search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி
    X

    கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் விவசாயிகளுக்கு விளக்க கையேட்டினை வழங்கினார்.

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி

    • நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.
    • எண்ணற்ற திட் டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றக் கோரு தல், ஆழ்குழாய் கிணறு அமைத்து தரக்கோரு தல், வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், சிறுதானியம் விளைவிக்கும் உழவர்க்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க உதவி கோருதல் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற் கொள்ளுமாறும் கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் பேசியதாவது:-

    முதல் அமைச்சர் விவ சாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட் டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக் களின் நலன் காத்து வருகிறார்கள்.

    சிவகங்கை மாவட்டத்தி லுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன்பாட்டி ற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தா மல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திட வும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவ சாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மேலாண்மை இயக்குநர் (மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், மண் டல இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ஜூனு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தன பாலன், வருவாய் கோட்டா ட்சியர் பால்துரை (தேவ கோட்டை) மற்றும் முதல் நிலை அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×