search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜாகிர்உசேன் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
    X

    ஜாகிர்உசேன் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

    • இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டது.
    • கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சென்னை, ஓட்டல் இந்தியன் பேலஸ், உரிமையாளர், அல்ஹாஜ் செய்யது இப்ராகிம் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி தேசிய மாணவர்படை மாணவர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். இளையான்குடி, ஹாஜி இஸ்மாயில் கனி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் ராமநாதன் பேசினார். நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் ஜகாங்கிர் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழத்துறை உதவிபேராசிரியர்அப்துல் ரஹீம் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலபணிதிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம், ஹாஜி சிராஜூதீன், சுயநிதி பாடபிரிவு இயக்குனர் சபீனுல்லாஹ்கான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முஹம்மது முஸ்தபா உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×