search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா
    X

    சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா

    • சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது மேலெநெட்டூர். இங்கு சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சொரிதல் விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூ பந்தல் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    விழாவில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதேபோல் குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன், சிவகங்கை ரோட்டில் உள்ள தயாபுரம் முத்துமாரியம்மன், கன்னார்தெரு மாரியம்மன், சுந்தரபுரம் விநாயகர் ஆகிய கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மானாமதுரை பஞ்சபூதேஸ்வரத்தில் உள்ள மகா பஞ்ச முக பிரித்தியங்கிராதேவி கோவிலில் உள்ள குண்டு முத்து மாரியம்மனுக்கு பக்தர்கள் கூழ் காய்ச்சி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

    Next Story
    ×