என் மலர்tooltip icon

    சேலம்

    • கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • இதை ஒட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதை ஒட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. ஏற்காட்டில் மாலை 5 மணிக்கு சாரல் மழையாக பெய்ய தொடங்கியது.

    பின்னர் 4 மணி நேரம் கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மழையை தொடர்ந்து ஏற்காட்டில் ஏழு மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் அதிகாலை ஒரு மணி அளவில் தான் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஏற்காடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    சேலம் மாநகரில் இரவு 8 மணி அளவில் மழை பெய்தது மாணவரில் அஸ்தம்பட்டி கொண்டலாம்பட்டி அம்மாபேட்டை ஜங்ஷன் உள்பட அனைத்து பகுதிகளிலும் பெய்த மழையால் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது எடப்பாடி மற்றும் கவுண்டம்பட்டி பல்லாண்டு வலசு வெள்ளநாயக்கன்பாளையம் வீரப்பம்பாளையம் நாச்சிபாளையம் கொங்கணாபுரம் புதுப்பாளையம் தாதாபுரம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரம் கனமழை பெய்தது இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காடையாம்பட்டி 20, பெரிய கோவில் 19, சேலம் 14, ஆனை மடுவு 12, வீரகனூர் 11, பெத்தநாயக்கன்பாளையம் ஏழு, தம்மம்பட்டி ஆறு, ஆத்தூர் 5.4, ஓமலூர் 4.6, எடப்பாடி ஒன்று புள்ளி நான்கு மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 168.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்றும் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    • ஏற்காடு பிலியூரில் உண்டு உறைவிட பள்ளியில் விடுதி காப்பாளர் மாற்றப்பட்டார்.
    • இதனால் மாணவர்கள் உணவின்றி தவிப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிலியூரில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் அசோக் என்பவர் காப்பாளராக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் திடீரென கருமந்துறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அந்த விடுதியில் தங்கி படித்த 41 மாணவ, மாண விகள் சாப்பாடு கிடைக்கா மல் தவித்து வருகிறார்கள்.

    எனவே உடனடியாக இந்த உண்டு உறைவிட பள்ளிக்கு ஒரு காப்பாளர் நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கி ணைப்பாளர் சரஸ்ராம் ரவி, கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்துள்ளார்.

    • சேலம் அணைமேடு ரெயில்வே கேட் மினி வாகனம் மோதி உடைந்தது.
    • இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     சேலம்:

    சேலத்தில் இருந்து அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம் வழியாக அரூர், பேளூர், ஆத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், பாண்டிச்சேரி, திருப்பதி, திருப்பத்துார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணைமேடு ரெயில்வே கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும் .

    காலை மாலை என இரு வேளைகளிலும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் படிக்கும் மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்கள் செல்லும் ஆட்டோக்கள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் ரெயில்வே கேட் பகுதியாக அணைமேடு ரெயில்வே கேட் இருந்துவருகிறது.

    சேலம் - விருதாச்சலம் நெடுஞ்சாலை பிரிவில் இந்த இடம் அமைந்துள்ளது. ரெயில் செல்லும் ஒவ்வொரு சமயத்திலும், கேட் அடைக்கப்படும்போது இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இந்த ரெயில்வே கிராசிங் பகுதியில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு, மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

    இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை ரெயில்வே கேட்டில் மினி வாகனம் மோதியது. இதனால் கேட் சேதமானது.

    இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கேட் உடைந்ததால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற 657 வீரர், வீராங்கனைகளும் சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற சென்றனர்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் நடைபெற்றது. இதில் நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், மேசைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 657 வீரர், வீராங்கனைகளும் சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற சென்றனர்.

    இதில் முதற்கட்டமாக கடந்த 29-ந்தேதி சேலம் மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி பிரிவைச் சார்ந்த கபடி, வாலிபால் ஆண், பெண் அணிகளும், பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த சிலம்பம் ஆண், பெண் அணிகள் என 64 மாணவ, மாணவிகள் சேலத்திலிருந்து சென்னை சென்றனர்.

    இதில் கல்லூரி அளவில் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் ஜாக்சன் வெள்ளிக் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, அலங்கார வீச்சுப் பிரிவில் குமரேசன் வெள்ளிக் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும்,

    சுருள்வாள் வீச்சுப் பிரி வில் மல்லூர் அரசு பள்ளி யில் பயிலும் கிருஷ்ண மூர்த்தி வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, மேச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் ஓவியா ஸ்ரீ வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, கல்லூரிப் பிரிவில் ஜெனிபர் வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    சிலம்பம் பிரிவில் சேலம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களைப் பெற்று வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மாவட்ட கலெக்டர் கார்மே கம் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

    அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ்.சிவரஞ்சன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
    • சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது.

    சேலம்:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஏ.டி.ஜி.பி. மாற்றப் பட்டதை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

    அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது. இதில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி யது உட்பட பல்வேறு விதி மீறல் தொடர்பாக 8 ஆயி ரத்து 971 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. போதையில் வாக னம் ஓட்டிய 213 பேரிடம் வாக னம் பறிமுதல் செய்து அப ராதம் விதித்தனர். மாநகரில் உள்ள 824 ரவுடிகளில் 424 பேரை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்றிரவு பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
    • இதில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்றிரவு பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது. சந்தன அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தருமராஜர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணபகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
    • இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    வாழப்பாடி:

    மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க கிராமங்கள், ஊராட்சிகளை தூய்மை செய்தல், டெங்கு கொசுக்கள் உருவாகும் காரணிகளை அப்புறப்படுத்துதல், குடிநீர் மற்றும் மேல்நிலைத்தொட்டிகள் பராமரித்தல் மற்றும் குளோரினேசன் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம மக்களுக்கு டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற செயலர்கள், பேளூர் மற்றும் திருமனூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நீட் விலக்கு மசோதாவை 2-வது முறையாக நிறைவேற்றி தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக ஜனாதிபதிக்கு கவர்னர் ரவி அனுப்பி வைத்தார்.
    • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. முதலில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காத்திருப்பில் வைத்ததில் தொடங்கிய பிரச்சனை தற்போது வரை தொடர்ந்து கொண்டே உள்ளது.

    நீட் விலக்கு மசோதாவை 2-வது முறையாக நிறைவேற்றி தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக ஜனாதிபதிக்கு கவர்னர் ரவி அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து ஏராளமானோர் தொடர்ந்து தற்கொலை செய்தி கொண்டிருந்த நிலையில், இதற்காக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இதற்கும் கவர்னர் ரவி ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதனையடுத்து மீண்டும் தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. பின்னர் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி தொடர்பான விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சேலத்தில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில், கிண்டியாரே தயாரா? மத்திய பா.ஜ.க. அரசில் 44 சதவீதம் மந்திரிகள் குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள்.

    இவர்களை பதவியில் இருந்து விலக சொல்லி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவாரா கவர்னர்? என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டல் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • கடந்த 28-ந்தேதி 92.40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 87.65 அடியானது.

    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 233 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் சரிந்து 163 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் நேற்று காலை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று மாலை தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 28-ந்தேதி 92.40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 87.65 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 86.77 அடியானது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

    தர்ணா போராட்டம்

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏழை மக்களாகிய எங்களுக்கு, குடியிருக்க வீடு இல்லாமல் மழை காலங்களில் ஒரே வீட்டில் 3, 4 குடும்பங்கள் என அடைபட்டு கிடக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பள்ளிப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமாக குண்று நிலம் அதிகமாக உள்ளது. அந்த நிலத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    இதேபோல தலைவாசல் அருகே உள்ள பெரியேரி காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் சுமார் 30 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், ரூ.1500 உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதுடன், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூர் பாகல்பட்டி கிராமம் தாசநாயக்கன்பட்டி அருந்ததிர் காலனி மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடன் உதவி கேட்டு

    சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

    சேலம் மாநகராட்சி 45-வது வார்டு பஞ்சதாங்கி ஏரி நரிக்குறவர் காலனியில் 42 வருடமாக வாழ்ந்து வருகிறோம். காலம் காலமாக எங்கள் சமுதாய மக்கள், ஊசி பாசி மணி மாலைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம்.

    எங்கள் சமுதாய மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த, அவர்களின் திறமை, தகுதிக்கேற்ப அண்ணல் அம்பேத்கார் மற்றும் தாட்கோ மூலம் கடன் உதவி அளித்து நரிக்குறவர் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    அரசும் மானிய கடன் வழங்க முன் வந்தாலும் வங்கியில் உள்ள மேல் அதிகாரிகள் மானியக் கடன் தர தயக்கம் காட்டுகிறார்கள். ஆகவே அரசு அதிகாரிகளும், எங்கள் மீது கருணை கூர்ந்து மானிய கடன் உதவி பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கடந்த ஜனவரி மாதம் இவர் மீது ஒரு வழக்கு தொடர்பாக பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
    • தலைமறைவான தேடி வந்த நிலையில் இன்று காலை அருள் மணியை ேபாலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள பெருமாள் கவுண்டபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அருள்மணி (வயது 29).

    இந்த நிலையில் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கடந்த ஜனவரி மாதம் இவர் மீது ஒரு வழக்கு தொடர்பாக பதிவு செய்து அவரை தேடி வந்தனர். தலைமறைவான தேடி வந்த நிலையில் இன்று காலை அருள் மணியை ேபாலீசார் கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (48) மற்றும் இவரது மகன் ரஞ்சித் குமார் (24) ஆகியோர் மீது சேலம் ஊரக சமூக நல அலுவலர் ஜீவா கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

    • வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்தார்.
    • இந்த சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் உடனடியாக தினகர்பாபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள காசக்காரனூர் கென்னடி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் தினகர்பாபு (வயது 26).

    இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்தார். இந்த சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் உடனடியாக தினகர்பாபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினகர்பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×