search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court guidelines"

    • உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் கூறினார்.
    • விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லா மல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழி கள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்பு களும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான கிணறுகள் அச்சுறுத்தலாக உள்ளன.

    ஆழ்துளை கிணறு விபத்துக்களை தடுப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறி முறைகளை 2010-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வகுத்தளித்தி ருக்கிறது. அந்த வழிகாட்டி நெறி முறைகள் அனைத்தை யும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பசுமை நிதி மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

    திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோர கட்டுமான பள்ளங்கள், சாலையோர கால்வாய்கள், கைவிடப் பட்ட குவாரி கிடங்குகள் ஆகியவற்றில் விபத்து ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தலைமை செயலரும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த ஆலோசனையின் படி அனைத்து கிராமங்க ளிலும் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோரங்க ளில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள், ஆழமான கால்வாய்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அவற்றில் அந்தந்த துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்த கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில் சோனியா காந்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் திறப்பு விழா மற்றும் கொடி கம்பம், கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே. பாஸ்கர் தலைமை தாங்கினார். சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ, முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சோனியா காந்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டு திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து பெல் ஆன்சிலரி கம்பெனி உரிமையாளர்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து கோரிக்கை வைத்து பேசினர்.

    அக்ராவரம் பகுதியிலும் கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டினை திறந்து,பின்னர் ராகுல் காந்தி தெருவை தொடங்கிவைத்தார். .

    பின்னர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:-

    பாஜக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆகியவை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசியல் இயக்கங்கள்.

    மகாராஷ்டிராவில் சரத்பவாரின் கட்சி உடைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனா கட்சியை உடைத்தார்கள். சிவசேனாவை இரண்டாக உடைத்து ஒரு தரப்பு பாஜகவுக்கு ஆதரவாகவும், சரத்பவார் கட்சியில் ஒரு தரப்பு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள இரண்டு தரப்புகளும் அட்டை கத்திகள் தான்.

    தமிழக முதல் அமைச்சர் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கு தளபதியாக செய்படுகிறார். எனவே அவரை பலவீனப்படுத்த வேண்டும். அவருக்கு எதிராக செயல்பட வேண்டும். அவருடைய அரசை செயலிழந்த அரசாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அது தமிழகத்தில் முடியாது.

    தமிழக அரசியல் என்பது வேறு, வடஇந்திய பா.ஜ.கவால் தமிழக அரசியலை புரிந்து கொள்ள முடியாது. தமிழக அரசியலில் எங்கள் கருத்துகள் தான் வெற்றி பெரும்.

    காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. காவிரி பொது சொத்து, இதற்கு ஆணையம்,உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன.

    தமிழ்நாடு காங்கிரஸ் தமிழ்நாடு அரசு பக்கம் இருக்கும். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கணக்கு தெரியவில்லை. விதவை உதவிதொகை, முதியோர் உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை இது இல்லாமல் மகளிர் உரிமை தொகை என இந்த நான்கையும் கூட்டி பார்த்தால் 70 சதவீதம் பெண்கள் பயன்பெறு வார்கள். மேலும் தகுதியான வர்களுக்கு மகளிர் உரிமைதொகை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில செயலாளர் அக்ராவரம். கே.பாஸ்கர், மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், வி.சி.மோட்டூர்.கணேசன் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நினைவுயொட்டி,கட்சி கொடி ஏற்றி , கல்வெட்டுகளை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.

    ×