என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ஊராட்சி தலைவர் படுகாயம்
    X

    முன்னாள் ஊராட்சி தலைவர் படுகாயம்

    • திருப்பத்தூர் அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் படுகாயமடைந்தார்.
    • இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது51). இவர் வடமாவளி ஊராட்சியின் முன்னாள் தலைவர் அ.ம.மு.க. திருப்பத்தூர் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவர் திருப்பத்தூரில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காட்டாம்பூர் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த முருகானந்தத்திற்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×