ள பையூர் பிள்ளைவயல் நரிக்குறவர் காலணியில் வசித்து வரும் 176 குடும்பங்களை சார்ந்த 104 நபர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாமேரி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் புவனேஸ்வரி (வாணி யங்குடி), மணிமுத்து (காஞ்சிரங்கால்), சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் டி 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் கோப்பைக்கான 9-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. பரபரப்பான இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணியும் லத்தீப் மெமோரியல் காரைக்குடி அணியும் மோதின. இதில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக டி.சி.பி.எல் அணியின் குணசீலன், பந்து வீச்சாளராக டி.சி.பி.எல் அணியின் ராமச்சந்திரன்ஆல்ரவுண்டராக லத்தீப் அணி வீரர் சுப்பிரமணியன், விக்கெட் கீப்பராக லத்தீப் அணி வீரர் மரகத கார்த்திக், சிறந்த இளம் வீரராக நைட்ஸ் அணி சபரிகிரிசன், சிறந்த பயிற்சியாளர் விருதை டி.சி.பி.எல் அணி வரதராஜனும் தட்டிச் சென்றனர். தமிழ்நாடு ரவுண்ட்ராபின் போட்டிக்கு தேர்வான வீராங்கனை பிரியதர்ஷினிக்கு விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளிராஜன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சதீஷ்குமார், தொழிலதிபர்கள் செந்தில்குமார், புரூட்ஷாப் பாலு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழஙகினர். அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ரவிக்குமார், திருச்செல்வம், சங்கீர்த்தனன், பழனி மற்றும் விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.

    • சிவகங்கை அருகே இளம்பெண்-வாலிபர் மாயமானார்கள்.
    • செல்வம் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சுனிதா. சம்பவத்தன்று அவரது தாத்தா வீட்டில் சென்றார். அங்கிருந்த அவர் திடீரென மாயமானார்.

    எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் தாத்தா பெரியசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கட்டிட வேலைக்கு செல்வதாக தந்தையிடம் கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செல்வம் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருப்புவனம்-காளையார் கோவில் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் திருப்புவனம் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளின் தொடக்க விழா நடை பெற்றது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திட்டங் களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    காளையார்கோவில் ஊராட்சியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 1993-ல் தொடங்கப்பட்டு 2017-வரை சிறப்பாக நடைபெற்று வந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4,315 சதுரடி பரப்பளவில் புதிதாக பல்நோக்கு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    அதேபோன்று திருப்பு வனம் அருகே உள்ள கீழராங்கியம் கிராமத்தில் மானாமதுரை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.41 லட்சம் மதிப்பீட்டில் என்.என்.498 திருப்புவனம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    மேலும் இந்நிலையத்தில் எந்திரங்கள் நிறுவுவதற் கென கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய லிமிடெட் சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எந்தி ரங்களும் நிறுவப்பட்டு உள்ளது.

    கிராம மக்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தி தந்த பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பழையனூர்-வல்லா ரேந்தல் சாலையில் பொது மக்களின் நீண்ட ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சிகளில் க 32 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 387 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவிகளும், 234 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 72 ஆயிரத்து 86 மதிப்பீட்டில் பயிர் கடனுதவி மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 1 மாற்றுத்தி றனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவியும், பழையனூர் கிராமத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.67.66 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 12 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் கடனுதவியும், 14 பயனாளிகளுக்கு ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும் என மொத்தம் 653 பயனாளிகளுக்கு ரூ.6.5 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர் முரளிதர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஆவின் பொது மேலாளர் சேக்முகமதுரபீக், துணைப் பதிவாளர் (பால்வளம்) செல்வம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சின்னையா, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார்.
    • சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (வயது 41). இவருக்கும் சிங்கம்புணரியை சேர்ந்த சூரியா (30) என்பவருக்கும் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    திருமணத்திற்கு பிறகு பிரபாகரன், சூரியா ஆகிய இருவரும் தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். சூரியா புதுக்கோட்டை பகுதியில் அழகு நிலையம் உடல் தகுதிக்கான பிட்னஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற்கேற்றவாறு சூரியாவுக்கு இரவு நேரங்களிலும் தொடர்ந்து செல்போனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மனைவியை கண்டித்தார். அத்துடன் நான் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும்போது நீ வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொள் என்றும் கூறியுள்ளார். ஆனால் சூரியா அதனை கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல் புதுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்தார். எனவே அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது எதிரே தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவில் அருகே சூரியா இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    இதையடுத்து ஆத்திரத்தின் உச்சிச்கே சென்ற பிரபாகரன், தனது இருசக்கர வாகனத்தால் மனைவியின் வாகனத்தின் மீது வேகமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சூரியாவை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடுரோட்டில் சரமாரியாக கழுத்தில் வெட் டினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சூரியா பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் விரைந்து சென்று கொலையுண்ட சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மனைவியை கொலை செய்த பிரபாகரன் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தை மீதான சந்தேகத்தில் நடுரோட்டில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெ றுவதற்காக இந்த கருந்த ரங்கானது நடத்தப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் உயர்சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.

    இதில் மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, திருப்புவனம், காளை யார்கோவில் ஆகிய வட்டா ரங்களை சேர்ந்த 50 விவசாயி களுக்கு தோட்டக்கலை இயக்கம் 2023-24 திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறை, வெங்காயம் சேமிப்பு கிடங்கு, பண்ணை குட்டை, மண்புழு உரக்கூடம், நிரந்தர பந்தல் ஆகியவற்றுக்காக ரூ.37.72 லட்சம் மதிப்பீட்டில் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    உலகளவில் பல்வேறு நாடுகளில் போதிய சூழல் மற்றும் இடவசதியின்றி தாங்கள் வசித்து வரும் வீட்டின் மாடி புற பகுதியில் தோட்டத்திற்கான மாதிரியினை ஏற்படுத்தி, அதன் மூலம் நெற்பயிர் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர், அதற்கு மாற்றாக இயற்கை யான சூழல் மற்றும் மண்வ ளத்தினை பெற்றுள்ள நாம், பல்வேறு வகையான தோட்டப் பயிர்களை மண்வளத்திற்கு ஏற்றாற்போல் பயிர் செய்து பயன்பெற வேண்டும்.

    இன்றைய நவீன காலத்திற்கேற்றாற்போல், விவசாய தொழிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாம் முன்னேற்றம் காண வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துவதற்கும் உரிய விலை கிடைக்கும் வரையில் அதனை முறையாக சேமிப்பதற்கும் அரசால் பல்வேறு வழி வகைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்கள் ஆகியன குறித்து, விவசாயிகள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெ றுவதற்காக இந்த கருந்த ரங்கானது நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) செ. சக்திவேல், சிவகங்கை வேளாண் துணை இயக்குநர் பழ. கதிரேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி, வேளாண் விஞ்ஞானிகள், மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலை துறைசாந்த அலுவலர்கள், மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளை வயல்காளியம்மன் கோவில் ஆனி திருவிழாவை முன்னிட்டு மருது பாண்டியர் களின் நினைவாக, சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ் சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இப்போட்டி பெரிய மாடு, சின்ன மாடு, நடுமாடு, பூச்ஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது, இப்போட்டியை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குணசேக ரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, தேனி, கம்பம் உள்ளிட்ட ஆறு மாவட்டங் களை சேர்ந்த 55 வண்டிகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் முதல் பரிசு 30 ஆயிரத்தை மதுரையை சேர்ந்த அக்னி முருகனுக்கும், இரண்டாம் பரிசான 20 ஆயிரம் திருச்சியை சேர்ந்த செந்திலுக்கும், சின்ன மாட்டு பிரிவில் முதல் பரிசை சிவகங்கை பழனிக் கும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.

    • குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

    இதில் சிவகங்கை அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, நகர் செயலாளர் என்எம்.ராஜா, சிவகங்கை ஒன்றிய குழுத்துணைத்தலைவர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, வாணியங்குடி கிளைச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், பிச்சை, நாகராஜ், ராஜா, கருணாநிதி, முத்துக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கயல்விழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந் துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் ஆனி மாத 69-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்ம–னுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பையூரை சேர்ந்த மக்கள் கடும் வறட்சி, கொலை, கொள்ளை கார–ணமாக மிகவும் துன்புற்று இருந்தபோது இந்த அம் மனை வேண்டி வழிபட்ட–னர். பின்னர் முஸ்லீம் மன்னர்களின் படையெ–டுப்பின் போது அம்ம–னின் சிலையை வயல் வெளியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி இறக்கி மறைத்து வைத்தனர்.

    சில நூறு ஆண்டுகளுக் குப்பின் தூர்வாரும் போது சிலை மீட்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். மக்க–ளின் கஷ்டங்களை தீர்த்தும், பிள்ளை வரம் வேண்டுவோ–ரின் வேண்டுதலை நிறை–வேற்றியும், சிவகங்கையை காக்கும் காவல் தெய்வமா–கவும் இந்த அம்மன் அருள் பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி ஏழு நாட்கள் நடை–பெறும். விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூச்சொ–ரிதல் விழா அன்று வருடத் தில் ஒரு நாள் மட்டும் குழந் தையுடன் அம்மன் அருள் பாலிக்கிறார்.

    இவ்விழாவில் ஆயிரக்க–ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழி–பாடு செய்தனர். இன்று பூச்சொரிதல் விழாவில் மூலவர் காளியம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் பல்வேறு நறுமணத் திரவி–யங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற் றன.

    இதனைத்தொடர்ந்து அம்மன் குழந்தையை மடி–யில் வைத்தபடி சர்வ அலங்காரம் நடைபெற்று, பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாரா–தனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று காளியம்மனுக்கு பல வகை–யான பூக்களை சமர்ப்பித்து அர்ச்சனைகள் செய்து வழி–பாடு செய்தனர். பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    • கல்குறிச்சி ஊராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத் துக்கு உட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவி பானுவனிதா உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பெரும் பாலான உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவி யாஸ்மின் உறுப்பி னர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை என்றும், குடிநீர் பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றும், கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் ஊராட்சி மன்றகூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் மீது கையெழுத்து போடமல் அவர்கள் வெளியேறினர்.

    பின்னர் துணைத்தலைவி பானுவனிதா கூறியதாவது:-

    தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றும் வரை தொடர்ந்து கூட்ட த்தைப் புறக்கணிப்போம். இவரது நிதி முறைகேடு குறித்தும், அவரை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.ஏற்கெனவே நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களின் படி, எந்த ஒரு திட்டப் பணியும் நடைபெறவில்லை. அடிப்படை வசதி செய்யாததால் வார்டு மக்களிடம் எங்களால் பதில் கூற இயலவில்லை என்றார்.

    துணைத்தலைவி பானு வனிதா, உறுப்பினர்கள் சத்தி, வாணி முத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா, பாண்டியம்மாள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    ×