என் மலர்
சேலம்
- தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது.
இதில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறியும், அங்கு அமைதி ஏற்படுத்த கோரியும் சேலம் மாவட்ட கிறிஸ்தவ பாதுகாப்பு அமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சி.எஸ்.ஐ ஈரோடு சேலம் திருமண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் ஏராள மானோர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, மணிப்பூரில் நடைபெற்று வரும் தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலயங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. எனவே அங்கு நடைபெறும் மத கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும். மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 348 சிறுவர்கள், 161 சிறுமிகள் என மொத்தம் 509 பேர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
- பின்னர் அனைவரையும் பத்திரமாக போலீசார் அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி அறிவுரை யின்படி சேலம் சரகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளில் இருந்தும் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மன்றம் மூலமாக இதுவரை 348 சிறுவர்கள், 161 சிறுமிகள் என மொத்தம் 509 பேர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை, மேட்டூர் அணை பூங்கா, ஏற்காடு, கொல்லிமலை, கிருஷ்ணகிரி அணை, ஒகேனக்கல் ஆகிய இடங்களுக்கு இன்ப சுற்றுலாவாக அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்குள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்று போலீசார் காண்பித்தனர். பின்னர் அனைவரையும் பத்திரமாக போலீசார் அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
- பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு
- பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் 2-வது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயன டையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா
- அடுத்த மாதம் 7-ந்தேதி சக்தி அழைப்பும், 9-ந்தேதி முதல் 11 -ந்தேதி பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டா டப்படுகிறது.
இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிப்படுவார்கள். இதைத்தவிர, கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகு குத்தி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோவிலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தால் கோவிலில் பொங்கல் வைபோகம் நிகழ்ச்சி மட்டுமே நடை பெற்று வருகிறது. தற்ேபாது கோவிலில் 85 சதவீத திருப்பணிகள் நிறை வடைந்துள்ளது.
இந்த நிலையில் நடப் பாண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந்தேதி இரவு பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் 7-ந்தேதி சக்தி அழைப்பும், 9-ந்தேதி முதல் 11 -ந்தேதி பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.
15-ந்தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
இதேபோல் சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திரு விழா முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.
- 16 வயதுடைய சிறுமி கள் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்இருவரும் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்த புறப்பட்டு சென்றவர்கள் மாலை வீடு திரும்பவில்லை.
- சேலம் மாநகரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீசாருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டது.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி கள் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
நேற்று காலை சிறுமிகள் இருவரும் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்த புறப்பட்டு சென்றவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், மகள்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
பின்னர், நேற்று இரவு இது குறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் சிறுமிகள் வைத்திருந்த செல்போனை கண்காணிக்க தொடங்கினர். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் மாயமான சிறுமிகளின் செல்போனில் இருந்து, இன்ஸ்டாகிராமில் சேலத்தில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து மாயமான சிறுமிகள் குறித்து சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சேலம் மாநகரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீசாருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டது. இதனால் உஷாரான போலீசார், சேலம் முழுவதும் மாணவிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில், பள்ளப்பட்டி சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள் சேகர் மற்றும் சண்முகம் ஆகியோர் ரோந்து பணியில் இருந்தபோது, அங்கிருந்த ஒரு ஹோட்டல் முன்பு நின்றிருந்த 2 சிறுமிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் நாகர்கோவி லில் மாயமான சிறுமிகள் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 சிறுமைகளையும் பத்திரமாக மீட்ட போலீசார், இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராஜா விற்கும், சிறுமிகளின் பெற்றோ ருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சிறுமிகளின் பெற்றோர்கள் மற்றும் போலீசார் சிறுமிகளை அழைத்துச் செல்ல சேலம் வந்து கொண்டி ருக்கிறார்கள். மேலும் இந்த சிறுமிகள் எதற்காக வீட்டிலிருந்து வெளியேறினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க தேசிய தேர்வு முகமையானது நுழைவுத் தேர்வு
- நடப்பாண்டு தேசிய தேர்வு முகமையானது ஜே.இ.இ. முதன்மை தேர்வை நடத்தியது.
சேலம்:
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க தேசிய தேர்வு முகமையானது நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. அதில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு நாட்டில் உள்ள சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அதன்படி நடப்பாண்டு தேசிய தேர்வு முகமையானது ஜே.இ.இ. முதன்மை தேர்வை நடத்தியது.
இதில் சேலம் அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். அதில் 10 மாணவ- மாணவிகள் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெறும் வகையில் இம்மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அட்வான்ஸ் தேர்வில் சத்திய பிரியா, சாய்நாத், வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி.யில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதில் சிறப்பு திட்டங்களுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் சேலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்த மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற ேஜ.இ.இ தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2019-ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வரு கிறது.
- மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவி தொகைகள்
சேலம்:ஜிபேட் (கிராஜுவேட் பார்மசி ஆப்டிட்யூட் டெஸ்ட்) என்பது எம்.பார்ம் படிப்பில் நுழை வதற்கான அகில இந்திய அளவில் மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வா கும். இந்த நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான கல்வி தகுதி பி.பார்ம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 2018 -ம் ஆண்டு வரை இந்த தேர்வை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் நடத்தியது. 2019-ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வரு கிறது.
ஜி பேட் தேர்வு 3 மணி நேர கணினி அடிப்படை யிலான ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க அட்மிஷன் பெற லாம். மேலும் இம்மாண வர்களுக்கு படிக்கும் காலத்தில் மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவி தொகைகள் வழங்கப்படு கிறது.
இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜிபேட் நுைழவு தேர்வு-2023 கடந்த மே மாதம் 22-ந்தேதி நாடு முழுவதும் 116 நகரங்களில் 221 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேசிய தேர்வு முகமையால் நடத்தப் பட்டது. மொத்தம் 68,439 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 62,275 பேர் தேர்வில் பங்கேற்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.பார்ம் பட்டதாரி கள் பலர் பங்கேற்று இந்த தேர்வை எழுதினர்.
அனைத்து மையங்களி லும் 4812 கேமராக்கள் மூலம் நேரடி சிசிடிவி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையங்களில் 991 ஜாமர்கள் பொருத்தப்பட் டது. 235 பார்வையாளர்கள், 116 நகர ஒருங்கிணைப்பா ளர்கள், 18 பிராந்தியம் ஒருங்கிணைப்பாளர்கள், 2 தேசிய ஒருங்கிணைப்பா ளர்கள் மேற்பார்வையிட நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஜிபேட் நுழைவு தேர்வு முடிவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து தங்களது மதிப்பெண்களை பார்வையிடலாம். மேலும் அவற்றை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார்.
- பிளஸ்-2 பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் .
சேலம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கல்பாரப்பட்டி செவ்வாய்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். தறி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு பூங்கொடி மற்றும் அமுதா ஆகிய 2 மகள்கள். இதில் இளைய மகள் அமுதா, மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி தன்னுடைய மாமியார் வீட்டுக்கு செல்வதற்காக வெங்கடாசலம், தனது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகியோரை அழைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் மல்லூருக்கு சென்று விட்டு திரும்பியபோது கார் மோதி விபத்துக்குள்ளாகி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். பிளஸ்-2 பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் . ஆனால், பெற்றோரை இழந்ததால் அவரால் மேற்படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் பலரிடமும் உதவி கோரினார்.
இதுபற்றி அமுதா உருக்கமாக கூறியதாவது:-
கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அப்பா, அம்மா, அக்கா 3 பேருமே விபத்தில் இறந்துட்டாங்கா. எனக்கு உடல் சார்ந்த பிரச்சனை சின்ன வயதில் இருந்தே இருக்கு. நான் அதையும் மீறி படிக்கணும் என நோக்கமாக இருந்தேன். எனக்கு படிக்கணுங்கிற ஊக்கம் கொடுத்தது முதலில் உலகத்திலேயே ரொம்ப முதல் ஆசிரியர் யாருனு கேட்ட அப்பா, அம்மா என சொல்வேன்.
பள்ளிக்கு அக்கா தான் என்னை கூட்டிட்டு போயிட்டு வருவாங்க. நான் ரொம்ப சிரமப்பட்டு இருந்தேன் . அப்புறமாக நான் மெடிசன் எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போய் பார்த்தோம். அதற்கு அப்புறம் கொஞ்சம் சரியாயுடுச்சு.
அதற்கு அப்புறம் படிப்பு நல்லா தொடர முடிஞ்சுது. இப்ப நான், 11, 12-ம் வகுப்பு இரண்டுலையும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து இருக்கேன். ஆனாலும் இப்ப அந்த சந்தோஷத்தை கொண்டாட யாரும் இல்ல. கல்வி தொடரணும். கிரீன் இங்க்-ல சைன் போட்டு ஏழைகளுக்கு உதவனுங்கிறது தான் 3 பேருடைய ஆசையாக இருந்தது.
எனக்குனு என்னுடைய குடும்பத்தில யாரும் இல்லனாலும் குடும்பத்தில் ஒருத்தரா அரசு முன்வந்து உதவி செய்யணும் என எதிர்பார்க்கிறேன். இப்போது என்னுடைய ஆசை நிறைவேற்றனுன்னா தயவு செய்து அரசு தொடர்ந்து உதவி செய்யணும். இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு கல்லூரியில் சேர உதவி செய்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவி அமுதாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவியை நேரில் அழைத்து அவருக்கு கலெக்டர் கார்மேகம் ஆறுதல் தெரிவித்ததோடு, வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாகவும், மருத்துவ செலவு, கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான செலவை ஏற்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் மாணவிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டிக் கொள்ள வீரபாண்டி கல்பாரப்பட்டியில் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைக்கான ஆணையை நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் கார்மேகம் வழங்கியதோடு, வீடு கட்டிக்கொள்ள போதுமான நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.
இதை தொடர்ந்து மாணவி அமுதா, தன்னுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
- அழகாபுரம், அயோத்தியாபட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் 86 இடங்களில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 58 கோடி மோசடி நடந்தது.
- அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் அயோத்தி யாபட்டினம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் ரூ.2.92 லட்ச முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை.
சேலம்:
சேலம் அழகாபுரம், அயோத்தியாபட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் 86 இடங்களில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 58 கோடி மோசடி நடந்தது.
அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் அயோத்தி யாபட்டினம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் ரூ.2.92 லட்ச முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. பாதிக்கப்பட்ட அவர் சேலம் பொருளாதார குற்றப்பிரி வில் புகார் அளித்தர்.
விசாரணையில் மோசடி அம்பலமானதால் சங்க தலைவர் ஜெயவேல் (வயது 67), கணக்காளர் கண்ணன் (27), இயக்குனர் தங்கப்பழம் (43) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கடந்த 23-ந் தேதி அயோத்தி யாபட்டினத்தை சேர்ந்த சங்க இயக்குனர் சரண்யா (31) கைது செய்யப்பட்டார். அவரை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை டான் பிட் நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டனர்.
நேற்று 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி செந்தில்குமார் உத்தர விட்டார். இதையடுத்து சரண்யாவை சேலம் அழைத்து வந்து போலீசார், விசாரணை நடத்தி வரு கிறார்கள். விசாரணை முடி வில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்ப தால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்க மாக உள்ளது.
- இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
சேலம்:
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி முதல்-அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோ றும் ஜூன் 12-ந் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்க மாக உள்ளது. இந்த ஆண் டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரை நம்பி டெல்டா விவசாயிகள் தற்போது, சுமார் 5 லட்சம் ஏக்கர்களில் நடவுப்பணி மற்றும் நேரடி நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை பொழியாததாலும், அணை யில் இருந்து பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி தன்ணீர் திறந்துள்ளாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது.
குறுவை சாகுபடிக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேவைப்படு கிறது. கடந்த சில ஆண்டு களாக ஜூன் மாதம் கர்நா டகாவிலும், தமிழகத்திலும் பருவமழை இயல்பாக பெய்ததால், குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு அணையில் இருத்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முழுமையாக கடைமடை வரை சென்று சேரவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவ தால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்று டெல்டா விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.
காவிரி நதி நீர் ஆணை யத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.1 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இதை வழங்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக நீர் பாசனத்துறை மந்திரி சிவகுமார் பிடிவா தமாக பேசி வருகிறார்.
காவிரி நதி நீர் ஆணை உத்தரவுப்படி இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்க வேண் டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கி னால்தான், தமிழக டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.
எனவே காவிரி டெல்டா விவசாயிகளன் நலன் கருதி, தமிழக முதல்-அமைச்சரும், நீர்ப்பாசன அமைச்சரும், கூட்டணி கட்சியான காங்கி ரஸ் ஆட்சி செய்யும், கர்நா டகா அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, காவிரியில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் தரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- தென்கரை பகுதியில் கடையில் மது குடிக்க அனுமதித்த பெண் கைதானார்.
- அங்கு பதுக்கி வைக்கப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள தென்கரை பகுதியில் பீடா கடையுடன் சேர்த்து சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் முனியம்மாள் (வயது 40). இவர் கடையில், மது குடிக்க அனுமதிப்பதாக வீரகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார், அந்த கடையில் சோதனை நடத்தியதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்படடது. இது தொடர்பாக முனியம்மாளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் தேர்விற்கான நேர்காணல் நடைபெறுகிறது.
- சேலம் தலைமை அஞ்சலகம் மூன்றாவது தளத்தில் உள்ள கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சேலம்:
சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் வருகிற 7-ந் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் தேர்விற்கான நேர்காணல் நடைபெறுகிறது.
எனவே, ஆர்வம் உள்ள அனைவரும் அன்றைய தினம் சேலம் தலைமை அஞ்சலகம் மூன்றாவது தளத்தில் உள்ள கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது, கல்வி சான்றிதழ், ஆதார், பான் கார்டு நகல் மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்கா ணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலில் பங்கேற்க 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த நேர்காணலில் ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சேலம் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் பணி புரிய வேண்டும். மேலும், ரூ.5 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். நேரடி முகவர்கள் நியமனம் இலாகா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளரின் முடிவே இறுதியானது.
இந்த தக வலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்து உள்ளார்.






