என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு நடந்தது.
    • கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

    சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலாராஜா கோரிக்கையை ஏற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிராம மக்கள் பங்களிப்போடு காராம்போடை கிராமத்தில் புதிய ரேஷன் கட்டிடம் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ளது.

    இதேபோல் டாமின் திட் டத்தின் கீழ் குமாரபட்டி கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார். நிகழ்வில் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநா–பன், உதவி செயற்பொறி–யாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய கவுன்சிலர் அழகர் சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாப்பா, ரேஷன் கடை பங்களிப்பு தந்த சுப்பையா, கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் பிர்லாகணேசன், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவல்லி முருகன், முருகன், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர் சாம் ஜேஷுரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், ரத்த அளவு, ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த பரிசோதனைகள், சளி மாதிரி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இயற்கை உணவு தானியங்கள், அதிக சத்துள்ள காய்கறிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேவகோட்டை அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் பங்கேற்றனர். முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    • உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் கூறினார்.
    • விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லா மல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழி கள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்பு களும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான கிணறுகள் அச்சுறுத்தலாக உள்ளன.

    ஆழ்துளை கிணறு விபத்துக்களை தடுப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறி முறைகளை 2010-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வகுத்தளித்தி ருக்கிறது. அந்த வழிகாட்டி நெறி முறைகள் அனைத்தை யும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பசுமை நிதி மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

    திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோர கட்டுமான பள்ளங்கள், சாலையோர கால்வாய்கள், கைவிடப் பட்ட குவாரி கிடங்குகள் ஆகியவற்றில் விபத்து ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தலைமை செயலரும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த ஆலோசனையின் படி அனைத்து கிராமங்க ளிலும் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோரங்க ளில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள், ஆழமான கால்வாய்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அவற்றில் அந்தந்த துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு ரூ.12 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
    • ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் திறன் திருவிழா மற்றும் கடனுதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளையும், ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்கு வங்கி கடனு தவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெற்று பெற்று வருகிறார்கள்.அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியவைகள் இணைந்து, வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா சிறப்பாக சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் மொத்தம் 102 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 13 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்பட 347 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள் ளது. பல்வேறு போட்டி தேர்வு களில் பங்கு பெறுவதற்கு இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மொத்தம் 24 ஊராட்சிகளை சேர்ந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் ரூ.12 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டுள் ளது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) தேவேந்திரன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி, சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் இந்திரா, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க கல்வி பெரும் பங்கு வகிக்கிறது.
    • கல்லூரி விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைய மன்னர் மகேஷ்துரை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழா மலரினை வெளி யிட்டு அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியானது, இந்தியா சுதந்திரம் பெற்ற போது தொடங்கப்பட்டது. தற்போது 3800 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக் கூடிய மாணவர்கள் தற்போது போட்டிகள் நிறைந்த நவீன காலத்தில் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து, சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    ஏற்றத்தாழ்வற்ற சமு தாயத்தை உருவாக்குவதற்கு கல்வி என்பது பெரும் பங்கு வகிக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிட தொலைநோக்கு பார்வையுடன் முனாள் முதல்வர் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்தி னார். அதே வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

    அதில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதம் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணாக்கர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்ப தற்கு அவர்களுக்கு உறு துணையாக இருந்திடும் வகையில், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங் களை தமிழகத்தில் செயல் படுத்தி மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையான திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    அது மட்டுமன்றி, குடிமைப் பணிகளுக்கு என்று அரசால் அறிவிக்கப் படும் தேர்வுகளில் நமது தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துகின்ற வகையில் மாதம் ரூபாய் 7,500/- வழங்கும் திட்டத்தி னையும் அறிவித்துள்ளார்.

    மேலும்,நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்விக்கென ரூ. 40 ஆயிரம் கோடியும், உயர் கல்விக்கென ரூ.7 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், கல்விக்கென தமிழ்நாடு முதலமைச்சரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரை ஆனந்த், மதுரை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) பொன்முத்து ராமலிங்கம், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, கல்லூரி துரை அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுைரயில் திருகூடல்மலை நவநீதபெருமாளை பக்தர்கள் வரவேற்றனர்.
    • இரவு வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார்.

    மானாமதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் திருகூடல்மலை நவநீத பெருமாள் மானாமதுரை வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதற்கான கடந்த 1-ந்தேதி திருகூடல் மலையில் இருந்து பல்லக்கில் சாமி புறப்பட்டார்.

    ஆரப்பாளையம், கோரிப் பாளையம், அண்ணா நகர், வண்டியூர், திருப்புவனம், திருப்பாசேத்தி, முத்த னேந்தல், ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வந்தடைந்தார்.மானாமதுரையில் மாரியம்மன் கோவில் தெரு, பழைய தபால் ஆபிஸ் தெரு, சுந்தர புரம் கடைவீதி , பட்டரைதெரு, வேளார் தெரு வழியாக குதிரை வாகனத்தில் புறப்பட்டு இரவு தாயமங்கலம் ரோடு அலங்கார் நகரில் உள்ள வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா.... என கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.கோவிலில் சாமியை ஆரத்தி எடுத்து மஞ்சள் பட்டு சாற்றி வரவேற்றனர்.

    அதை தொடர்ந்து நவநீத பெருமாள் மற்றும் கோவி லில் உள்ள அய்யனார், சோனையா , மகாசித்தர் கட்டிக்குளம் மாயாண்டி சித்தர் சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் நவநீதபெருமாளை தரிசனம் செய்தனர். இன்று காலை சங்கு பிள்ளையார் கோவி லில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் 24 -ந்தேதி திருகூடல்மலை சென்ற டைவார்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட வி.சி.க. நிர்வாகிகளுடன் புதிய மாவட்ட செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட செயலாளராக இளைய கவுதமன், தெற்கு மாவட்ட செயலாளராக பாலையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளைய கௌதமன் அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். மூத்த உறுப்பினரான மண்டேலா மாதவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதிய மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகி மண்மேல் சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரவி, காட்டாம்பூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை இளைய கவுதமன் சந்தித்து வருகிறார்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகி கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகள் மற்றும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களில் புதிதாக கட்சி கொடியை ஏற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் சேவியர்தாஸ், கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, ஸ்டீபன் அருள்சாமி, சிவாஜி, பாரதி ராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங் கோவன், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி ஏற்பாட்டில் அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    • சிவகங்கை அருகே வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சித்தானூர் கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சேங்கை ஊரணி தூர்வாருதல், படித்துறை கட்டும் பணி, ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை கட்டும் பணி, ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் குறிச்சிவயலில் தார்சாலை அமைக்கும் பணி, ரூ.6.13 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சீரமைப்பு பணி, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அனுமந்தக்குடி கிராமத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்தார். தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.

    கண்ணங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியினை பார்வையிட்டு பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    • சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூரை இணைக்ககோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெ–ரும் கண்டன ஆர்பாட் டம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அம்சமாக காவிரி தண்ணீரை திறக்க வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1,000 அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி–களை இணைத்திட வேண்டும்.

    சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்கக் கூடாது, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், விவ–சாயிகளின் நிலத்தை என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட் டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டகஙகுழு உறுப்பி–னர் ஜாகிர் உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணா கண்ணன் மற்றும் நிர்வா–கிகள் துரை பாஸ்கரன், ராமதாஸ், பைசூர் ரஹ்மான், சிவக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளைக்கழக நிர்வாகி–கள் கலந்துெகாண்டனர்.

    கொளுத்தும் வெயிலை–யும் பொருட்படுத்தாமல் மாவட்ட அளவில் நடை–பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற–னர்.

    • திருப்பத்தூர் அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் படுகாயமடைந்தார்.
    • இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது51). இவர் வடமாவளி ஊராட்சியின் முன்னாள் தலைவர் அ.ம.மு.க. திருப்பத்தூர் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவர் திருப்பத்தூரில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காட்டாம்பூர் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த முருகானந்தத்திற்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    • கொத்தடிமைத் தொழிலாளர்கள் எவரும் வேலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆலோசனை யின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முத்து தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சைல்டுலைன் உறுப்பி னர்கள், ஆள்கடத்தல் பிரிவு காவலர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் மானாமதுரை பகுதியில் உள்ள ஊதுபத்தி தயார் செய்யும் இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதிற்குட்பட்ட குழந்தை கள், வளரிளம் பருவத் தொழிலாளர்கள், கொத்தடிமைத் தொழி லாளர்கள் எவரும் வேலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    ×