என் மலர்
சிவகங்கை
- புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
- சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் மேலபட்டமங்கலத்தில் மாணிக்க நாச்சி அம்மன் சித்தங்காத்த அய்யனார் கருப்பர் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
நம்பம்புடி அம்பலம், பன்னீர்செல்வம் அம்பலம், ஆறுமுகம் சேர்வை ஆகியோர் தலைமையில் இந்த மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி மேலபட்டமங்கலம், அப்பா குடிப்பட்டி, கொளுஞ்சிபட்டி, மின்னல்குடிப்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய 5 ஊர் கிராம மக்கள் இணைந்து புரவி எடுப்பு விழாவை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு இலுப்பைக்குடி வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்ட னர்.
மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை பின்பற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இம்மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் மஞ்சு விரட்டுகான பாதுகாப்பு பணிக்கு திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
- புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
- சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் மேல பட்டமங்கலத்தில் மாணிக்க நாச்சி அம்மன் சித்தங்காத்த அய்யனார் கருப்பர் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
நம்பம்புடி அம்பலம், பன்னீர்செல்வம் அம்பலம், ஆறுமுகம் சேர்வை ஆகியோர் தலைமையில் இந்த மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி மேலபட்டமங்கலம், அப்பா குடிப்பட்டி, கொளுஞ்சி பட்டி, மின்னல்குடிப்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய 5 ஊர் கிராம மக்கள் இணைந்து புரவி எடுப்பு விழாவை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு இலுப்பைக்குடி வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.
மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்க ளுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை பின்பற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இம்மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் மஞ்சு விரட்டுகான பாதுகாப்பு பணிக்கு திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
- பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு மற்றவர்களுக்கு பல மடங்கு கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள்.
- கேரளாவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் மாற்று கட்சிகளை சார்ந்த 60-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா அரியக்குடியில் நடந்தது.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி செயலாளர் சாயல்ராம் தலைமை தாங்கினார்.
தற்போது ஆளும் தி.மு.க. அரசு எதை சாதித்து விட்டது? ஓராண்டு சாதனை என எதற்கு இந்த விளம்பரம்? பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு மற்றவர்களுக்கு பல மடங்கு கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள்.
ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கும், ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது? பிரான்ஸ் நாட்டிடம் வாங்கிய ரபேல் விமான ஊழல் வழக்கின்போது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்த கோப்புகளை காணவில்லை என்று கூறினீர்களே. கோப்புகளையே பாதுகாக்க முடியாத நீங்களா நாட்டை பாதுகாப்பீர்கள்?
கேரளாவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் நட்சத்திர விடுதி போல அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கல்வியின் தரம் எவ்வாறு இருக்கிறது?
இங்கு உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவது நாம்தமிழர் கட்சி மட்டுமே. நாங்கள்தான் தினமும் சண்டை போடுகிறோம். முறைகேடுகளை முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் கவனத்திற்கு நாங்கள்தான் கொண்டு செல்கிறோம்.
அ.தி.மு.க., பா.ம.க. ஆகியோர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாலேயே, அந்த கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைகிறார்கள். அண்ணாமலையால் வரும் தேர்தல்களில் எங்களைப்போல் தனித்து போட்டியிட தைரியம் உள்ளதா?
இவ்வாறு அவர் கூறினார்.
- மானாமதுரை-திருச்சி இடையே மின் ரெயில் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
- மதுரை-ராமேசுவரம் வரையும், திருச்சி- மானாமதுரை-விருதுநகர் வரை நடைபெற்றுவருகிறது.
மானாமதுரை
நாடுமுழுவதும் அனைத்து ரெயில் பாதைகளும் மின் மயமாக்கம் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதில் மதுரை-ராமேசுவரம் வரையும், திருச்சி- மானாமதுரை-விருதுநகர் வரை நடைபெற்றுவருகிறது.
தற்போது ராமநாதபுரம் வரை மின் பாதையில் வாரம் ஒருமுறை செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் செல்கிறது. தினமும் சோதனை அடிப்படையில் மின்சார ரெயில் என்ஜின் இயக்கப்படுகிறது. மானாமதுரை-விருதுநகர் இடையே அமைக்கப்பட்ட மின்பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் ஆய்வு முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது திருச்சியிலிருந்து காரைக்குடி வரை மின்பாதை பணிகள் முழுவதும் முடிக்கப் பட்டுள்ளது.
மீதமுள்ள காரைக்குடி - மானாமதுரை இடையே உள்ள பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இறுதி பணியாக மானாமதுரை வைகைஆற்றில் உள்ள ரெயில் பாலத்தில் சிறப்பு ரெயில் ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்தின் தூண்களில் மின் கம்பங்கள் அமைக்கும்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
அதன் பின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் புதிய மின்பாதையில் அதி வேக ெரயிலை இயக்கி சோதனை நடத்துவார். இந்த பணி முடிந்தவுடன் நேரடியாக சென்னையில் இருந்து காரைக்குடி- மானாமதுரை வழியாக புதிய மின் பாதையில் விருதுநகர், கன்னியாகுமரி வரை செல்ல முடியும்.
வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில்களும் மின் பாதையில் மானாமதுரை வரை வருவதால் பயணநேரம் குறைய வாய்ப்பு உள்ளது. மின்பாதை பணிகள் நிறைவுபெற்றவுடன் மானாமதுரை- காரைக்குடி வழியாக தென்மாவட்டங்களில் இருந்து கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களை சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு இயக்கவேண்டும் என சிவகங்கை மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- 68 கிராமங்களில் பயனாளிகளை தேர்வு செய்ய நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மேலும் புதிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வை நடத்த உள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம பஞ்சாயத்துக் களிலும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் 5 ஆண்டு காலத்திற்குள் சுழற்சி முறையில் அனைத்து பஞ்சாயத்துக்களிலும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நல திட்ட பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு முதல் கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்தம் 68 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்களில் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, மகளிர்திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வள ஆதாரத் துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு நலத்திட்ட முகாம் நடத்துகின்றன. இந்தமுகாம் நாளை (வெள்ளிக்கிழமை) 68 கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெறுகிறது.
இந்த முகாமில் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு மேலும் புதிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வை நடத்த உள்ளனர். எனவே, இந்த முகாம்களில் தொடர்புடைய கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மானாமதுரையில் சிறப்பு ரெயில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் வழியாக வேளாங்கண்ணி வரை புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டது.
இதில் மானாமதுரை நிறுத்தம் இல்லாமல் இருந்தது. இதனால் மானாமதுரை மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தென்னகரெயில்வே மேலாளர், மத்திய ரெயில்வே அமைச்சகம், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினார். அதில், எர்ணாகுளம்- வேளாங்கன்னி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து இந்த வாரம் முதல் புதிய வாரந்திரரெயில் மானா மதுரை ஜங்சனில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது.
எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் ,புனலூர்,செங்கோட்டை, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் இந்த சிறப்பு ெரயிலுக்கு மானாமதுரை ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மிக முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமான மானாமதுரை ரெயில் நிலையத்தில் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நிற்காமல் சென்றது.
தற்போது கடந்த 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை, 10 சேவைகள் இயங்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் கொல்லம் ,புனலூர், செங்கோட்டை ,கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.
இந்த ெரயிலுக்கு மானாமதுரையில் ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு ரெயில் நிறுத்தம் வழங்க வேண்டுமென்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று மானாமதுரையில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மானாமதுரை சட்ட மன்ற தொகுதி மக்கள் சார்பில் ரெயில்வே அதிகாரிகளுக்கு நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- இளையான்குடி பேரூராட்சி தலைவருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
- செய்யது ஜமீமா பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி பேரூராட்சி தலைவராக பதவி ஏற்ற செய்யது ஜமீமா பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி நன்றி தெரிவித்து பேரூராட்சிகளின் பொது நிதி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். தலைவர், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்களுக்கான மாதாந்திர படி தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமாவை பாராட்டினார். அவர் கூறிய கோரிக்கையின்படி 2-ம் நிலை மற்றும் முதல் நிலை பேரூராட்சிகளுக்கு பொதுநிதி உச்சவரம்பு ரூ. 4 லட்சத்திலிருந்து, ரூ.10 லட்சமாகவும், தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு உதவி இயக்குனர் அலுவலக பொது நிதி உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாகவும், கலெக்டர் நிதி ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதிகளின் உச்சவரம்பை உயர்த்தியதற்காக சிவகங்கை மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் சார்பில் இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
- கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி காரைக்குடியில் 9-ந் தேதி நடக்கிறது.
- கலந்து கொள்ளும் பயிற்சியாளருக்கு வரைபட அட்டை வழங்கப்படும்.
சிவகங்கை
மதுரை மண்டல கலைபண்பாட்டுதுறை உதவிஇயக்குனர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப் பாட்டில் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் சவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக ஓவியப்பயிற்சி பட்டறை நடத்தவும் அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்த ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், பேப்பர், பனை மரம், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது. இந்த ஓவியப்பயிற்சி முகாம் வருகிற 9-ந்்தேதி அன்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
மாணவ-மாணவிகள் வரைந்த ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். இதில் கலந்து கொள்ளும் பயிற்சியாளருக்கு வரைபட அட்டை வழங்கப் படும். வரைபட பொருட்களை பயிற்சியாளர்கள் எடுத்து வர வேண்டும்.
பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலை ஆர்வ மிக்க மாணவ-மாண விகள்பயன்படுத்தி க்கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய மதுரை மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிதோறும் நடைபயணத்தை மானாமதுரையில் நடத்தினர்.
- 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.
மானாமதுரை
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிதோறும் நடைபயணத்தை மானாமதுரையில் நடத்தினர். அண்ணா சிலை தொடங்கி நகராட்சி அலுவலகம் வரைக்கும் நடைபயண பேரணி நடந்தது.
சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் திலகவதி, துணைத் தலைவர் பேயத்தேவன், இணைச்செயலாளர் பாண்டி மீனாள், செயலாளர் பாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் சீமைச் சாமி, மாவட்ட துணை செயலாளர் பாலுசாமி, ஒன்றிய பொருளாளர் தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது மாநிலத்தலைவர் கலா பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. ஒரு சத்துணவு ஊழியர் 3 முதல் 7 பள்ளிகள் வரைக்கும் சத்துணவு மையங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வர வேண்டியுள்ளது .
சமையலர் மற்றும் உதவியாளர்கள் இல்லாமல் பல மையங்கள் செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சத்துணவு ஊழியர்களின் ஊதியம் சிறப்பு காலமுறை ஊதியம் என பெயர் மாற்றினார்கள்.ஆனால் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காத நிலை தொடருகிறது. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியர்களுக்கு சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்கவேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.
முதலமைச்சரிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி திருச்சியில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம். ஜூலை 15-ல் வாழ்வாதார உரிமையும் வரையறுக்கப்பட்ட ஊதியம் கேட்டு மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி சென்னையில் முதலமைச்சரை சந்தித்து நீதி கேட்பது என்று முடிவு எடுத்து மக்களிடம் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். வருகிற 10-ந் தேதி வரை பிரசார பயணம் நடைபெறுகிறது. 2500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். திருச்சியில் வருகிற 10-ந் தேதி கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேங்கைபட்டிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார்.
- வீடுகளை பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டை வேங்கைபட்டியில் ரூ.2.92 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 100 வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையம், ரேசன்கடை உள்ளிட்ட கட்டிடங்களும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, தெரு விளக்குகள், தார்சாலை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சமத்துவபுரத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை மதுரைக்கு வந்தார். மதுரை-நத்தம் சாலையில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலூரில் உள்ள ஓட்டலில் இரவில் தங்கிய அவர், இன்று காலை 9 மணிக்கு அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். வழிநெடுகிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
பின்பு வேங்கைபட்டிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். முன்னதாக சமத்துவபுரத்தின் முன் பகுதியின் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைதொடர்ந்து சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, அங்கன்வாடி மையம், விளையாட்டுமைதானம், ரேசன்கடை, முன்னாள் அமைச்சர் கே. மாதவன் நினைவு நூலகம் உள்ளிட்டவைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். வீடுகளை பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, கார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழரசி எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஏற்கனவே நிறைவு பெற்ற ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 59,162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தி.மு.க.வினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- சிவகங்கையில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
- ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட பா.ஜ.க சார்பில் மத்திய பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.
மூத்த தலைவர் எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்- மாநில உள்ளாட்சி மேம்பாட்டு தலைவர் சித.பழனிச்சாமி, நகரத்தலைவர் உதயா, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், உள்ளாட்சி மேம்பாட்டு தலைவர் பாண்டித்துரை, ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
மத்திய அரசு ரூ.42-க்கு அரிசி வழங்குகிறது. ஆனால் ரூ.2-ஐ கொடுத்துவிட்டு அதில் கருணாநிதி ஸ்டிக்கரை ஒட்டி மாநில அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை பங்காளனாக தி.மு.க. அரசு கபட நாடகமாடிவருகிறது.
ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது. அந்த ஊழலில் சம்பந்தப்படாத அமைச்சர்களே இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், சிறிய தவறு நடந்துவிட்டதாகவும் அந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு நிறுவனங்கள் கூட இன்று வரை கருப்பு பட்டியலில் வைக்கப்படவில்லை.
கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இருந்து அம்மா பெட்டகம் அறிவித்து அதில் 8 பொருட்களில் ஒன்றாக ஊட்டச்சத்து மாவு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊட்டச்சத்து மாவை பொங்கல் தொகுப்பு வழங்கிய நிறுவனம்தான் கடந்த ஆண்டு 24 லட்சம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவை வழங்கியுள்ளது.
பொங்கல் தொகுப்பே தரமில்லாமல் வழங்கப்பட்ட நிலையில் அதே நிறுவனம் இந்த ஊட்டச்சத்து மாவை வழங்கினால் தாயும் குழந்தையும் எவ்வாறு நலமாக இருக்க முடியும் ? ஒரே, ஒரு நாள் ஊழல் இல்லாத அரசை தமிழகத்தில் நடத்தி காட்டுங்கள்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுக்கிறேன். ஆனால் அவர்களால் அது முடியாது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொகுதிக்கான நலத்திட்டத்தில் பங்கேற்று செய்திகளில் வருவதை காட்டிலும், தினமும் முறைகேடு வழக்குகளுக்காக வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிவகங்கை கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வருகிற 11-ந் தேதி திருக்கல்யாணமும், 14-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவல் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டிற்கான வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடிமரத்திற்கு முன்பு சிறப்பு அலஙகாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவேங்கடமுடையான் எழுந்தருளினார்.கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார்.
வருகிற 11-ந் தேதி திருக்கல்யாணமும், 14-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடாசலம் செட்டியார் தலைமையில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






