search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New ration shop"

    • நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
    • கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.

    நத்தம்:

    நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வேலுச்சாமி எம்.பி. கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி பேசினார். இதில் தாசில்தார் ராமையா, யூனியன் ஆணையாளர்கள் சுமதி, பத்மாவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவர் ராஜகோபால், கவுன்சிலர்கள் இஸ்மாயில், பாக்கியலட்சுமி சிவஞானம், மாவட்ட பிரதிநிதிகள் குடகிப்பட்டி அழகர்சாமி, சிறுகுடி சேக்சிக்கந்தர், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் மணி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, நத்தம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அய்யாபட்டி வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதைப்போலவே துவராபதி, சிறுகுடி- மஞ்சநாயக்கன்பட்டி, குட்டுப்பட்டி-பெரிய மலையூர், சேத்தூர்-சின்னமுளையூர் பகுதிகளிலும் புதிய ரேசன் கடைகள் திறக்கபட்டது. முன்னதாக கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.

    • சண்முகபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் யூனி யனுக்கு உட்பட்ட வீரபாண்டியன் பட்டினம் ரூரல் ஊராட்சி சண்முக புரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தாக கட்டப் பட உள்ள ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து சண்முகபுரம் காந்திநகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார். மேலும் திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பள்ளிபத்து ஊராட்சி செங்குழியில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், தி.மு.க. மாநில வர்த்தகரணி இணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய ரேசன் கடை- கலையரங்கம் கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் அரியாண்டிபுரம் ஊராட்சி யில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிடம் மற்றும் புதிய ரேசன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.

    விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் ராக்கு குமரேசன் , கண்ணமங்கலம், கூட்டுறவு சங்க தலைவர் சுபதமிழரசன், வட்டாட்சியர் கோபி, மற்றும் அரியாண்டி புரம் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
    • யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், வீராணம் ஒன்றிய குழு உறுப்பினர் ஷேக்முகமது, வீராணம் கிளை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், அமானுல்லா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நாகப்பட்டினத்தில் நியாய விலைக் கடையை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் முன்னிலை வகித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பெருங்க டம்பனூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வுக்கு, மாவட்ட கலெக்டர்.

    அருண் தம்புராஜ் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் முன்னிலை வகித்தார்.

    இதில், ஒன்றிய குழு தலைவர் அனுசியா, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் மருதாலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு முட்டவாடி பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா, மகளிர் உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி, பருப்பு வழங்கினார். 6 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 லட்சத்து 85 ஆயிரம் கடன் உதவி வழங்கினார்.

    அப்போது மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், தலைமை கழக பேச்சாளர் சீனிவாசன் மற்றும் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ரெண்டாடியிலும் புதிய பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், ஒன்றிய குழு துணை பூங்கொடி ஆனந்தன், முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.

    • என்.ஜெகவீரபுரத்தில் புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட என்.ஜெகவீரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ .13.80 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, என்.ஜெகவீரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டி, கூட்டுறவு சங்கத்தலைவர் கண்ணன், கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் இளங்கோவன், பவுன்ராஜ், பால்ச்சாமி, சென்னையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமமூர்த்தி, செல்வசீனிவாசகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • மழை பெய்தால் பொருட்கள் நனைந்து போவதாக புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் கற்பகம் கூட்டுறவு ரேசன் கடை சித்திரசாவடி கேட் பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    மழை பெய்தால் ரேசன் பொருட்கள் நனைந்து போகும் நிலை உள்ளது. எனவே புதிய ரேசன் கடை கட்ட, பழைய ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பூமி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் கட்டிட பணிகள் தொடங்கவில்லை. எனவே புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரேஷன் கடையானது வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.
    • புதிதாக ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் 700-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு ரேஷன் கடையானது அங்கன்வாடி மையம் மற்றும் கிராம அலுவலக மையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.அந்த ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழைமை அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இதனால் இந்த ரேஷன் கடையானது வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. கடை மாற்றப்படும் இடமானது ஊர் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அமலு விஜயன் எம்.எல.ஏ. திறந்து வைத்தார்
    • பலர் கலந்து கொண்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அடுத்த கள்ளிப்பேட்டை ஏரிகுத்தி போன்ற கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார்.

    கூட்டுறவு பொது விநியோக திட்ட சார்பதி வாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    பேர்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார். 2 புதிய ரேசன் கடைகளையும் அமுலு விஜயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் சித்ரா ஜனார்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் லலிதா டேவிட், ஆத்மா குழு தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் டேவிட் சாத்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலா கபில், ரேசன் கடை விற்பனையாளர்களான சதீஷ், ரீகன், ரமேஷ், லோகேஷ், பாதுஷா, உஸ்மான், மஞ்சுளா, சங்கீதா, ராஜேந்திரன், கோகிலா, லிவின்குமார், பொறுப்பு ஊராட்சி செயலாளர் நேதாஜி மற்றும் சோக்கன் வில்லியம் அருமை நாயகம் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பி எஸ் கோபிநாத் நன்றி கூறினார்.

    • ஆறுமுகநேரி 6-வது வார்டு திசைக்காவல் தெற்கு தெருவில் உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வெகு தூரம் செல்ல வேண்டியது இருந்தது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து புதிதாக ரேஷன் கடை கட்டிடத்தை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி 6-வது வார்டு திசைக்காவல் தெற்கு தெருவில் உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வெகு தூரம் செல்ல வேண்டியது இருந்தது. இதனால் சிரமப்பட்ட அவர்கள் தங்கள் பகுதியிலேயே புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து புதிதாக ரேஷன் கடை கட்டிடத்தை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

    ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். 6-வது வார்டு கவுன்சிலர் தீபா முன்னிலை வகித்தார். நியாயவிலைக் கடை அலுவலர் கலைவாணன் வரவேற்று பேசினார்.

    பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், ஆறுமுகநயினார், முன்னாள் கவுன்சிலர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.14 லட்சம் ஒதுக்கீடு
    • பூவைஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் ராமாலை ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பல ஆண்டு பொதுமக்கள் கோரிக்கை ஏற்று புதிதாக ரேசன் கடை கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. 14 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.

    இந்த ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடையின் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் குடியாத்தம் நகர் மன்ற உறுப்பினருமான பி. மேகநாதன், அக்கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மு.ஆ.சத்யனார், ராமாலை ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், ஜி.பி.மூர்த்தி, கே.மோகன், பிரகாசம், ஜான்சன் உள்பட அ.தி.மு.க., புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×