search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைவாய்ப்பு முகாம்
    X

    வேலைவாய்ப்பு முகாம்

    • வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாத மும் 3 அல்லது 4-ம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி இம்மாதம் வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளா கத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும்; வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள வர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோ ருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×