என் மலர்tooltip icon

    சேலம்

    • ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர செய்தோம்.
    • மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினை அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    நான் சேலம் மாவட்டத்தில் இருக்கின்றவன். நம்முடைய மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நான் இருக்கின்ற இந்த கால கட்டத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தது மகிழ்ச்சி அடைகிறேன். 2011-2021 வரை சேலம் மாவட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர செய்தோம். குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து ஆங்காங்ககே இருக்கின்ற ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் பெய்கின்ற நீரை சேமித்து கோடை காலத்தில் பயன்படுத்த முடியும் என்கிற திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஏரிகளில் அள்ளப்படும் வண்டல் மண் நம்முடைய விளை நிலங்களில் இயற்கை உரங்களாக பயன்படுத்தினோம்.

    அதேபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தோம். நம்முடைய விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்தோம். இப்படி விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தினோம். நம்முடைய மாவட்டம் விசை தறி நிறைந்த பகுதி. இன்றைய தினம் விவசாய தொழில் நலிவடைந்து கொண்டிருக்கின்றன.

    இந்த ஆட்சியினுடைய நிர்வாக திறமையற்ற காரணத்தினால் இந்த 2 தொழில்களும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருகின்றபோது இந்த விவசாயிகளும், விசை தறிதொாழிலாளர்களுக்கும் உதவி செய்யப்படும். மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
    • அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,906 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 21,135 கன அடியாக அதிகரித்துள்ளது.

    நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    • அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணை நீர்மட்டம் 118.80 அடியாகவும், நீர் இருப்பு 91.56 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,769 கன அடியிலிருந்து 7,591 கன அடியாக சரிந்துள்ளது. அணை நீர்மட்டம் 118.80 அடியாகவும், நீர் இருப்பு 91.56 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

    • அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • நடப்பாண்டு ஏற்காட்டில் பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளதால் காபி பயிர் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது.
    • காபி பயிரை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் பூ பூக்கும், ஜூன், ஜூலையில் காபி கொட்டை உற்பத்தியாகும்.

    சேலம்:

    தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் தான் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    இங்கு 5 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பில் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக அராபிகா வகை காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    நடப்பாண்டு ஏற்காட்டில் பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளதால் காபி பயிர் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது. காபி செடிகளில் காய்ப்பு பிடித்துள்ளது. அவ்வாறு காய்த்துள்ள செடிகளை பராமரிக்கும் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த காபி விவசாயிகள் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சேர்வராயன் மலைப்பகுதியில் நாகலூர், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு, செம்மநத்தம், காவேரிபீக், கொட்டச்சேடு, தலைச்சோலை உள்பட பல கிராமங்களில் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது. காபி பயிரை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் பூ பூக்கும், ஜூன், ஜூலையில் காபி கொட்டை உற்பத்தியாகும். பின்னர் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை அறுவடை செய்யப்படும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்ப்பு பிடித்துள்ள காபி கொட்டைகளில் புழு, பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியும், அவ்வப்போது பராமரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த 27-ந்தேதி மாலையில் இருந்து நேற்று காலை 9 மணி வரை சுமார் 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர்.

    சேலம்:

    எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். இதனால் எல்.பி.ஜி. வினியோகம் தடையின்றி சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்தார்.

    • காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க தடை விதித்து பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 4-முறை நிரம்பியது. இதையடுத்து அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் கடந்த 27-ந் தேதி மாலை அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அது நேற்று முன்தினம் மாலை முதல் 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க தடை விதித்து பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கடந்த 27-ந் தேதி முதல் இன்று காலை 9 மணி வரை 1 லட்சம் கனஅடியை தாண்டி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் காலை 9 மணி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. பின்னர் மதியம் 1 மணியளவில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. ஆனாலும் தண்ணீர் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி சீறிப்பாய்ந்து செல்கிறது.

    • போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.
    • பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    சேலம்:

    இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.

    எனவே தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் லாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில் செல்வன் கூறும்போது:-

    இது சம்பந்தமாக பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது என்றார்.

    • மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவை நிரம்பி வருகிறது.

    இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக கடந்த 25-ந் தேதி நிரம்பியது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக நேற்று மதியம் 12 மணியளவில் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலையில் அது 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    அதே போல் நேற்று இரவு கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீரும் இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 500 கனஅடியாக இருந்தது. இதையடுத்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது போக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து இன்று 2-வது நாளாகவும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆறு வெள்ளக்காடானது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    மேட்டூர் அணை 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணை பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி ஆர்ப்பரித்து செல்கிறது. இதையடுத்து குமாரபாளையம்-ஈரோடு மாவட்டம் பவானி இடையே உள்ள பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பள்ளிபாளையம் காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதை பள்ளிபாளையம் மேம்பாலத்தில் இருந்தபடி பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பள்ளிபாளையம் சந்தைப்பேட்டை பகுதியில் ஆற்றின் மையப்பகுதியில் உள்ள முனியப்பன் சாமி சிலையை தண்ணீர் சூழ்ந்து கொண்டு சென்றது. இந்த பகுதியிலும் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் செல்பி எடுக்கவும் தடை விதித்து பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து 11 மாவட்ட கலெக்டர்களுக்கும் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
    • மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது .

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில், சேலம் மேட்டூர் அணையில் இன்று மாலை 6 மணியில் இருந்து1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படும். அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் மதியம் 12 மணி முதல் 75 ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படும். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக 1 லட்சம் கனஅடி வரை அதிகரிப்படலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதை இன்று ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆற்றில் தண்ணீர் அதிகரித்து காணப்படுவதால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ×