search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி பால்குட உற்சவ விழா
    X

    கோவில் விழா

    முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி பால்குட உற்சவ விழா

    • மானாமதுரை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி பால்குட உற்சவ விழா நடந்தது.
    • மாரியம்மன் சன்னதியில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன்கோவிலில் வைகாசி பால்குட உற்சவம் மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க பால்குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன்பின்னர் மாரியம்மன் சன்னதியில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது.

    பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் மூலவர் முத்துமாரி அம்மனுக்கு புனித நீராலும், பால், திரவிய பொருள்கள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் அபி ஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவில திரளான பக்தர்கள் பங்கேற்று முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ராலெ பாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×