என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மானாமதுரையில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சிப்காட் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முகமது தாரிக் மற்றும் காவலர்கள் சுந்தர், ரமேஷ் ஆகியோர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்சுழியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன், ஜெயவீரபாண்டியன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தப்பியோடிய மகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான இருவரிடமும் மதுவிலக்கு தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பாண்டி யன், தலைமை காவலர் மலையரசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தேவகோட்டை அருகே உள்ள எழுவங்கோட்டை கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத விஸ்வநாதசுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் வைகாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம்நடந்தது. முன்னதாக கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி யானை, குதிரை, காளை, மயில் வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் மற்றும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடை பெற்றது.

    கோவிலை சுற்றி 4 வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. தேர் நிலையை அடைந்ததும் மாம்பழம், வாழைப்பழங்களை சூறை விட்டனர். அதனை பக்தர்கள் பிடித்து எடுத்து சென்றனர்.

    இதில் எழுவன்கோட்டையை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களான தென்னிலை நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • தேவகோட்டையில் சாலையில் கிடந்த நகைகளை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 16 பவுன் நகைகளை பையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வருபவர் போரிவயல் கிராமத்தை சேர்ந்த பிரபு மனைவி பிரியங்கா (வயது28). இவர் உறவினரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு தான் பணிபுரியும் கடைவாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

    அந்த வாகனத்தில் 16 பவுன் நகைகளை பையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார். வீட்டுக்கு செல்வதற்கு முன்பு இரு சக்கர வானத்தில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பிரியங்கா தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது பிரியங்கா பணிபுரிந்த நகைக்கடையின் மேலே காந்தி ரோட்டை சேர்ந்த நைனா முகம்மது மகன் முகமது இப்ராகிம் (35) கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது கடைவாசலில் கிடந்த பையை பார்த்தார். அதில் தங்க நகைகள் இருந்ததை கண்டு காவல்நிலையத்திற்கு சென்று 16.5 பவுன் நகையை இன்ஸ்பெக்டரிடம் ஒப்ப டைத்தார். அதில் தாலி செயின், வளையல்கள், செயின், மோதிரம் இருந்தது.

    அந்த நகை பிரியங்கா விடம் ஒப்படைக்கப்பட்டது. கீழே கிடந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 16.5 பவுன் நகைகளை காவல் நிலை யத்தில் ஒப்படைத்த முகமது இப்ராகிமின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

    • இளையான்குடி அருகே வரும்முன் காப்போம் திட்டத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி முருகன் தலைமை வகித்தார்.

    ஒன்றியத் தலைவர் முனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி குத்துவிளக்கேற்றி மருந்துப்பெட்டகம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி பேசினார்.

    இதில் சிவகங்கை மாவட்ட துணை இயக்குநர் ராம்கணேஷ், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்- முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கருணாகரன், மலைமேகு, தமிழரசன், கண்ணன், சுதர்சன், சரவணன், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன், தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மானாமதுரை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி பால்குட உற்சவ விழா நடந்தது.
    • மாரியம்மன் சன்னதியில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன்கோவிலில் வைகாசி பால்குட உற்சவம் மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க பால்குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன்பின்னர் மாரியம்மன் சன்னதியில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது.

    பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் மூலவர் முத்துமாரி அம்மனுக்கு புனித நீராலும், பால், திரவிய பொருள்கள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் அபி ஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவில திரளான பக்தர்கள் பங்கேற்று முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ராலெ பாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பிரபாகரன் மற்றும் முத்துமணி. இருவரும் திருப்புவனம் அருகே உள்ள மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர். இதுகுறித்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்த போலீசார் விரைந்து சென்று வாளுடன் திரிந்த 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • காளையார்கோவிலில் இன்று சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தேரை வடம் பிடித்து இழுத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகர் மையபகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற சவுந்தரநாயகி அம்மன் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இங்கு 3 பிரதான சிவபெரு மான் சன்னதிகளும், அம்மன் சன்னதிகளும், 2 பெரிய ராஜகோபுரங்க ளும் அமைந்துள்ளளன. இந்த கோவிலில் சுவாமி-அம்மனுக்கும் பங்குனி, வைகாசி, ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது.

    வைகாசி மாதத்தில் சோமேஸ்வருக்கும், சவுந்தர நாயகி அம்ம னுக்கும் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 9-வது நாள் நிகழ்வாக இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

    விழாவில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தேரை வடம் பிடித்து இழுத்தார். பா.ஜ.க. முன்னாள் தேசிய பொது குழு உறுப்பினர் எச். ராஜா, மாவட்ட தலைவர் சக்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் இதர கடன்களுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பொது நகைகடன், வட்டியில்லா பயிர்க்கடன், வட்டி இல்லா கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், சுய உதவிகுழு கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது‌.

    எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், நில உடமை தொடர்பான 10 (1) கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

    கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று பங்குதொகை மற்றும் நுழைவு கட்டணமாக ரூ.110 செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களை பெற்று பயனடையலாம்.

    இது தொடர்பான விவரங்களுக்கு சிவகங்கை, திருப்புவனம் வட்டத்திற்கு கள அலுவலர் குறிஞ்சி இளவரசனையும், காளையார்கோவில் வட்டத்திற்கு நவநீதகிருஷ்ண னையும், மானாமதுரை வட்டத்துக்கு மாரியையும், இளையான்குடி வட்டத்திற்கு அழகர்சாமியையும், கல்லல் தேவகோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்கு பொன்னையாவையும், எஸ். புதூர், சிங்கம்புணரி வட்டத்துக்கு வனிதாவையும், சாக்கோட்டை, கண்ணங்குடி வட்டத்திற்கு பூங்கோதையையும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மாங்குடி எம்.எல்.ஏ., தாசில்தார் மாணிக்க வாசகம் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    • விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கழனிவாசல் சூரங்குடி பைபாஸ் சாலையில் வசிப்பவர் ரீகன் (வயது30) தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ரூத். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையொட்டி ரூத்தின் உறவினர்கள் 26 பேர் ஒரு வேனில் கழனி வாசல் நோக்கி வந்தனர். அவர்கள் வந்த வேன் காரைக்குடியை அடுத்த திருச்சி-ராமேசுவரம் சாலையில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே வந்தபோது சிமெண்டு ஏற்றி வந்த லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் மீது திடீரென வேன் மோதியது.

    இதில் வேனில் பயணம் செய்த 26 பேர் படுகாயம் அடைந்தனர். தவப்பிரியா (22) மணிமேகலை (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் ஒரு பெண்ணின் கை துண்டானது. ஒரு குழந்தை உள்பட 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாங்குடி எம்.எல்.ஏ., தாசில்தார் மாணிக்க வாசகம் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் உறவினரை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசின் தாமதமான முடிவுகள் தான் தற்போது விலைவாசி உயர்வுக்கான காரணமாகும்.
    • மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சேர்ந்து முடிவு எடுத்தால்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசியலில் கூடுதலாக கவனம் செலுத்தும் வாய்ப்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்திருக்கிறது.

    குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் விருப்பம்.

    இலங்கை ஒரு காலத்தில் தனிநபர் வருமானத்தில் உயர்ந்த நாடாகவும், 98 சதவீதம் எழுத்தறிவுமிக்க மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நாடாகவும் இருந்தது. ஏற்றுமதியில் பல துறைகளில் முன்னணியில் இருந்த நாடு. அவர்களுக்கே இந்த நிலை வந்திருப்பதால் அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் உள்ளது.

    அதாவது தன்னிச்சையாக முடிவுகளை அரசு எடுக்காமல் பொருளாதார நிபுணர்களை கலந்தாலோ சித்தும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டும் எடுத்த முடிவுகள்தான் நிலைத்த முடிவுகளாக, நல்ல விளைவுகள் தரக்கூடிய முடிவுகளாக இருக்கும். தற்போது நம் நாட்டில் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது.

    விலைவாசி உயர்வுக்கு அந்நிய காரணிகளும், உள்நாட்டு காரணிகளும் இருக்கின்றன. இரண்டும் சேர்த்துத்தான் விலைவாசி உயர்வை தீர்மானிக்கிறது. உள்நாட்டு காரணிகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.

    3, 4 மாதங்களுக்கு முன்பே பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை அரசு குறைத்திருக்க வேண்டும். ஜி.எஸ்.டி.வரிவிகிதம் மற்றும் சுங்கவரியை குறைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் தடுக்க அரசு தவறி விட்டது. அதனால்தான் தற்போது பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்போது உக்ரைன் போர், கச்சா எண்ணை விலை உயர்வு போன்றவையும் சேர்ந்துகொண்டு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    எனவே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சேர்ந்து முடிவு எடுத்தால்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். தற்போது வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பதை ஒன்னரை மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி செய்திருக்க வேண்டும். அரசின் தாமதமான முடிவுகள் தான் தற்போது விலைவாசி உயர்வுக்கான காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரைக்குடி அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியர் போராட்டம் நடத்தினார்.
    • 2020-ல் முதல்வர் உத்தரவிட்டும் தன்னை பணி செய்ய விடவில்லை.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கபள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பநாதன். இவருக்கு வழங்கப்பட வேண்டிய முறையான சம்பள உயர்வை 2013-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை என்றும், 2017 முதல் வழங்க வேண்டியய 7-வது ஊதியக்குழு ஊதியத்தை வழங்கவில்லை என்றும் கூறி பல வருடங்களாக போராடி வருகிறார்.

    2016 முதல் பள்ளி நிர்வாகம் அவரை பணி செய்ய விடவில்லை. 2018-ல் கலெக்டர் உத்தரவிட்டும், 2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டும், 2020ல் முதல்வர் உத்தரவிட்டும் தன்னை பணி செய்ய விடவில்லை.

    இது குறித்து தேவ கோட்டை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்து காரைக்குடியில் உள்ள சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன் தலைமை ஆசிரியர் புஷ்பநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.காரைக்குடி போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    • இளையான்குடி நகருக்குள் இருக்கும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது.
    • புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் மனுக் கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

    இளையான்குடியில் ஊருக்கு வெளியே யாருக்கும் பயன் தராத வகையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இளையாங்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும், மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்க வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டா லினிடம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சைபுல்லாஹ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில், இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×