search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLA Office"

    • எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவில் நகர செய லாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோ, நகர துணை செயலாளர் மோகன், ஷாஜஹான், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, பழனி, மாரிமுத்து, வட்ட செயலாளர் முருகன், மாவட்ட பாசறை பொரு ளாளர் சரவணன், மின்வா ரிய திட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியாக சமையல் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து சமையல் செய்து சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றார்.
    • 750 நாட்கள் முடிந்ததை முன்னிட்டு பொதுமக்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில், சட்டமன்ற உறுப்பினராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தேர்ந் தெடுக்கப்பட்டது முதல் மதியம் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.

    இதற்காக தனியாக சமையல் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து சமையல் செய்து சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றார்.

    இந்நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராக ராஜா எம்.எல்.ஏ. பதவி ஏற்றது முதல் வழங்கி வரும் இந்த உணவானது 750 நாட்களை அடைந்துள்ளது.

    சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதிய உணவு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பிக் கையில் பலர் உணவை பெற்று செல்கின்றனர். 750 நாட்கள் முடிந்ததை முன்னிட்டு பொது மக்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
    • 15 ஆண்டு காலமாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்படவில்லை.

    ஆம்பூர்:

    ஆம்பூரில் கடந்த 15 ஆண்டு காலமாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்படவில்லை.

    இதனால் இதற்கான இடத்தை பல்வேறு இடங்களில் தேர்வு செய்து எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டுவதற்கான இடத்தினை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா, ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ்அகமது, மதனூர் ஒன்றிய சேர்மன் சுரேஷ்குமார், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா, ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி, நகராட்சி பொறியாளர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×