என் மலர்
சிவகங்கை
- மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது. 30-ந் தேதி தபசு உற்சவம் நடக்கிறது.
- 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி யேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு கலச நீர், 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தர்ப்பைப்புல், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள், தீபாராத னை நடந்தது. பூஜைகளை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி, பட்டர்கள் ராஜேஷ், சரவணன், குமார் நடத்தி வைத்தனர்.
இதில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமி ழரசி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தபசு உற்சவம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. தபசு கோலத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு சோமநாத சுவாமி விருஷா பரூடராக காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். 31-ந் தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.
- எண்ணற்ற திட் டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றக் கோரு தல், ஆழ்குழாய் கிணறு அமைத்து தரக்கோரு தல், வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், சிறுதானியம் விளைவிக்கும் உழவர்க்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க உதவி கோருதல் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற் கொள்ளுமாறும் கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் பேசியதாவது:-
முதல் அமைச்சர் விவ சாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட் டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக் களின் நலன் காத்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தி லுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன்பாட்டி ற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தா மல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திட வும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவ சாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மேலாண்மை இயக்குநர் (மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், மண் டல இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ஜூனு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தன பாலன், வருவாய் கோட்டா ட்சியர் பால்துரை (தேவ கோட்டை) மற்றும் முதல் நிலை அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிய ரேசன் கடை- கலையரங்கம் கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் அரியாண்டிபுரம் ஊராட்சி யில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிடம் மற்றும் புதிய ரேசன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.
விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் ராக்கு குமரேசன் , கண்ணமங்கலம், கூட்டுறவு சங்க தலைவர் சுபதமிழரசன், வட்டாட்சியர் கோபி, மற்றும் அரியாண்டி புரம் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
- குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.
மானாமதுரை
மானாமதுரை நகராட்சி சார்பில் தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புரவு ஆய்வாளர் பாண்டிசெல்வம் தலைமை தாங்கி. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள். அதை எவ்வாறு கையாள வேண்டும். குப்பைகளை எவ்வாறு தரம் பிரிக்க வேண்டும். குறிப்பாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து, எவ்வாறு வழங்கிட வேண்டும், குப்பைகள் மூலம் உரங்கள் தயாரித்து, இந்த வளம்மீட்பு பூங்காவில் வளர்க்கப்பட்ட காய், கனிகள், முலிகை செடிகள், பூக்கள் பற்றி விளக்கி பேசினார். பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்தி ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே திருப்பத்தூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங் களை எழுப்பினர்.
இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் நாக ராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், பாசறை மாவட்ட செயலா ளர் பிரபு, ஒன்றிய செய லாளர்கள் சேவியர்தாஸ், கருணாகரன், பழனிச்சாமி, செல்வமணி, அருள்ஸ்டிபன், கோபி, பாரதிராஜன், ஜெக தீஸ்வரன், மகளிரணி வெண்ணிலா சசிகுமார், பாசறை மாவட்ட துணை செயலாளர் பிரபு, மாவட்ட கலை பிரிவு செயலாளர் செந்தில்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொரு ளாளர் சரவணன், பாசறை இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், முடிகரைகருப்பையா, மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி சிக்ரியில் ஆய்வகங்கள்-கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 24-ந்தேதி தொடங்குகிறது.
- தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு நிகழ்வுகள் பற்றி எடுத்துரைக்கப்படும்.
காரைக்குடி
மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை நாடு முழுவதும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமத்தில் உள்ள 37 ஆய்வகங்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்த பிரசாரத்தை மக்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்த அறிவுறுத்தி யுள்ளது.
அதன்படி காரைக்குடி சிக்ரியில் ஒரு வாரம் ஒரு ஆய்வகம் குறித்த பிரசார நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி சிக்ரி வளாகத்தில் தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் சிக்ரியின் வரலாறு, சாதனைகள், ஆராய்ச்சி துறைகளாகிய அரிமான தடுப்பு, தற்கால மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோ கமான ரசாயனங்கள், மின்முலாம், மின் வேதியியல், தூய நிலையான ஆற்றல் ஆகியவற்றில் நடை பெறும் ஆராய்ச்சி, தொழில் நுட்பம் மற்றும் மேம்பாடு நிகழ்வுகள் பற்றி எடுத்துரைக்கப்படும்.
இதுகுறித்து சிக்ரி இயக்குனர் ரமேஷா கூறியதாவது:-
5 நாட்கள் நடைபெறும் இந்த தொழில் நுட்ப மேம்பாடு குறித்த நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பங்கு பெறுகின்றனர். வருகிற 24-ந்தேதி மலர் வெளியீடு, தொழில் வர்த்தக சந்திப்பு, 25-ந்தேதி சிக்ரி நிறுவன நாள் கொண்டாட்டம், அரிமானம் தடுப்பு கருத்தரங்கம், 26-ந்தேதி அறிவு சார் காப்புரிமை விழிப்புணர்வு பேரணி, ஜூலை 27-ந் ஆற்றல் தொழில் நுட்ப நிகழ்வு, சிக்ரியின் சென்னை கிளை அறிவுசார் காப்புரிமை கருத்தரங்கம், ஜூலை 28-ந்தேதி மின்முலாம் பூசுவோர் கருத்தரங்கம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற சிவகங்கை பெண்கள் அணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
- விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
சிவகங்கை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை மாவட்ட ஹாக்கி பெண்கள் அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பரிசு வென்றது. இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள பள்ளியில் இந்த அணியின் 18 மாணவிகளுக்கும் மற்றும் முரளி, கருணாகரன், மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் சங்கரன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர் தியாக பூமி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், கேப்டன் சரவணன், பகீரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா, நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் அழகுமீனாள் தேவதாஸ், சின்னையா அம்பலம், சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவஹர் கிருஷ்ணன், செயலாளர் ராமச்சந்திரன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சுந்தர மாணிக்கம், செயலாளர் யுவராஜா, சிவகங்கைச் சீமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கலைக்கண்ணன், சிவகங்கை அரிமா சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை சுப்ரீம் அரிமா சங்க முன்னாள் தலைவர் முருகன், வெங்கடேஸ்வரா ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.
இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராம ரிக்கப்படும் பதிவேடுகள், புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்ப டுத்திட வாரம் ஒரு முறை நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி காலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்ப டையில் சிறு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இதில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- திருப்பத்தூர் வாரசந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
- முத்திரையிடாத எடைகற்கள், தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை,காளையார் கோவில், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் சென்னை தொழி1லாளர் ஆணையம் மற்றும் சட்டமுறை எடை யளவு கட்டுப்பாடு அலுவலகம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அமலாக்க பிரிவு அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் முன்னதாக திருப்பத்தூரில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாக வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகள், எடைகற்கள், மின்னணு தராசுகள், விட்ட திராசுகள் முதலியவற்றிக்கான முத்திரைகள், வணிக நிறுவனம் நடத்துவதற்கான அரசு சான்றிதழ்கள், பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியல், நுகர்வோர் குறை தெரிவிக்க வேண்டிய புகார் எண், தயாரிப்பு தேதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் முத்திரை வைக்கப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் உட்பட 29 எடை அளவு இயந்திரங்களை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிவகங்கை மற்றும் காளையார் கோயில்களில் பொட்டல பொருட்கள் மற்றும் சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அரசின் முறையான வழிகாட்டுதலை பின்பற்றாத காரணத்தினால் அந்நிறுவனங்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து வியாபாரிகள் மத்தியில் மின்னணு தராசுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறையும் ஏனைய மற்ற தராசுகளுக்கு 2ஆண்டுகளுக்கு ஒரு முறையும் முத்திரை வைக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழ்களை அதனுடன் இணைத்து வைக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 5000ரூபாய் அவதாரம் விதிக்கப்படும் என்றும் வியாபாரிகள் மத்தியில் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் இ.முத்து, துணை ஆய்வாளர் வேலாயுதம், உதவி ஆய்வாளர்களான தீன தயாளன், வசந்தி மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் இருந்தனர்
- மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
- மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் 18 மாணவிகள் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றனர்.
இதனைத்தொடர்ந்து செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அந்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தேவ ராஜ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் செந்தில் முருகன், ஒன்றிய செயலா ளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு வங்கி தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.
- வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாத மும் 3 அல்லது 4-ம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இம்மாதம் வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளா கத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
மேலும் இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும்; வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள வர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோ ருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
- பெண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய சைக்கிள் காப்பகத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- மாணவிகளுடன் சேர்ந்து புகைப்படம் தமிழரசி எம்.எல்.ஏ. எடுத்து கொண்டார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசுபெண்கள் மேல்நிலை பள்ளி பல ஆண்டுகளாக இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு சைக்கிள் நிறுத்தம் வசதி இல்லாமல் இருந்தது. பள்ளிக்கு வெளியே சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு வந்ததால் மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. தமிழரசி பள்ளிஅருகே உள்ள நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்தி கொள்ள வசதியாக தளம் அமைத்து சைக்கிள் காப்பகம் வைக்க நடவடிக்கை எடுத்தார்.
அதை தொடர்ந்து அங்கு புதிய சைக்கிள் காப்பகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. சைக்கிள் காப்பகத்தை பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் மாணவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதில் நகராட்சி துணைதலைவர் பாலசுந்தரம், தி.மு.க. ஒன்றியசெயலாளர் ராஜாமணி, நகரசெயலாளர் பொன்னுசாமி, நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமாறன், மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






