என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை தியாகிகள் பூங்கா மற்றும் நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே, நகராட்சி அலுவலகம் எதிரே 1936-ம் ஆண்டு அப்போதைய மாநில கவர்னரால் பூங்கா திறக்கப்பட்டது. 1942 ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர்கள் 75 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் 112 நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 1947-ம் ஆண்டு பூங்காவில் தியாகிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

    ஜாலியன் வாலாபாக் அடுத்து சுதந்திர போராட்டத்திற்காக அதிக நபர்கள் உயிர் நீத்த இடம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது தியாகிகள் பூங்கா, நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நகர் போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • தேவகோட்டையில் இருந்து மதுரை, திருச்சிக்கு செல்ல பஸ்கள் இயக்க வேண்டும்.
    • நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் வெளியூர்களுக்கு செல்ல அரசுபஸ்கள் இயக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேவகோட்டை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் தேவைகளுக்கு திருச்சி, மதுரை போன்ற நகரங்க ளுக்கு சென்று வருகின்றனர்.

    தேவகோட்டையில் இருந்து பஸ் வசதிகளையே மட்டுமே உள்ளதால் பிற நகரங்களுக்கு செல்ல அதிக நேரம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

    தற்பொழுது தேவ கோட்டையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு பைபாஸ் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளதால் அவ்வழியாக மதுரை மற்றும் திருச்சிக்கு பஸ்கள் இயக்கப்பட்டால் பயண நேரங்களும் குறைவ தோடு பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு ஏதுவாக அமையும்.

    மதுரை, திருச்சி புறநகரங்களுக்கு தேவகோட்டையில் இருந்து பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
    • கூட்டுறவு கள மேலாளர் செல்வராஜ், சரக மேற்பார்வையாளர் கருப்புசாமி, ர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் நெல்முடிக்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கி மகளிர் குழுவி னருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 10 மகளிர் குழுக்களை சேர்ந்த வர்களுக்கு ரூ.10 லட்சதுக்கான காசோலைகளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு கள மேலாளர் செல்வராஜ், சரக மேற்பார்வையாளர் கருப்புசாமி, செயலர் துரை, காசாளர் பழனிச்சாமி மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது மேலெநெட்டூர். இங்கு சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சொரிதல் விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூ பந்தல் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    விழாவில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதேபோல் குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன், சிவகங்கை ரோட்டில் உள்ள தயாபுரம் முத்துமாரியம்மன், கன்னார்தெரு மாரியம்மன், சுந்தரபுரம் விநாயகர் ஆகிய கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மானாமதுரை பஞ்சபூதேஸ்வரத்தில் உள்ள மகா பஞ்ச முக பிரித்தியங்கிராதேவி கோவிலில் உள்ள குண்டு முத்து மாரியம்மனுக்கு பக்தர்கள் கூழ் காய்ச்சி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

    • நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு நடந்தது.
    • கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

    சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலாராஜா கோரிக்கையை ஏற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிராம மக்கள் பங்களிப்போடு காராம்போடை கிராமத்தில் புதிய ரேஷன் கட்டிடம் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ளது.

    இதேபோல் டாமின் திட் டத்தின் கீழ் குமாரபட்டி கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார். நிகழ்வில் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநா–பன், உதவி செயற்பொறி–யாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய கவுன்சிலர் அழகர் சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாப்பா, ரேஷன் கடை பங்களிப்பு தந்த சுப்பையா, கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் பிர்லாகணேசன், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவல்லி முருகன், முருகன், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர் சாம் ஜேஷுரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், ரத்த அளவு, ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த பரிசோதனைகள், சளி மாதிரி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இயற்கை உணவு தானியங்கள், அதிக சத்துள்ள காய்கறிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேவகோட்டை அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் பங்கேற்றனர். முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    • உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் கூறினார்.
    • விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லா மல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழி கள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்பு களும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான கிணறுகள் அச்சுறுத்தலாக உள்ளன.

    ஆழ்துளை கிணறு விபத்துக்களை தடுப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறி முறைகளை 2010-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வகுத்தளித்தி ருக்கிறது. அந்த வழிகாட்டி நெறி முறைகள் அனைத்தை யும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பசுமை நிதி மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

    திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோர கட்டுமான பள்ளங்கள், சாலையோர கால்வாய்கள், கைவிடப் பட்ட குவாரி கிடங்குகள் ஆகியவற்றில் விபத்து ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தலைமை செயலரும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த ஆலோசனையின் படி அனைத்து கிராமங்க ளிலும் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோரங்க ளில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள், ஆழமான கால்வாய்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அவற்றில் அந்தந்த துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு ரூ.12 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
    • ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் திறன் திருவிழா மற்றும் கடனுதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளையும், ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்கு வங்கி கடனு தவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெற்று பெற்று வருகிறார்கள்.அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியவைகள் இணைந்து, வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா சிறப்பாக சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் மொத்தம் 102 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 13 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்பட 347 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள் ளது. பல்வேறு போட்டி தேர்வு களில் பங்கு பெறுவதற்கு இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மொத்தம் 24 ஊராட்சிகளை சேர்ந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் ரூ.12 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டுள் ளது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) தேவேந்திரன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி, சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் இந்திரா, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க கல்வி பெரும் பங்கு வகிக்கிறது.
    • கல்லூரி விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைய மன்னர் மகேஷ்துரை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழா மலரினை வெளி யிட்டு அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியானது, இந்தியா சுதந்திரம் பெற்ற போது தொடங்கப்பட்டது. தற்போது 3800 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக் கூடிய மாணவர்கள் தற்போது போட்டிகள் நிறைந்த நவீன காலத்தில் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து, சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    ஏற்றத்தாழ்வற்ற சமு தாயத்தை உருவாக்குவதற்கு கல்வி என்பது பெரும் பங்கு வகிக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிட தொலைநோக்கு பார்வையுடன் முனாள் முதல்வர் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்தி னார். அதே வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

    அதில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதம் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணாக்கர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்ப தற்கு அவர்களுக்கு உறு துணையாக இருந்திடும் வகையில், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங் களை தமிழகத்தில் செயல் படுத்தி மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையான திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    அது மட்டுமன்றி, குடிமைப் பணிகளுக்கு என்று அரசால் அறிவிக்கப் படும் தேர்வுகளில் நமது தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துகின்ற வகையில் மாதம் ரூபாய் 7,500/- வழங்கும் திட்டத்தி னையும் அறிவித்துள்ளார்.

    மேலும்,நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்விக்கென ரூ. 40 ஆயிரம் கோடியும், உயர் கல்விக்கென ரூ.7 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், கல்விக்கென தமிழ்நாடு முதலமைச்சரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரை ஆனந்த், மதுரை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) பொன்முத்து ராமலிங்கம், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, கல்லூரி துரை அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுைரயில் திருகூடல்மலை நவநீதபெருமாளை பக்தர்கள் வரவேற்றனர்.
    • இரவு வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார்.

    மானாமதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் திருகூடல்மலை நவநீத பெருமாள் மானாமதுரை வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதற்கான கடந்த 1-ந்தேதி திருகூடல் மலையில் இருந்து பல்லக்கில் சாமி புறப்பட்டார்.

    ஆரப்பாளையம், கோரிப் பாளையம், அண்ணா நகர், வண்டியூர், திருப்புவனம், திருப்பாசேத்தி, முத்த னேந்தல், ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வந்தடைந்தார்.மானாமதுரையில் மாரியம்மன் கோவில் தெரு, பழைய தபால் ஆபிஸ் தெரு, சுந்தர புரம் கடைவீதி , பட்டரைதெரு, வேளார் தெரு வழியாக குதிரை வாகனத்தில் புறப்பட்டு இரவு தாயமங்கலம் ரோடு அலங்கார் நகரில் உள்ள வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா.... என கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.கோவிலில் சாமியை ஆரத்தி எடுத்து மஞ்சள் பட்டு சாற்றி வரவேற்றனர்.

    அதை தொடர்ந்து நவநீத பெருமாள் மற்றும் கோவி லில் உள்ள அய்யனார், சோனையா , மகாசித்தர் கட்டிக்குளம் மாயாண்டி சித்தர் சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் நவநீதபெருமாளை தரிசனம் செய்தனர். இன்று காலை சங்கு பிள்ளையார் கோவி லில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் 24 -ந்தேதி திருகூடல்மலை சென்ற டைவார்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட வி.சி.க. நிர்வாகிகளுடன் புதிய மாவட்ட செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட செயலாளராக இளைய கவுதமன், தெற்கு மாவட்ட செயலாளராக பாலையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளைய கௌதமன் அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். மூத்த உறுப்பினரான மண்டேலா மாதவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதிய மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகி மண்மேல் சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரவி, காட்டாம்பூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை இளைய கவுதமன் சந்தித்து வருகிறார்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகி கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகள் மற்றும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களில் புதிதாக கட்சி கொடியை ஏற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் சேவியர்தாஸ், கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, ஸ்டீபன் அருள்சாமி, சிவாஜி, பாரதி ராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங் கோவன், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி ஏற்பாட்டில் அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    ×